Saturday, December 12, 2009

உடலுறவுக்கு பாதுகாப்பான காலம்

எந்த விதமான பாதுகாப்பு( கர்ப்பத்தடை) முறைகளும் பாவிக்காமல் உடலுறவு கொண்டாலும் குழந்தை உருவாக்குவதற்குரிய சந்தர்ப்பம் குறைந்த காலம் SAFE PERIOD எனப்படும். இந்தக் காலம் என்ற சொல் குறிப்பது பெண்ணின் மாதவிடாய்ச் சக்கரத்தில் இருக்கின்ற காலமாகும்.

ஒரு பெண்ணின் மாதவிடாய்ச் சக்கரமானது , எத்தனை நாட்களுக்கொருமுறை அவளின் மாதவிடாய் அடைகிறாள் என்பதாகும்.

அதாவது ஒரு தடவை மாதவிடாய் தொடங்கும் நாளுக்கும் அடுத்தமுறை மாதவிடாய் தொடங்கும் நாளுக்கும் இடையே உள்ள மொத்த நாடகளுமே அவளின் மாதவிடாய்க் காலமாகும்.

இன்னும் இலகுவாகச் சொல்வதானால் ஒரு பெண்ணின் இரண்டு மாதவிட்டய்களை எடுத்துக் கொண்டோமானால் அந்த இரண்டு மாதவிடாய்களும் தொடங்கிய முதல் நாட்களுக்கிடையே இருக்கும் காலம் அவளின் மாதவிடாய்க் காலமாகும். ஒவ்வொரு பெண்ணும் தங்களுக்குரிய இந்தக் காலப் பகுதியை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

இந்தக் காலப்பகுதி பெண்களுக்கு பெண்கள் வேறுபடலாம். பொதுவாக இந்தக் காலப்பகுதி 21 - 31நாட்களுக்கிடையே இருக்கும்.

இந்தக் காலப்பகுதியின் குறிப்பிட்ட நாட்களே ஒரு பெண் கர்ப்பம் தரிப்பதற்கு தயாரான நிலையில் இருப்பாள் , இதைத் தவிர்த்து மற்றைய நாட்களில் உடலுறவில் ஈடுபட்டாலும் அவளால் கர்ப்பம் தரிப்பதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவாகும்.

இந்தக் கர்ப்பம் தரிக்கக் குறைவான காலமே safe period எனப்படுகிறது. இதை எப்படிக் கணிக்கிறது என்று பார்ப்போம்.

இதற்கு முதலில் அந்தப் பெண் தனக்கு ஏற்படுகின்ற மாதவிடாய்களின் தினங்களை சில மாதங்களுக்கு குறித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒவ்வொரு மாதவிடாய்க்களுக்கும் இடைப்பட்ட நாட்களை கணித்துக் கொள்ள வேண்டும். எல்லா மாதவிடாய்களுக்கும் இடையேயான காலம் நிச்சயமாக ஒரே அளவாக இருக்காது.

இந்த காலப்பகுதிகளின் ஆகவும் குறைந்த நாட்களைக் கொண்ட காலப் பகுதிகளில் உள்ள நாட்களில் இருந்து 18 நாட்களைக் கழித்து வைத்துக் கொள்ளுங்கள் .
உதாரணத்திற்கு அவளின் இரண்டு மாதவிடாய்களுக்கு இடைப்பட்ட குறைந்த இடைவெளி 26 நாட்கள் எனில் இந்த 26 யில் இருந்து 18 யை கழித்துக் கொள்ள வருவது 8.

அடுத்து அவளின் மாதவிடாய்களுக்கு இடைப்பட்ட அதி கூடிய காலத்தில் இருந்து 10 நாட்களைக் கழித்துக் கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு அவளின் மாதவிடாய்களுக்கிடையே உள்ள அதி கூடிய காலம் 31 நாட்கள் என்றால் அதிலிருந்து 10 நாட்களைக் கழித்துக்கொள்ள வருவது 21.


இனி வரப்போகின்ற மாதவிடாய் தொடங்கும் நாளை முதல் நாளாகக் கொண்டால் அவளுக்கு அந்த முதல் நாளில் இருந்து 8 வது நாளுக்கும் 21வது நாளுக்கும் இடைப்பட்ட காலப்பகுதி கர்ப்பம் தரிக்கும் சந்தர்ப்பம் அதிகம் கொண்ட நாடகளாகும். இது தவிர்ந்த மற்ற நாட்களில் எந்தப் பாதுகாப்பும் இன்றி உடலுறவு கொண்டாலும் கர்ப்பம் தரிப்பதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவாகும்.

இந்த 8 தொடக்கம் 21 நாட்களுக்கிடைப்பட்ட காலம் fertile period எனப்படும்.
அதாவது கர்ப்பம் தரித்தளுக்கு தயாரான காலம். மீதமிருக்கும் காலம் safe period எனப்படும்.


குழந்தை உருவாக தாமதமாகும் தம்பதியினர் இந்தக் காலப்பகுதியில் அதிகம் உறவில் ஈடு படும் போது அவர்களுக்கு குழந்தை உருவாகும் சந்தர்ப்பம் அதிகமாகும்.

குழந்தை வேண்டாம் அல்லது பிற்போட வேண்டும் என்று நினைக்கும் தம்பதியினர் இந்தக் காலப் பகுதியை தவிர்த்து மற்றைய காலப் பகுதிகளில் உறவில் ஈடுஇவ்வாறு உங்களுக்குரிய கர்ப்பம் கர்ப்பம் தரிக்கும் காலம் மற்றும் பாதுகாப்பான காலத்தை உங்கள் மாதவிடாய்க் காலப்பாதியை சரியான முறையில் குறித்து மேலே சொன்ன முறையில் கணித்துக் கொள்ளுங்கள் .
படலாம்.

பி .கு- இது மாதாமாதம் சரியாக மாதவிடாய் ஏற்படுகின்ற பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இப்படியான இடுகைகள் தொடர்வது நல்லது என்று நினைத்தால் மேலே சென்று வாக்களித்துச் செல்லுங்கள்.



16 comments:

Chittoor Murugesan said...

நண்பரே,
நல்ல முயற்சி . மென்ஸ்ட்ருவல் சைக்கிள் ஒழுங்காக அமைந்தாலல்லவா இந்த முறை. இந்த ஜெனரேஷனில் எந்த பெண்ணுக்கு இது அமைகிறது /அமையப்போகிறது

Nowfal said...

good useful post.

குசும்பன் said...

பயன் உள்ள பதிவு

//8 வது நாளுக்கும் 21வது நாளுக்கும் இடைப்பட்ட காலப்பகுதி கர்ப்பம் தரிக்கும் சந்தர்ப்பம் அதிகம் கொண்ட நாடகளாகும். //

8 ல் இருந்து 21 நாட்கள் கொஞ்சம் கஷ்டம்தான்:)

நிகழ்காலத்தில்... said...

குழந்தைப்பேறு தாமதம் ஆகிறவர்களுக்கு இந்த விவரங்கள் உதவியாக இருக்கும்.

8-21 க்குள் சேரலாம்,

மற்றவர்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது உகந்தது என நான் நினைக்கிறேன்.

நாம எல்லாருமே குசும்பன் மாதிரி தானே :))

துமிழ் said...

நன்றி நண்பர்களே !

இது கருத்தடை வழிமுறைகளை பாவிக்க விருப்பம் இல்லாதவர்களுக்காகவே !
நம்ம குசும்பன் போன்ற குசும்பானவர்களுக்குத்தானே நிறைய வழிமுறைகள் இருக்கின்றன...

ரோஸ்விக் said...

எனக்கு இது குறித்து முன்பே தெரிந்திருந்தாலும் இது பலருக்கும் பயன்படட்டும். :-)

தாராபுரத்தான் said...

உபயோகப்படும் பதிவு,,,

குமரன் said...

நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். சொன்னபடி ஓட்டும் போட்டுவிட்டேன்.

வேண்டாம் என்பவர்கள், நாள்கள் கணக்கிட்டு... நிறைய தெறமை தேவைப்படுது.

Anonymous said...

உங்களுடைய இடுக்கைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கலாமா?

திருமணமான தம்பதியர் தங்களின் தாம்பத்தின்போது பெண்ணுக்கு உச்சக்கட்டத்தில் திடீரென தலைவலி வருகிறது இது எதனால்?
இவர்களுக்கு மணமாகி 20 ஆண்டுகளுக்கும் அதிகம்.
இந்த தலைவலி சமீப ஒருமாதகாலமாக இருக்கிறது. தாம்பத்ய உறவு அல்லாத சமயங்களில் தலைவலி வருவதில்லை.
ஏன் எதனால் என்பதை கூறமுடியுமா?

- வரதராஜன்

Muhammad Ismail .H, PHD, said...

@ அனைவருக்கும் !!!


அடடா, இதைத்தான் நம்ம வள்ளுவர்

"எண்ணித்துணிக கருமம். துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு"

என திருக்குறளில் தனது குரலை விட்டு சென்றார். நம்ம மொக்கைகள் இந்த குறளை சரியாக வகையில் (காமத்துப்பால்) வைக்காமல் வேறு வகையில் வைத்ததால் இது யாருக்கு புரியாமல் போயிற்று. சரி இப்ப புரிஞ்சுதில்ல ? ஆவுறத பார்ப்போம்.


மூடு வந்த பிறகு விரல் விட்டு நாட்களை எண்ணி வேலைய ஆரம்பிப்பதற்கு இடையில் மூடே இல்லாமல் போக கூடிய அபாயங்கள் உண்டு. அந்த நேரத்தில் விரலுக்கு வேற வேலையே இல்லையா என்ன? ஏய் யார்ரா அது சிரிக்கிறது !, சொல்ல வந்தத முழுதா சொல்லவிடுங்கப்பா !!!

இப்ப நம்ம எல்லார் கிட்டயும் "செல்போன் - செல்லிடபேசி" இருக்கும் . இப்பலாம் "செல் இல்லாத மனிதன் செல்லாத மனிதனாம்" அதில் பெரும்பாலானவைகளில் (சைனா போன்களை தவிர்த்து, இதனால் தான் சைனாவில் அந்த அளவு கூட்டம். இப்ப புரிஞ்சுதா !!) ஜாவா-Java ஆதரவு உண்டு. அதில் கீழே சுட்டியில் உள்ள MyGirls (மடையன், பன்மையில் பெயர் வைத்திருக்கிறான், அவன் ஊர் கலாச்சாரம் அப்படி, சரி விடுங்க)எனும் ஜாவா மிட்லெட்டை உங்களின் செல்லிட பேசியில் இன்ஸ்டால் செய்துவிட வேண்டியது தான்.

பிறகு அதில் உங்களின் மனைவி பெயரை மட்டும் (ரீப்பிட்டு --- மனைவி பெயரை மட்டும்) உள்ளீட்டு பிற தேவையான தகவல்களை கொடுத்தால் அது பாட்டுக்கு நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும். நாம 'கருமம்' பண்ண முயற்சிக்கும் போது கையில் செல்லிட பேசியை எடுத்து இதை இயக்கி ஒரு பார்வை பார்த்தால் வண்ணமயமாக இதில் தகவல் கிட்டும். அதை வைத்து அன்றைக்கு பால் பாயசம் சாப்பிடும் போது 'நாக்கில்' ரப்பர் மாட்ட வேண்டுமா அல்லது வேண்டாமா? என முடிவு செய்து கொள்ளலாம். (இந்த பால் பாயசம்/ரப்பர் சிந்தனை நம்ம "லதானந்த்" அங்கிளுக்கு உரியது. புகழனைத்தும் அவருக்கே !!!)

மென்பொருள் சுட்டி -http://www.getjar.com/mobile/48/mygirls/

ஆதரவு உள்ள செல்லிடபேசிகள் -
http://www.getjar.com/mobile/48/mygirls/?s=phones (சைனா போன்கள் பொதுவாக வேலைக்காவது, அதுவும் MTK எனும் பிளாட்பார்ம் ரொம்ப சுத்தம்)

பின் குறிப்புகள் :-

1. மனைவி அல்லது துணைவியர்களின் தகவல்களையும் உள்ளீட்டு நாட்களை எண்ணலாம். மற்ற பெண்களின் தகவல்களை உள்ளீட்டு ஆராய்ந்து அடி வாங்கினால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல !!!. (மென்பொருள் உருவாக்கிய நபரிடம் சொல்லி 4 க்கு மேல் இல்லாம ஆக்கணும், நம்ப ஆளுங்களை நம்ப முடியாது. எதையும் தவறாக உபயோகிக்க இவர்களுக்கு ஈடு இணையே இல்லை)

2. இதை இன்னும் அழகாக, காதலுடன் ரொமான்டிக்காக உபயோகிக்கலாம். மாதவிடாய் தீட்டு வர வாய்ப்புள்ள இரு நாட்களுக்கு முன்னரே ஒரு பொட்டலம் நாப்கின் + சில தயிர் பாக்கட் வாங்கி வந்து உங்களின் மனைவியிடம் கொடுத்து விட்டு 'உனக்கு ரெண்டு நாளில் டேட்ஸ், ஆகவே கஷ்டபடக்ககூடாதே என்று தான் முன்னரே நாப்கின் வாங்கிவந்துவிட்டேன். அன்னைக்கு ரொம்ப சிரமமாக இருக்கும். அதனால் வெறும் சாதம் மட்டும் வைத்துவிடு. இந்த தயிரே போதும் என்று நீங்கள் சொல்லிவிடுங்கள்.பிறகு உயிர் போகும் வரை இதை உங்களின் மனைவி மறக்க மாட்டாள். தயிருக்கு இந்த இடத்தில் அவ்வளவு மதிப்பு. மேலும் இது உங்களையும் அந்த நேரத்தில் அமைதி படுத்தும் (ஒரு கேள்வி - நான் நாப்கினை வாங்கும் போதெல்லாம் அதை மட்டும் தனியாக ஒரு ஒளி புகாத கருப்பு நிற கேரி பேக்கிலோ, அல்லது வேறு ஒரு தாளிலே மறைவாக சுருட்டி தருகிறார்கள் ? ஏம்பா இந்த வேலை ? பதில் இருக்கா உங்களிடம் ? இதை அசுத்தம் என கருதியா ? அப்படினா நாம எல்லோரும் இந்த அசுத்தமானவையிலிருந்து வந்தவர்கள் தானோ? மாத விடாய் தீட்டு வர காரணமே கர்ப்ப பையில் காத்திருந்த பெண்ணின் முட்டையானது ஆணின் விந்துவுடன சேராத காரணத்தினால் தான் தீட்டாக வெளியேறுகிறது. சேர்ந்துவிட்டால் தீட்டு வராது. பிறகு இறைவன் நாடினால் அடுத்த 40 வாரத்தில் வாரிசுதான்)

3. இறுதியாக ஒன்று .இது வரைக்கும் இந்த மென்பொருள் 391,123 முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் நாங்க எல்லோரும் சேர்ந்து இதையும் எண்ணுவோம்ல !!!


with care & love,

Muhammad Ismail .H, PHD,
http://gnuismail.blogspot.com

Muhammad Ismail .H, PHD., said...

அன்பின் துமிழ்,

உங்களின் பதிவில் உள்ள மற்ற இடுகைகளையும் படித்தேன். மிக அற்புதம். தனிப்பட்ட முறையில் மருத்துவம் பற்றி மட்டுமே எழுதியிள்ள உங்களின் கடின உழைப்பு பாரட்டத்தக்கது. ஒரு இடுகையில் உங்களின் ஆற்றாமையையும் படிக்க நேர்ந்தது. அதற்கு கால தாமதமாகவேயானும் பதில் கூறவே இந்த பின்னூட்டம்.


பெரும்பாலோர் தங்கள் படித்த இடுகைக்கு பின்னூட்டமிடமாட்டார்கள். காரணம் சோம்பல் தான்(க்கும், என்னை போல் உள்ளவர்கள் பின்னூட்டமிட்டால் அது இடுகையை விட பெரிதாகி விடும் !!! அந்த அபாயத்தை தவிர்க்கவே பொதுவாக பின்னூட்டமிடுவதில்லை.)

இது போன்ற நல்ல இடுகைகளுக்கு யாருக்கும் "டெம்ளேட் பின்னூட்டமிட" மனசு வராது. :-) ஆகையால் இடுகைகளை அதற்கு வரும் பின்னூட்டங்களை வைத்து மதிப்பிடாதீர்கள். அது 5 பாண்டவர்களை விட 100 கௌரவர்களே நல்லவர்கள் என்பது போன்ற முட்டாள்தனம். ஆகவே தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். நன்றி.

with care & love,

Muhammad Ismail .H, PHD,
http://gnuismail.blogspot.com

Anonymous said...

Dear friend, Thank you very much for your effort to educate the society. In our culture related to sex, there is no sex education, what is it and why it happens? and what is remedy or solution for this? we don't know more about it and we feel very shy and afraid to share it. So this type of information is good to know the things. I request all our readers do and educate the society best in your field it maybe Agriculture,Medicine, Engineering,PWD, Admin,IT ..,any field.Surely we'll be the No.1 in the world. Start from us from today.

Anonymous said...

Madaviday Natkalinbothu uravu kolla koodatha naatkal evai??

Pragash said...

அன்புள்ள MOHAMED!
பல பயனுள்ள முக்கியமான விடயங்களை எழுதுகின்றீர்கள். ஆண் பெண் உடலியல் அமைப்புகளை அறியாவிட்டாலும் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்கவேண்டிவரும். தெளிவு பெறவேண்டிய விடயங்கள் தான். இது திருமணமானவர்கள் மட்டுமல்ல,புதிதாக திருமணம் செய்யப்போகின்றவர்களுக்கும் பயனுள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

Pragash said...

மன்னிக்க வேண்டும் துமிழ் எனது முதல் பின்னூட்டத்தில் தங்களின் பெயருக்கு பதிலாக MUHAMMED அவர்களின் பெயரை குரிப்பிட்டுவிட்டேன். நான் MUHAMMED அவர்களின் பதிவுகளை பார்வையிட்ட நேரங்களில் தங்களின் பதிவுக்கு எதிர்பாராமல் வர நேரிட்டதில் எனக்கும் மகிழ்ச்சி தான். முக்கியமான பல விடயங்களை அறிந்து கொண்டேன்.

akkuraan tamil said...

தற்செயலாக தங்கள் சைட்டுக்குவர நேர்ந்தாலும் மருத்துவம் பற்றி அறிய துடிக்கும் எனது ஆவலுக்கு மிக சரியான தேர்வு. பாலியல் குறித்த விழிப்புணர்வு வாழ்க்கையை சரியான போக்கில் கொண்டு செல்ல தம்பதியர்க்கு துணைபுரியும் என நம்பலாம். நன்றி

நிஃபா நேசன்