Tuesday, November 30, 2010

நாம் எப்படி வளர்கிறோம் ?

மனிதனின் வளர்ச்சி(Growth) எனப்படுவது` தொடர்ச்சியான உடலியல் மாற்றங்கள் மூலம் ` உயரத்தில் ஏற்படுகிறஅதிகரிப்பாகும். உடல் நிறை அதிகரித்தல்,நகம் வளர்தல்,மயிர் வளர்தல் என்பவை உடற் றொழிப் பாடு ரீதியாகவளர்ச்சி என்ற பதத்துக்குள் உள்ளடக்கப் படவில்லை . .


வளர்ச்சி பல ஹார்மோன்களின் ஒருங்கினைந்த தொழிற் பாடாலே ஏற்படுகிறது.

ஒருவரின் வளர்ச்சி அவர் உட் கொள்ளும் உணவின் அளவு, பிறப்புரிமைக் காரணி(genetic factor), சிறுவயதில் ஏற்படும் மன /உள நோய்கள் என்பவற்றினால் தீர்மானிக்கப்படும்.

மனிதனின் வளர்ச்சியில் உச்சக்கட்ட வளர்ச்சி மூன்று நிலைகளில் ஏற்படும்.
அதாவது ஒரு குழந்தை உருவானதில் இருந்து வளர்ந்து கொண்டிருந்தாலும் அதன் வாழ்வின் மூன்று கட்டங்களில் வளர்ச்சி வீதமானது உச்சமாக இருக்கும்.அதுவே Growth spurt. எனப்படும்.

அதிகளவான வேகத்தில் ஒரு மனிதன் வளரும் கட்டங்கள்(growth spurt).

1. கருப்பையின் உள்ளே - கண்ணுக்குத் தெரியாத கலமாக உருவாகி சில மாதங்களிலேயே 50cm வரை குழந்தை வேகமாக வளர்ந்துவிடும்.

2.பிறந்ததிலிருந்து முதலிரு வருடங்கள் - இதற்குப் பிறகும் தொடர்ந்து குழந்தை வளர்ந்து கொண்டே இருக்குமானாலும் அதன் வளர்ச்சி வேகம் குறைவானதாகவே இருக்கும்.

3.பூப்படையும் காலத்தில் ஏற்படும் வளர்ச்சி  இருபாலாரிலும் பூப்படையும் காலத்தில் மீண்டும் வளர்ச்சிவேகம் சடுதியாக அதிகரிக்கும். குழந்தைகள் பூப்படையும் பருவத்தில் சடுதியாக உயரத்தில் அதிகரிப்பதை எல்லோரும் அனுபவத்திலேயே பார்த்திருப்போம்..

பூப்படையும் பருவத்தில் ஏற்படும் வளர்ஹ்சி அதிகரிப்போடு ஒரு மனிதனின் உயர வளர்ச்சி முற்றுப் பெற்றுவிடும். எலும்புகளின் வளர்ச்சிக்குப் பொறுப்பாக இருக்கும் அமைப்பு செயல் இழந்து எலும்போடு  கலந்துவிடுவதால் 
அதற்கப்புறம் யாராலும் உயரத்தில் வளர முடியாது.

பூப்படைதல் செயற்பாடு முடிவடைவதோடு வளர்ச்சியும் முடிவடைந்து விடும்.

பெண்களிலே பூப்படைதல் 8 வயதளவிலே ஆரம்பித்து 14 -15 வயதளவிலே முற்றுப் பெற்று விடும்.
ஆண்களிலே பூப்படைதல் 9  வயதிலே ஆரம்பித்து  15-16வயதளவில் முடிவடைந்திவிடும்.
அத்தோடு அவர்களின். வளர்ச்சியும் முடிவடைந்துவிடும்.

இதுவே பொதுவாக  சாதாரனமானவர்களில் நடைபெறும் செயற்பாடாகும்.

பி.கு- எனது முன்னைய   இந்தப் பதிவிலே பின்னூட்டம் இட்ட நண்பர்களின் சந்தேகம்  இப்போது தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
அங்கு பின்னூட்டம் இட்ட ஒரு நண்பர் மனிதன் 21 வயது வரை வளர்வதாக சுஜாத்தா சொல்லியிருப்பதாக சுட்டிக் காட்டினார். சுஜாத்தா .சரியான தகவலை பெறாமல் அல்லது தவறாக புரிந்து கொண்டு எழுதியிருப்பார்.விட்டு விடுங்கள்..

.

No comments: