Showing posts with label அவசர கருத்தடை. Show all posts
Showing posts with label அவசர கருத்தடை. Show all posts

Friday, April 9, 2010

அவசர கருத்தடை

குடும்பக் கட்டுப்பாடு (family planing)என்பது ஒரு தம்பதியினர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப குழந்தைகளின் எண்ணிக்கையைத் தீர்மானித்துக்  கொள்ளுவதற்கும் , ஒவ்வொரு குழந்தைகளுக்குமானஇடைவெளியைத்  தீர்மானித்துக்
கொள்ளுவதற்கும் பயன்படுத்தும் முறைகளாகும்.பல்வேறு விதமான முறைகள் மூலம் இது மேட்கொள்ளப் படலாம்.

இது அவசர குடும்பக் கட்டுப் பாடு(Emergency contraception) எப்படி மேற்கொள்ளப் படலாம் என்பது பற்றிய இடுகையாகும்.

நீங்கள் அவசரப் பட்டு எந்த பாதுகாப்பும் இல்லாமல் உறவில் ஈடுபட்டு விட்டு குழந்தை பொருத்தமற்ற நேரத்த்தில் பிறந்து விடுமோ என்று அஞ்சும் நேரத்திலே மட்டும் பயன் படுத்தப் பட வேண்டிய முறையாகும்.அதாவது தொடர்ச்சியாக ஒவ்வொரு உறவின் பின்னும் பாவிப்பதற்கு இந்த முறை உகந்ததல்ல. அவ்வாறு தொடர்ச்சியாக பாவிப்பதற்கு வேறு முறைகள் உள்ளன.

சரி எப்படி இந்த அவசர குடும்பக் கட்டுப் பாடினை மேற்கொள்ளுவது என்று பார்ப்போம்.

இதற்காக பாவிக்கப் படும் மாத்திரைகளும் , தொடர்ச்சியான குடும்பக் கட்டுப் பாடு மாத்திரை போல ஹார்மொங்கலைத்தான்(Hormon) கொண்டுள்ளது. ஆனால் உறவின் பின் பாவிக்கும் அவசர கட்டுப்பாட்டுக்கு இந்த மாத்திரைகள் சற்று அதிகமான அளவிலே உட்கொள்ளப் பட வேண்டும்.

இந்த மாத்ஹ்டிரைகள் கொண்டிருப்பது  புரஜெஸ்ரோன் (progestron) ஈஸ்ரேஜென் (Estrogen) எனப்படும் ஹோர்மொன்களை ஆகும்.

அவசர கட்டுப் பாட்டுகாகவென விசேடமாக தயாரிக்கப் பட்ட மாத்திரைகள் இருக்கின்ற போதிலும் , தொடர்ச்சியான கட்டுப் பாட்டுக்கு நீங்கள் பாவிக்கும் மாத்திரைகளையும் நீங்கள் உட்கொள்ள முடியும்.

இந்த மாத்திரைகள் உறவில் ஈடுபட்டு 72 மணி நேரத்தினுள் உட்கொள்ளப் பட வேண்டும். அதுவும் 12 மணித்தியால இடைவெளியில் இரு முறை உட்கொள்ளப் பட வேண்டும்.

அதாவது உறவில் ஈடுபட்டு எவ்வளவு விரைவாக இந்த மாத்திரைகளை பாவிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக உட்கொள்ள வேண்டும்.  முதற் தடவை மாத்திரை எடுத்து 12 மணி நேரத்தில் இரண்டாவது மாத்திரை உட்கொள்ள வேண்டும்.

இதற்க்கான மாத்திரைகளை நீங்கள் வைத்தியரின் ஆலோசனை இல்லாமலேயே பார்மசிகளில் பெற்றுக் கொள்ள முடியும்.

உங்களிடம் தொடர்ச்சியாக பாவிக்கும் குடும்பக் கட்டுப்பாடு மாத்திரைகள் இருக்குமானால் அவற்றையும் நீங்கள் பாவிக்க முடியும். அந்த மாத்திரைகளில் நான்கினை ஒருவேளை உட்கொண்டு மீண்டும் 12மணி நேரத்தில் நான்கு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இந்த மாத்திரைகளில் நான் மேலே சொன்ன இரண்டு ஹோர்மோன்களும் உள்ளன.

அது தவிர புரஜெஸ்ரோன் என்ற ஹோர்மோனை மட்டும் கொண்ட மாத்திரைகளும் பாவிக்கலாம். அதன் அளவானது ஒவ்வொரு மாத்திரை 12மணி நேர இடைவெளியில்.

குறிப்பாக பாலியல் வல்லுறவுக்கு உட்பட்ட பெண்கள் யாரையாவது தெரிய வரும் பட்சத்தில் உடனடியாக இந்த மாத்திரைகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

மேலும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்....