Tuesday, November 3, 2009

ஆண்கள் எப்படி பூப்படைகிறார்கள் !

பெண்கள் பூப்படைதல் பற்றி ஒரு முந்திய இடுகையில் பார்த்தோம் இனி ஆண்களைப் பற்றி பார்ர்ப்போம்.
பெண்கள் பூப்படையும் காலம் . தொடக்கம் .. வரை. ஆனால் ஆண்கள் பூப்படையும் காலம் .. தொடக்கம் வரை.இங்கேயும் பெண்கள்தான் பெஸ்ட்.

பெண்கள் மார்பக முதிர்ச்சியோடு பூப்படைய ஆரம்பிப்பது போல ஆண்கள் விதிகளின் () முதிர்ச்சியோடு பூப்படைய ஆரம்பிப்பார்கள். விதைகள் சற்று பெரிதாகி முதிர்ச்சியடையத் தொடங்கும் , அத்தோடு ஆணுறுப்பும் சற்று பெரிதாகும்.

தொடர்ந்து பெண்களைப் போலவே ஆண்களிலும் குறிப்பிட்ட இடங்களில் மயிர் வளரும் குறிப்பாக பிறப்புறுப்புக்கு மேலே மற்றும் அக்குள் பகுதிகளில். ஆனால் பெண்களில் இருந்து வேறுபடும் முகமாக முகம் நெஞ்சுப் பகுதிகளிலும் ஆண்களுக்கு மயிர் வளரத் தொடங்கும்.

ஆண்களுக்குரிய புஜ , மற்றும் நெஞ்சு அமைப்புக்களும் உறுதியாகும்.

பெண்கள் மாதவிடாய் ஆரம்பிப்பது போல ஆண்கள் விந்துகளை வெளியேற்றத் தொடங்குவார்கள்.

இந்தக் காலகட்டத்தில் ஆண்கள் சுய இன்பம் போன்ற செய்கைகள் மூலம் விந்துகளை வெளி ஏற்றத் தொடங்குவார்கள். சில வேளைகளில் தானாகவே விந்துகள் வெளியேறும் குறிப்பாக அதிகாலை வேளையில். இந்த புதிய மாற்றம் ஆண்களுக்கு ஆரம்பத்தில் அச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தலாம்.

பூப்படையும் வயதில் உள்ள ஆண் பிள்ளைகளுக்கு தானாக விந்து வெளியேறும் என்பது பற்றி அறிவுரைகள் வழங்கி அது சாதாரணமான ஒன்று என்று விளக்கப் படவேண்டியது சுற்றத்தாரின் கடமையாகும்.

பெண்களைப் போலவே ஆண்களும் பூப்படையும், காலத்தில் சடுதியான வளர்ச்சியைக் காண்பிப்பார்கள்.

இங்கே பெண்கள் முதலில் பூப்படையத் தொடங்க்குவதாலே சிறுவயதி ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் சற்று உயர்வாக இருக்கக் காரணமாகும்.
.......................................................................................................................................................................

சந்தேகங்களைக் கேளுங்கள் !


3 comments:

சந்திர கிருஷ்ணா said...

ஆண் உறுப்பின் முனைப்பகுதியை மூடியிருக்கும் மெல்லிய தோல்ப்பகுதி உடலுறவின்போது பிரிந்து கொடுக்காமல் வலியை ஏற்படுத்துகிறது. அதனால் நீண்டநேரமாகியும் விந்து வெளியேறுவதில்லை. இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு?

துமிழ் said...

இதை phimosis என்பார்கள். இதை சிறிய சத்திர சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம். இந்த சத்திர சிகிச்சை முறைதான் முஸ்லிம் மக்கள் செய்யும் சுன்னத் எனப் படுகிறது. இது பற்றி நாளை விளக்கமாக ஒரு பதிவு இடுகிறேன்

சந்திர கிருஷ்ணா said...

மிக்க மகிழ்ச்சி. ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!