கேள்வி
டாக்டர் ! நீங்கள் ஒரு பதிவில் குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று எழுதி
இருந்தீர்கள். நான் இருக்கும் நாட்டில் மூன்ருமாதத்திலேயே வேலைக்குப் போக வேண்டும். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
புட்டிப்பால் கொடுத்தால் குழந்தைக்குப் பிரச்சினை ஏதாவது ஏற்படலாமா?
பதில்
நீங்கள் வேலைக்குப் போவதால் புட்டிப் பால்தான் கொடுக்க வேண்டும் என்றில்லை இல்லை.நீங்கள் வேலைக்குப் போகும் நாட்களில்
உங்கள் தாய்ப்பாலை ஒரு சுத்தமான கண்ணாடிப் பாத்திரத்திலேயே எடுத்து(கறந்து ) வைத்து விட்டுப் போங்கள்.
வீட்டிலேயே குழந்தையை பார்த்துக் கொள்பவர்களை புட்டிப் பாலுக்குப் பதிலாக உங்கள் தாய்ப்பாலைக் கொடுக்கச் சொல்லுங்கள்.
தாய்ப்பால் குளிரூட்டி இல்லாமல் நான்கு மணிநேரம் வரை பழுதடையாமல் இருக்கும்.
குளிரூட்டியில் வைத்தால் பல வரங்கள் வரை பழுதாகாமல் இருக்கும்.
அதே நேரம் தாய்ப்பாலை deep freezer யில் வைத்தால் பல மாதங்கள் வரை பழுதாகாமல் இருக்கும்.
அதனால் வேலைக்குப் போவதொன்றும் தாய்ப்பால் கொடுப்பதற்கான தடை அல்ல.
Showing posts with label தாய்ப்பால். Show all posts
Showing posts with label தாய்ப்பால். Show all posts
Tuesday, November 30, 2010
Monday, November 29, 2010
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை
குழந்தைக்கு ஒரு நாளைக்கு எத்தனை தடவை தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
பிள்ளை பசியெடுத்து அழுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொடுங்கள். எத்தனை தடவை கொடுக்க வேண்டும் என்று வரையறை இல்லை. குழந்தைகளின் இரப்பை மிகவும் சிறியது என்பதால் அதிகமான உணவை ஒரே தடவியில் ஏற்று சமிபாடு அடையச் செய்ய முடியாது. அதனால் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொடுக்க வேண்டும்.
எவ்வளவு காலத்திற்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்?
இதற்கும் வரையறை இல்லை .எத்தனை வருடத்திற்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். எந்தப்பாதிப்பும் ஏற்படாது. ஆனாலும் முதல் 5-6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆறு மாத முடிவில் தாய்ப்பாளினால் தனியே குழந்தைக்குரிய போசாக்கினை வழங்க முடியாது போவதால் மற்றைய உணவுகளை ஆரம்பிக்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண் கர்ப்பம் தரித்தால் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாமா?
நிச்சயமாக .அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்வது எப்படி?
தொடர்ச்சியாக தாய்ப்பால் கொடுக்கவேண்டும். குழந்தை மார்பகத்தை உறிஞ்சும் போதே தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.அதுதவிர தாய் போதியளவு நீராகாரம், பழ ரசம் போன்றவை அருந்த வேண்டும்.
தொடரும்.....
Monday, September 6, 2010
குழந்தை வைத்திருப்பவர்களுக்காக !
கேள்வி
எனக்கு எட்டு மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. குழந்தை பிறக்கும்போது தாய்ப்பால் இல்லாததால் புட்டி பால் கொடுத்தேன். டாக்டர் எனக்கு "lactonic " தந்தார். அதன் பிறகு பால் சுரந்தாலும் குழந்தை குடிக்க வில்லை. தனியாக கறந்து கொஞ்சம் குடிக்க வைத்தேன். நான் நேரிடையாக தர முயற்சித்தால் குழந்தை பயங்கரமாக கத்தி அழுகிறது. சில பேர் கத்தினாலும் பரவாயில்லை, பட்டினி போட்டாவது தாய்ப்பால் குடிக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறுகிறார்கள். சிலரோ குழந்தையை கத்தவிடாதீர்கள் அதனால் இதயம் பாதிப்பு அடையும் என்கிறார்கள்.
3. தற்பொழுது தாய்ப்பால் சுரக்கவில்லை. சுரக்கவைக்க ஏதேனும் வழி உள்ளதா? மேலும் எத்தனை மாதம் வரை பால் சுரக்கும்?
4. தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன உணவு முறை கடை பிடிக்க வேண்டும்?
விரைவில் நல்ல பதிலை எதிர் பார்க்கிறேன்.
மிக்க நன்றி.
பதில்
ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. அதற்கான முக்கிய காரணம் அந்தக் காலப் பகுதியில் குழந்தைக்குத் தேவையான அனைத்துப் போசனைப் பதார்த்தங்களையும் தாய்ப்பால் வழங்குவதோடு குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியையும் தாய்ப்பால் வழங்குவதாகும்.
எனக்கு எட்டு மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. குழந்தை பிறக்கும்போது தாய்ப்பால் இல்லாததால் புட்டி பால் கொடுத்தேன். டாக்டர் எனக்கு "lactonic " தந்தார். அதன் பிறகு பால் சுரந்தாலும் குழந்தை குடிக்க வில்லை. தனியாக கறந்து கொஞ்சம் குடிக்க வைத்தேன். நான் நேரிடையாக தர முயற்சித்தால் குழந்தை பயங்கரமாக கத்தி அழுகிறது. சில பேர் கத்தினாலும் பரவாயில்லை, பட்டினி போட்டாவது தாய்ப்பால் குடிக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறுகிறார்கள். சிலரோ குழந்தையை கத்தவிடாதீர்கள் அதனால் இதயம் பாதிப்பு அடையும் என்கிறார்கள்.
1. நான் குழந்தை தாய்ப்பால் குடிக்க வைக்க என்ன செய்வது? வேறு வழிமுறை உள்ளதா?
2. குழந்தை பால் குடிக்காமல் இருக்க என்ன காரணம்?3. தற்பொழுது தாய்ப்பால் சுரக்கவில்லை. சுரக்கவைக்க ஏதேனும் வழி உள்ளதா? மேலும் எத்தனை மாதம் வரை பால் சுரக்கும்?
4. தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன உணவு முறை கடை பிடிக்க வேண்டும்?
விரைவில் நல்ல பதிலை எதிர் பார்க்கிறேன்.
மிக்க நன்றி.
பதில்
ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. அதற்கான முக்கிய காரணம் அந்தக் காலப் பகுதியில் குழந்தைக்குத் தேவையான அனைத்துப் போசனைப் பதார்த்தங்களையும் தாய்ப்பால் வழங்குவதோடு குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியையும் தாய்ப்பால் வழங்குவதாகும்.
ஆறுமாத காலத்தின் பின் தாய்ப்பால் தனியாக போசணையை குழந்தைக்கு வழங்கப் போதுமானதல்ல அதனால் மற்றைய உணவுகளையும் குழந்தைக்கு கொடுக்கத் தொடங்க வேண்டும்.
அந்த வேளையில் தாய்ப்பாலை தொடர்ந்தவாறே மற்றைய உணவுகளையும் கொடுப்பது சிறந்தது.
இருந்தாலும் நாளாக நாளாக குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தானாக ஏற்படத் தொடங்கி விடும்.
உங்கள் குழந்தைக்கு வயது எட்டு மாதம்மாகி விட்டபடியால் இனி கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றில்லை.
மற்றைய உணவுகளை போதுமான அளவுக்குக் கொடுப்பதோடு தாய்ப்பால் கொடுக்க முடிந்தால் கொடுங்கள்.
அதாவது இப்போது உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பாலை கொடுக்க முடியவில்லை என்று கவலைப் படுவதைவிடுத்து மற்றைய உணவுப் பதார்த்தங்களை கொடுப்பது நல்லது.அத்தோடு முடிந்தால் தாய்ப்பால் கொடுங்கள்.
பத்தினி போடுவதால் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் என்பதெல்லாம் மூட நம்பிக்கை.
எத்தனை வயதுவரை தாய்ப்பால் சுரக்கும் என்று கேட்டு இருந்தீர்கள் !
தொடர்ச்சியாக தாய்ப்பால் கொடுத்தால் பல வருடங்கள் வரை தாய்ப்பால் சுரக்கும்.தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் தாய் நன்றாக தண்ணீர், பழ ரசங்களை குடிப்பது தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும்.
உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
Friday, August 20, 2010
கர்ப்பிணி தாய்ப்பால் கொடுக்கலாமா?
கேள்வி
எனது மனைவி இப்போது கர்ப்பமாக இருக்கிறாள். ஆனாலும் எனது முதல் குழந்தைக்கு வயது .. அவன் இப்போது பால் குடித்துக் கொண்டிருக்கிறான். கர்ப்பமாக இருக்கும் என் மனைவி தொடர்ந்து பால் கொடுக்கலாமா?
பதில்
நிச்சயமாக கொடுக்கலாம் அதனால் குழந்தைக்கோ அல்லது தாய்க்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
Subscribe to:
Posts (Atom)