Tuesday, November 30, 2010

மாதவிடாய் நோய் -பெண்கள் பக்கம்

....................................................................................................................................................................
முந்திய தொடர்கள் ....

பெண்கள் பக்கம் !( பெண்களுக்கோர் வேண்டுகோள்)


பூப்படைதல் பற்றி ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் ( பெண்கள் பக்கம்)

....................................................................................................................................................................
Premenrual syndrom(PMS) எனப்படுவது பெண்களை வாட்டி எடுக்கும் மாதவிடாயோடு சம்பந்தப்பட ஒரு நோயாகும்.இந்த நோயின் இயல்பானது ஒவ்வொருமுறை மாதவிடாய் ஏற்படுவதற்கு இரண்டு வார காலத்தில் ஆரம்பித்து மாதவிடாய் ஆரம்பித்தவுடன் மறைந்துவிடும்.

அறிகுறிகள்

  1. அதிகரித்த முகப்பரு
  2. மலச்சிக்கல்(CONSTIPATION)
  3. மன உளைச்சல்(ANXIETY)
  4. மனத்தாழ்வு(DEPRESSION)
  5. நாரி நோ
  6. வயிறு ஊதிய உணர்வு
  7. வயிற்றுக்குள் ஏதோ செய்வது போன்ற உணர்வு(BLOATING)
  8. அதிகமான களைப்பு
  9. இதயம் அதிகமாக துடிக்கும் உணர்வு(PALPITATION)
  10. தலையிடி
  11. மூட்டு நோ
  12. உடலுறவில் நாட்டம் குறைதல்
  13. தூக்கமின்மை
  14. வெளியில் கவனம் செலுத்தமுடியாமை
  15. மார்பக வலி
  16. மார்பகம் வீங்கிய உணர்வு
  17. கைகால் வீங்கிய உணர்வு
  18. உடல் நிறை அதிகரித்தல்
  19. பசிக்குறைவு/சில உணவுகளில் மட்டும் அதிக நாட்டம் 

மேலே சொன்ன அறிகுறிகள் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு முன் தொடங்கி மாதவிடாய் ஆரம்பிப்பதோடு மறைவதோடு அவை அவர்களின் அன்றாடச் செயற்பாடுகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தினாலேயே அவை Premenstrual syndrome எனப்படும்.

இந்த நிலையை பூரணமாக இல்லாமல் செய்ய முடியாது. ஆனாலும் குழந்தை பிறந்தவுடன் இதன் தாக்கம் குறைவதாக சொல்கிறார்கள்.

இந்தப் பாதிப்பு ஏற்படும் காலத்தில் வைத்தியரின் அறிவுரை இல்லாமலேயே பெறக்கூடிய சில வலி நிவாரணிகளை நீங்கள் பாவிக்கலாம்.
அவை- பரசிட்டமோல், ப்புருபான்(Ibrufan),மேபினாமிக் அசிட்(mefenamic acid) போன்ற மாத்திரைகள்.

அதுதவிர கீழே உள்ள நடவடிக்கைகள் மூலமும் அதன் பாதிப்புக்களைக் குறைக்கலாம்.
கடலை தானிய உணவுகளை அதிகாமக் உண்ணுதல்
கொழுப்பு கலந்த உணவுகளைக் குறைத்தல்(முக்கியமாக எண்ணெய்)
நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணுதல்
மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு பத்து நாட்களுக்கு முன் உப்பைக் குறைத்தல்
கோப்பி , மது அருந்துதலை தவீர்த்தல்
உடற்பயிர்ச்சியில் ஈடுபடல்
போதியளவு தூங்குதல்
மூன்று பிரதான உணவுகளை தவிர்த்து கொஞ்சம் கொஞ்சமாக ஆறுமுறை சாப்பிடுதல்

மேலே சொன்ன நடவடிக்கைகளை இந்த பாதிப்பு ஏற்படும் காலத்தில் மட்டும் மேற்கொண்டாலே போதும்.
(அதாவது மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு இரண்டு வாரத்திற்கு முன் மாத்திரம்)

இவற்றின் மூலம் இந்தப் பிரச்சினை குறையாவிட்டால் வைத்தியரை சந்தித்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

தொடரும் ....

.பி.கு-
பெண்களே இது முற்று முழுதாக உங்களுக்கான தொடர்...
தயவு செய்து உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் முன் வையுங்கள் .

4 comments:

Unknown said...

நன்றி..

Prabu Krishna said...

நல்ல தகவல்களை தருகிறீர்கள். நன்றி.

Anonymous said...

Very useful blog. Thank you.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்...

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்... நன்றி...