Thursday, November 25, 2010

புதிதாக திருமணம் முடித்தவர்களுக்காக

கேள்வி

Dear Sir,
வணக்கம்,
எங்களுக்கு திருமணம் நடந்து இரண்டு மாதம் ஆகிறது, அனால் குழந்தை
இல்லை எங்கலுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
எதாவது குறை இருக்குமோ என்று உள்மனம் வருத்தபடுகிறது எதாவது வழி
 இருந்தால் கூறுங்கள் ப்ளீஸ் .


என்றும் உண்மையுடன் 
//


பதில்

உங்கள் கேள்வியைக் பார்த்துவிட்டு ஒரு கணம் சிரித்தே விட்டேன். நீங்கள் திருமணம் முடித்து இரண்டே மாதங்களில்இந்தப் பயம் உங்களுக்குத்தேவையா?
நண்பரே உங்கள் மனைவியின் வயது 35 ற்கு குறைவானது என்றால் ஒரு வருடம் வரை காத்திருங்கள்.
மனைவியின் வயது 35 இற்குமேல் என்றால் ஆறு மாதமாவது காத்திருங்கள்.
இதையும் வாசியுங்கள் உதவியாக இருக்கும்.இந்தக் காலப்பகுதியில் உங்கள் மனைவி கர்ப்பமடையாமல் விடும் பட்சத்திலேயே நீங்கள் வைத்தியரின் உதவியை நாடவேண்டும்.


அதுவரை தேவை இல்லாததைச் சிந்தித்து மனசைக் குழப்பிக் கொள்ளாமல் சந்தோசமாக இருங்கள்.

கீழே உள்ள சுட்டியில் உள்ள இடுகையும் உங்களுக்கு உதவலாம்.

3 comments:

S.முத்துவேல் said...

இப்படியும் இருக்காங்களா மக்கள்....

துமிழ் said...

எஸ்.முத்துவேல் said...
இப்படியும் இருக்காங்களா மக்கள்....//



இது அவர்களின் குற்றமில்லை நண்பரே.

கருத்துக்கு நன்றி

Anonymous said...

good