Wednesday, March 17, 2010

உடலுறவின் போது ஏற்படும் தலைவலி

ஒரு நண்பர் தன்  மனைவிக்கு உடலுறவின் போது தலைவலி வருவதாகவும் அதற்கு என்ன காரணம் என்றும் ஒரு பின்னூட்டத்திலே கேட்டிருந்தார்.

உண்மையில் உடலுறவின் போது தலைவலி ஏற்படலாமா?
ஆம். சில பேருக்கு உடலுறவின் போது தலைவலி ஏற்படலாம். இது coital cephalgia  எனப்படுகிறது. இது பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களிலே அதிகம் ஏற்படுவதாக தரவுகள் கூறுகின்றன. இதற்குரிய சரியான காரணம் தெரியாவிட்டாலும், உடலுறவின் போது அதிகம் குருதி உடலுறவுக்குத் தேவையான உடலின் பாகங்களுக்குச் செல்வதால் மூளைக்கு செல்லும் குருதியின் அளவு குறைவதால் இவ்வாறு தலைவலி ஏற்படலாம் என்று சொல்லப் படுகிறது.

சிலபேருக்கு இது  ஆரம்ப காலத்தில் மட்டும் இருந்து பின்பு மறைந்து விடலாம். சிலரில் இந்தப் பிரச்சினை தொடர்ச்சியாக இருக்கலாம்.

ஆரம்பத்தில் இவ்வாறு தலைவலி வரும்  போது நீங்கள் பரசிட்டமோல் போன்ற நோ நிவாரணிகளை பாவித்துப் பார்க்கலாம். ஆனால் தொடர்ந்து இது ஒரு பிரச்சினையாக இருக்குமானால் ஒரு வைத்தியரை நாட  வேண்டியது அவசியமாகும். ஏனென்றால் வெறுமனே இது உடலுறவின் பொது மட்டும் ஏற்படும் தலைவலியாக இல்லாமல்,வேறு காரணத்தால் ஏற்படுகிற தலைவலியாக கூட இருக்கலாம்.

குறிப்பாக தலையில்(மூளையில் ) ஏற்படுகிற கட்டிகளால் ஏற்படுகிற தலைவலியாக கூட இருக்கலாம்.

அதுதவிர தலைவலியோடு வாந்தி வருதல், வலிப்பு வருதால் அல்லது உடலுறவு தவிர்ந்த மற்றைய நேரங்களிலும் தலைவலி ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்தியரை நாடவேண்டியதுஅவசியமாகும்.

3 comments:

Anonymous said...

ஆணுறுப்பை சுற்றி தொடைகளின் இரண்டு பக்கங்களிலும் ஏற்படும் அரிப்பு பற்றி ஒரு பதிவிடுங்கள். பல ஆண்களுக்கு தேவைப்படும். உடற்சுத்தம் முக்கியம் தான். ஆனாலும் எவ்வளவு சுத்தமாக இருந்தும் அந்த அரிப்பு உண்டாகின்றது. அதற்கு வேறு காரணங்களும் இருக்கும் எண்டு நினைக்கின்றேன். வைத்தியரை நாடுவது நல்லதா?

பொது இடங்களிலும் இது சிக்கலை உண்டு பண்ணும். அது தவிர உடலுறவின் போது பெரும் பிரச்சனை ஆகும் என நினைக்கின்றேன். பெண்களுக்கு இவ்வாறு அரிப்பு ஏற்படுவதாக பெரிதாக கேள்விப்பட்டதில்லை. எனவே சுத்தம் மட்டும் இதற்கு காரணம் இல்லை என நினைக்கின்றேன்.

உங்கள் பதிலை பதிவாக எதிர் பார்கின்றேன். தொடர்ந்தும் நல்ல தகவல்களை தருவதற்கு நன்றி

செந்தில்குமார் said...

உங்கலுக்கு செந்தில்குமாரின் வணக்கங்கள்......

எப்படி இது சாத்தியமாகிறது உங்களால் மட்டும்

துமிழ் said...

senthilkumar said...

உங்கலுக்கு செந்தில்குமாரின் வணக்கங்கள்......

எப்படி இது சாத்தியமாகிறது உங்களால் மட்டும்//

thanks