Saturday, July 31, 2010

புதுமணத் தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்

கேள்வி 
வணக்கம் சார்,

நான் திருமணம் முடித்து 3மாதங்களாகிறது.கடந்த .. மாதமும் ஆணுறைகளை பாவித்தோம். இப்போது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நானும் எனது கணவரும் எண்ணியுள்ளோம்.நாங்கள் சுகமான கர்ப்பம் ஒன்றைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

இப்படிக்கு நன்றியுடன் ,
சாந்தி லட்சுமி


பதில்

நல்லது சகோதரி ,உங்களுக்கு மட்டுமல்லாது எல்லோருக்கும் பொதுவாக கர்ப்பம் தரிக்க எதிர்பார்த்திருக்கும் பெண்கள் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றேன்.

கர்ப்பம் தரிக்க எதிர்பார்த்திருக்கும் பெண்கள் செய்ய /கடைப்பிடிக்க வேண்டியவை!

1.இயற்கையான எந்த உணவுகளையும் விருப்பப்படி சாப்பிடலாம்.
2.செயற்கையான இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல்               நல்லது (சோடா போன்றவை)
3.பழுத்த அன்னாசி சாப்பிடுவதால் கர்ப்பத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை
4.போலிக் அசிட் எனப்படும் மாத்திரையை நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் விழுங்குவது நல்லது
5.பரசிட்டமோல் மாத்திரை விழுங்குவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது
6.வேறு எந்த மாத்திரை எடுக்கும் முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும்
7.எந்தவொரு மருத்துவப் பரிசோதனைக்கு (குறிப்பாக  எக்ஸ் -ரே ) முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும்.
8.இறுதியாக மாதவிடாய் ஏற்பட்ட நாளை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் 
9.உங்களுக்கு நீரழிவு, வலிப்பு ,ஆஸ்த்மா, பிரசர் போன்ற நோய்கள் இருப்பின் கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவை சிறந்த கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். 
10.மேலே சொன்ன நோய்களுக்கு மாத்திரைகள் பாவிக்கும் நபர் என்றால் கர்ப்பம் தரிக்கும் முன்னமே வைத்தியரிடம் கூறி கர்ப்பத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
11.கர்ப்பம் தரித்தவுடன் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை நிலையத்தில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பதிவு செய்து கொள்ளவும்.

உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

4 comments:

நிகழ்காலத்தில்... said...

முக்கியமாக ஆணுறை உபயோகிக்க கூடாது :)))))


பகிர்வுக்கு நன்றி

எதிர்காலத்தில்... said...

மருத்துவம் பேசுகிறது!
மருத்துவ ரீதியில் மிக நல்ல தம்பதிகள் சகலருக்கும் உபயோகமான கேள்வி - பதில் பதிவு... மிக்க நன்றி.


அப்புறம்...
/////Blogger நிகழ்காலத்தில்... said...
முக்கியமாக ஆணுறை உபயோகிக்க கூடாது :)))))
பகிர்வுக்கு நன்றி
July 31, 2010 9:10 PM/////

----இதைவிட முக்கியம் என்னன்னா....

மாதவிடாய் நின்ற மூன்று நாட்களுக்குப்பின் முதல் அடுத்த பதினைந்து நாட்கள் வரையிலாவது கண்டிப்பாக மறக்காமல் உடலுறவு கொண்டிருக்க வேண்டும்...!!!

:)))))

:)))))

Anonymous said...

பொதுவாக எந்த மருந்துகளும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.நல்ல உணவு உண்டு மகிழ்ச்சியுடன் சிரித்துப் பேசி இருப்பது நல்லது.மாதவிடாய் ஆரம்பித்ததிலிருந்து 7-15 நாட்களில் நல்ல உடலுறவு முக்கியம். ஆண்கள் உடலுறவு என்பது வேகமாக ஓட வேண்டியஓட்டப் பந்தயம் அல்ல.நன்கு பொறுமையாக அடக்கி அனுபவிக்க வேண்டியது என்பதை மறக்கக் கூடாது.

சண்முககுமார் said...

பகிர்வுக்கு நன்றி