Tuesday, March 9, 2010

கர்ப்பமான பெண்ணில் ஏன் மாதவிடாய் ஏற்படுவதில்லை?

மாதவிடாய் என்பது மாதா மாதம் ஒரு பெண்ணின் யோனிவழியே ரத்தம் வெளிவருகின்ற ஒரு செயன்முறை என்றே அநேகம் பேர் தெரிந்து வைத்து இருப்பீர்கள்.

உண்மையில் மாதவிடாய் என்றால் என்ன ?

கருத்தரிப்பதற்கு ஒரு பெண்ணை தயார் செய்யும் ஒரு செயமுறையின் விளைவே மாதவிடாய். கருத்தரித்தல் என்பது ஆண்களின் விந்து எனப்படும் உயிரணுவும் , பெண்களின் முட்டை எனப்படும் உயிரணுவும் ஒன்று சேரும் செயன்முறையாகும்.

ஆண்களைப் பொறுத்தவரை எந்த நேரத்தில் உடலுறவில் ஈடுபடும் போதும் விந்துகள் வெளியேறும்.

பெண்களிலே முட்டை உருவாகுவது உடலுறவின் போதல்ல. அவர்கள் பூப்படைந்த காலத்தில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை (அநேகமாக மாதம் ஒருமுறை ) இந்த முட்டைகள் உருவாகும்.

ஆண்களிலே விதைகள் விந்துகளை உருவாக்குவதைப்போல பெண்களிலே சூலகம் என்ற உறுப்பு இந்த முட்டைகளை உருவாக்கி வெளிவிடும். இந்த முட்டை வெளிவந்து மூன்று நாட்களுக்குள் ஒரு பெண் உடலுறவில் ஈடுபட்டு அவளின் யூனிவழியே விந்து உட்செலுத்தப்ப்படுமானால் அந்த முட்டை கருக்கடப்பட்டு குழந்தையாக விருத்தி அடையும்.
அவ்வாறு கருக்கட்டல் நடைபெற்றால் அந்தக் குழந்தையை தாங்கிக் கொளவதற்காக அவளின் கருப்பை சில ஆயத்தங்களை செய்யும். கருப்பையின் உடபகுதி நன்கு விருத்தியடைந்து ரத்த ஓட்டம் அதிகரித்து கருக்கட்டிய குழந்தை விருத்தியடையக்கூடிய ஒரு சூழல் உருவாக்கப்படும்.

இது மாதாமாதம் முட்டை வெளியேறும் போதெல்லாம் நடைபெறும். ஆனால் அந்தப்பெண் உடலுறவில் ஈடுபட்டு கருக்கட்டல் நடைபெறா விட்டால் விருத்தியடைந்த இந்த கருப்பையின் பகுதி பிரிந்து யோனிவழியே வெளியேறும்.
அப்போது உருவாகிய முட்டையும் வெளியேறும்.
இதுவே மாதவிடாய் எனப்படுகிறது.

மாறாக கருக்கட்டல் நடைபெற்றால் அந்த கரு விருத்தியடைந்த கருப்பையின் உடப்குதியில் ஒட்டிக்கொண்டு குழந்தையாக வளரத்தொடங்கும், இதனால் கர்ப்பமான பெண்ணில் மாதவிடாய் ஏற்படுவது தடைப்படும்.

3 comments:

Unknown said...

நல்லதொரு பதிவு துமிழ்! பகிர்வுக்கு நன்றி.எங்க கொஞ்ச நாளா பதிவுப்பக்கம் காணம்?

இ.அரவிந்த்

Muthu Kumar N said...

துமிழ் அவர்களே,

நல்ல தகவல், வளர்க உங்கள் சீ்ரிய பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

prabhadamu said...

நல்லதொரு பதிவு துமிழ்! பகிர்வுக்கு நன்றி.