Showing posts with label குழந்தையின்மை. Show all posts
Showing posts with label குழந்தையின்மை. Show all posts

Friday, December 3, 2010

விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல்

ஆண்களின் விந்தணுக்களில் அளவு(Sperm count) குழந்தை உருவாக்கத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.இந்த விந்தணுக்கள் ஆண்களின் விதைகளிலே உற்பத்தி செய்யப்பட்டு மற்றைய பல சுரப்பிகளின் சுரப்புகளோடு சேர்ந்து சுக்கிலப் பாயமாக(Seminal fluid) வெளியேறும்.

விந்தணுக்களின் உற்பத்தியிலே பாதிப்பு ஏற்பட்டாலும் மற்றைய சுரப்புக்கள் சாதாரணமான முறையிலே தொழிற்படுவதால் உடலுறவின் போது அவர்களுக்கு சுக்கிலப் பாயம் வெளியேறலாம்.சுக்கிலப் பாயம் வெளியேறும் அனைவரிலும் விந்துகளின் அளவு போதுமானதாக இருக்கும் என்றில்லை.
ஆகவே குழந்தை உருவாகுவது பிற்போகும் சந்தர்ப்பத்தில் ஆண்களின் சுக்கிலப் பாயம் சோதிக்கப்பட்டு அதிலே உள்ள விந்துகளின் வீரியத் தன்மை  கணக்கடுக்கப் பட வேண்டும்.

விந்துகளின் வீரியத்தன்மை பிரதானமாக மூன்று விதங்களில் கணக்கெடுக்கப்படும்.


1.விந்துகளின் எண்ணிக்கை -
சாதாரணமாக 1மில்லி லீடர் சுக்கிலப் பாயத்தில் 20 மில்லியன் விந்தணுக்கள் இருக்க வேண்டும்

2.விந்துகளின் முன்னோக்கி அசையும் தன்மை (active motile)
மொத்தமாக உள்ள விந்துகளில் .குறைந்தது 50 வீதமானவை இந்தத் த்னமையைக் கொண்டிருக்க வேண்டும்

3.விந்துகளின் உருவ அமைப்பு(Morphology) 
மொத்த எண்ணிக்கையில் குறைந்தது 30 வீதமானவை சரியான உருவ அமைப்பில் இருக்க வேண்டும்



.அத்தோடு ஒரு தடவையில் வெளியேறும் சுக்கிலப் பயத்தின் அளவு 2 மில்லி லீட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.


இவ்வாறு மேலே சொன்ன நிலையில் உள்ள விந்துகளே கருத்தரித்தலுக்கு மிகவும் பொருத்தமானவையாக கருத்தப்படும்.

விந்துகளின் எண்ணிக்கை குறைதல் ஒலிக்கோ ஸ்பேர்மியா (Oligospermi)எனப்படும். இவ்வாறனவர்களுக்கு கருத்தரிக்கும் சந்தர்ப்பம் இருந்தாலும் அது குறைவாகவே இருக்கும். கருத்தரித்தல் பிற்போகும் சந்தர்ப்பத்தில் இவர்களின் சுக்கிலப் பாயம் சேகரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு (processed)பொருத்தமான விந்துகளை மட்டும் சேகரித்து IUI முறைமூலம் மனைவியின் கருப்பையினுள் செலுத்தப் படுவதன் மூலம் கருக்கட்டலை ஏற்படுத்த முயற்சிக்கலாம்.(IUI பற்றி இந்த சுட்டியில் வசிக்க )

அது தோல்வியடையும் பட்சத்தில் செயற்கையான முறையிலே கருக்கட்டலை நடத்தும் பரிசோதனைக் குழாய்க் குழந்தைக்காக முயற்ச்சிக்கலாம்.

அடுத்ததாக சில பேரின் சுக்கிலப் பாயத்தில் விந்துகளே இல்லாமல் இருக்கலாம். இது  Azospermia  எனப்படும். இவர்களுக்கு கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் இல்லை. இருந்தாலும் மிகவும் அரிதாக விந்துகள் முற்றும் முழுதாக இல்லாமல் போகுதல் சில வேறு நிவர்த்தி செய்யக் கூடிய நோய்களால் ஏற்படிருக்கலாம்.
அந்தச் சந்தர்ப்பத்தில் அந்த நோய் சரி செய்யப்பட்டால் விந்து உற்பத்தி ஏற்பட்டு
கருத்தரித்தல் நடை பெறலாம். இது மிகவும் சொற்பமானவ்ர்களுக்கே சாத்தியம்.

விந்துகள் அறவே இல்லாதவர்கள் தம்பதியினர் வேறு ஒருவரின் விந்தணுக்களை
பெற்று IUI மூலம் கருப்பையினுள்  செலுத்தி கருத்தரிக்க முயற்ச்சிக்கலாம்.

இப்போது நிறைய தனியார் வைத்தியசாலைகளில்  விந்துகளை சேமிக்கும் வங்கிகள் உள்ளன.அங்கிருந்து விந்துகளை பெற்று IUI  மூலமோ /பரிசோதனைக் குழாய்க் குழந்தையாகவோ கருத்தரித்தலுக்கு முயற்ச்சிக்கலாம்.

Friday, November 26, 2010

செயற்கையாக விந்துகளை பெண்ணுறுப்பில் செலுத்தும் முறை(வீடியோவுடன்)

ஒரு குழந்தை எப்படி உருவாகிறது என்று முன்னைய இந்த இடுகையில் பதிவிட்டிருந்தேன்.ஒரு குழந்தை உருவாகுவதற்கு பெண்ணிலே உருவாகியிருக்கும் முட்டையை ஆணின் விந்தணு போய் கருக்கட்ட வேண்டும். இதற்கு அந்த ஆணின் விந்தணுக்கள் பெண்ணின் யோனி வழியே உட்செலுத்தப் பட வேண்டும். இது சாதாரணமாக உடலுறவின் போது நடைபெறும்.

ஆனாலும் சில தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பது பிற் போகும் போது , அல்லது அந்த ஆணின் சுக்கிலப் பாயத்தில உள்ள விந்துகளின் திறன் (குறிப்பாக விந்துகளின் எண்ணிக்கை மற்றும் அசையும் தன்மை ) குறைவாக இருக்கும் போது உடலுறவின் போது செலுத்தப் படும் விந்துகள் மூலம் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகுவது தடைப் படலாம்.

இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் கருக்கட்டலை இலகுவாக்குவதற்காக INTRA UTERINE INSEMINATION(IUI) எனப்படும் செயன் முறை பயன்படலாம்.

இந்த முறையின் போது ஆணின் விந்தணுக்கள் ஒரு குழாய் மூலம் பெண்ணின் கருப்பைப் பையினுள் செலுத்தப் படும்(வைத்தியரினால் )

இதற்காக கணவன் சுய இன்பத்தின் மூலம் சுக்கிலப்பாயத்தை சேகரித்து கொடுக்க வேண்டும். இது நேரடியாக கருப்பையினுள் குழாய் மூலம் வைத்தியரினால் செலுத்தப்படும்.

கருப்பையினுள் விந்துகளை செலுத்த பயன்படும் குழாய்

இந்த செய்முறை மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பத்தை மேலும் அதிகரிக்க கணவனின் சுக்கிலப் பாயமானது பதப்படுத்தப்(PROCESSING) பட்ட பின்பு செலுத்தப்படலாம். அதாவது அவரது சுக்கிலப் பாயத்தில் உள்ள திறன் கூடிய விந்துகளை மட்டும் பிரித்து அனுப்புவதன் மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பம் அதிகரிக்கலாம்.

கருப்பையினுள் செலுத்தப்படுவதை விளக்கும் படம்.


சில வேளை ஆணின் விந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அல்லது சுக்கிலப் பாயத்தில் விந்து இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அந்த தம்பதி ஏற்றுக் கொண்டால் வேறு ஒரு நபரின் சுக்கிலப் பாயத்தை பெற்று பெண்ணின் கருப்பைப் பைக்குள் செலுத்தி குழந்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு விந்துகள் செலுத்தப்படுவது பெண்ணிலே முட்டை உருவாகும் நேரத்திலே மேற்கொள்ளப்படும். சில வேளை அந்தப் பெண்ணுக்கு முட்டை உருவாக்கத்தை தூண்டும் மருந்துகள் கொடுக்கப்பட்டு பின்பு ஸ்கேனிங் மூலம் முட்டை உருவாக்கி உள்ளது என்று உறுதி செய்த பின்பே கொடுக்கப்படும்.

ஸ்கேனிங் வசதியில்லாத சில வைத்திய சாலைகளில் பெண்ணின் மாதவிடாய் காலத்தை கணித்து அதற்கேற்ப முட்டை உருவாகும் தினத்தை அனுமானித்த பின்பு இவ்வாறு விந்துகள் செலுத்தப் படலாம்.

இது பற்றி ஒரு வீடியோ



Thursday, November 25, 2010

புதிதாக திருமணம் முடித்தவர்களுக்காக

கேள்வி

Dear Sir,
வணக்கம்,
எங்களுக்கு திருமணம் நடந்து இரண்டு மாதம் ஆகிறது, அனால் குழந்தை
இல்லை எங்கலுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
எதாவது குறை இருக்குமோ என்று உள்மனம் வருத்தபடுகிறது எதாவது வழி
 இருந்தால் கூறுங்கள் ப்ளீஸ் .


என்றும் உண்மையுடன் 
//


பதில்

உங்கள் கேள்வியைக் பார்த்துவிட்டு ஒரு கணம் சிரித்தே விட்டேன். நீங்கள் திருமணம் முடித்து இரண்டே மாதங்களில்இந்தப் பயம் உங்களுக்குத்தேவையா?
நண்பரே உங்கள் மனைவியின் வயது 35 ற்கு குறைவானது என்றால் ஒரு வருடம் வரை காத்திருங்கள்.
மனைவியின் வயது 35 இற்குமேல் என்றால் ஆறு மாதமாவது காத்திருங்கள்.
இதையும் வாசியுங்கள் உதவியாக இருக்கும்.இந்தக் காலப்பகுதியில் உங்கள் மனைவி கர்ப்பமடையாமல் விடும் பட்சத்திலேயே நீங்கள் வைத்தியரின் உதவியை நாடவேண்டும்.


அதுவரை தேவை இல்லாததைச் சிந்தித்து மனசைக் குழப்பிக் கொள்ளாமல் சந்தோசமாக இருங்கள்.

கீழே உள்ள சுட்டியில் உள்ள இடுகையும் உங்களுக்கு உதவலாம்.

Monday, August 23, 2010

குழந்தையின்மை

கேள்வி 

(என்னுடைய பெயர் மற்றும் எனது தகவல்கள் எதுவும் வெளியிடவேண்டாம்)

அன்பின் நண்பரே குழந்தையின்மை பெரும் பிரச்சினை என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை உங்களின் மருத்துவ அனுபவத்தில் நீங்கள் நிறைய கண்டிருக்க கூடும் எனது மனைவியின் சகோதரிக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது இது வரை அவர்களுக்கு குழந்தையில்லை மருத்துவ சோதனையில் பெண்ணிற்கு கருப்பையில் கட்டி உள்ளதென்று தெரிவித்தார்கள் மருத்துவர்கள் ஒரு ஆண்டிற்கு முன்பு அவருக்கு அந்த கட்டியும் நீக்கப்பட்ட்டு விட்டது அவரின் வயதோ 30 ஆகிறது உடல் பருமணானவர் மேலும் அவருக்கு மாதவிலக்கும் சீராக நடப்பதில்லை (மாதவிலக்கு ஐந்து மாதங்கள் கூட ஆகிறதாம்) இனி இவர்களுக்கு எந்த மாதிரியான மருத்துவ முறைகளை மேற்கொள்ள சொல்லாலாம் எந்த மாதிரியான உணவு பழக்கங்கள் நல்லது இந்த விஷயத்தை பொருத்தவரை இருவருக்குமான (ஆணிற்கும் , பெண்ணிற்கும்) பிரச்சினைகள் மற்றும் உடலுறவு மேற்கொள்ள வேண்டிய முறைகள், நாட்கள், படுக்கையில் பின்பற்றவேண்டியவை , ஆணின் அனுவின் எண்ணிக்கை போன்ற விஷயங்களை தெளிவுபடுத்தினால் இவர்களை போன்ற நிறைய நபர்களுக்கு இது உதவியாக இருக்கும்



வாழ்க வளமுடன்//


பதில் 

நல்லது நண்பரே! நீங்கள் குறிப்பிட்ட பெண் உடற் பருமனானவர் ,ஒழுங்காக மாதவிடாய் ஏற்பட்டதவர் மற்றும் திருமணமாகி எட்டு மாதமாகியும் குழந்தை இல்லாதவர் என்பதை வைத்துப் பார்த்தால் அவருக்கு சூலகத்தில் நீர்க்கட்டிகள் சேர்ந்திருக்கும் polycystic ovarian syndrom  என்ற நோய் இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.அந்த நோய் பற்றி இந்த இடுகையில் வாசிக்கவும்.

அந்தப் பெண் சரியான உடற்பயிற்சி மூலமும் உணவுப் பழக்க வழக்கம் மூலமும் உடல் நிறையைக் குறைப்பது அவசியம்.அதன் மூலம் குழந்தை பெறுவதற்கான சந்தர்ப்பம் சற்று அதிகரிக்கும்.

மேலும் அந்தப் பெண்ணின் சீனியின் அளவு (ரத்தத்தில்) அளக்கப் பட வேண்டும். ஏனென்றால் அவருக்கு நீரழிவு நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.

அடுத்தபடியாக அவருக்கு அந்த நோய் உள்ளது என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள பெண்ணியல் நோய் நிபுணர் ஒருவரை உடனடியாகச் சந்தியுங்கள்.
உறுதி செய்த பின் அவருக்கு சூழ் ( முட்டை) உருவாக்கத்தை அதிகரிக்கும் மாத்திரைகள் வழங்கப்படுவதன் மூலம் குழந்தை பெறுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் உள்ளது.

அடுத்த கட்டமாக லப்பிராஸ்கோப்பிக் சத்திர சிகிச்சை மூலம் அந்த நீர்க்கட்டிகளை உடைத்து விடலாம்.

மேலும் அந்தப் பெண்ணுக்கு மெற்போமின் எனப்படும் மாத்திரையும் கொடுக்கப் படலாம்.

இவை அனைத்துக்கு நீங்கள் நம்பகமான ஒரு பெண்ணியல் நோய் மருத்துவ நிபுணரைச் சந்திப்பது அவசியம். 

Sunday, March 14, 2010

செயற்கையாக விந்துகளை பெண்ணுறுப்பில் செலுத்தும் முறை(வீடியோவுடன்)

ஒரு குழந்தை எப்படி உருவாகிறது என்று முன்னைய இந்த இடுகையில் பதிவிட்டிருந்தேன்.ஒரு குழந்தை உருவாகுவதற்கு பெண்ணிலே உருவாகியிருக்கும் முட்டையை ஆணின் விந்தணு போய் கருக்கட்ட வேண்டும். இதற்கு அந்த ஆணின் விந்தணுக்கள் பெண்ணின் யோனி வழியே உட்செலுத்தப் பட வேண்டும். இது சாதாரணமாக உடலுறவின் போது நடைபெறும்.

ஆனாலும் சில தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பது பிற் போகும் போது , அல்லது அந்த ஆணின் சுக்கிலப் பாயத்தில உள்ள விந்துகளின் திறன் (குறிப்பாக விந்துகளின் எண்ணிக்கை மற்றும் அசையும் தன்மை ) குறைவாக இருக்கும் போது உடலுறவின் போது செலுத்தப் படும் விந்துகள் மூலம் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகுவது தடைப் படலாம்.

இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் கருக்கட்டலை இலகுவாக்குவதற்காக INTRA UTERINE INSEMINATION(IUI) எனப்படும் செயன் முறை பயன்படலாம்.

இந்த முறையின் போது ஆணின் விந்தணுக்கள் ஒரு குழாய் மூலம் பெண்ணின் கருப்பைப் பையினுள் செலுத்தப் படும்(வைத்தியரினால் )

இதற்காக கணவன் சுய இன்பத்தின் மூலம் சுக்கிலப்பாயத்தை சேகரித்து கொடுக்க வேண்டும். இது நேரடியாக கருப்பையினுள் குழாய் மூலம் வைத்தியரினால் செலுத்தப்படும்.


கருப்பையினுள் விந்துகளை செலுத்த பயன்படும் குழாய்

இந்த செய்முறை மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பத்தை மேலும் அதிகரிக்க கணவனின் சுக்கிலப் பாயமானது பதப்படுத்தப்(PROCESSING) பட்ட பின்பு செலுத்தப்படலாம். அதாவது அவரது சுக்கிலப் பாயத்தில் உள்ள திறன் கூடிய விந்துகளை மட்டும் பிரித்து அனுப்புவதன் மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பம் அதிகரிக்கலாம்.


கருப்பையினுள் செலுத்தப்படுவதை விளக்கும் படம்.


சில வேளை ஆணின் விந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அல்லது சுக்கிலப் பாயத்தில் விந்து இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அந்த தம்பதி ஏற்றுக் கொண்டால் வேறு ஒரு நபரின் சுக்கிலப் பாயத்தை பெற்று பெண்ணின் கருப்பைப் பைக்குள் செலுத்தி குழந்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு விந்துகள் செலுத்தப்படுவது பெண்ணிலே முட்டை உருவாகும் நேரத்திலே மேற்கொள்ளப்படும். சில வேளை அந்தப் பெண்ணுக்கு முட்டை உருவாக்கத்தை தூண்டும் மருந்துகள் கொடுக்கப்பட்டு பின்பு ஸ்கேனிங் மூலம் முட்டை உருவாக்கி உள்ளது என்று உறுதி செய்த பின்பே கொடுக்கப்படும்.

ஸ்கேனிங் வசதியில்லாத சில வைத்திய சாலைகளில் பெண்ணின் மாதவிடாய் காலத்தை கணித்து அதற்கேற்ப முட்டை உருவாகும் தினத்தை அனுமானித்த பின்பு இவ்வாறு விந்துகள் செலுத்தப் படலாம்.

இது பற்றி ஒரு வீடியோ

Friday, November 6, 2009

Polycystic ovaian syndrom-சூலக நீர்க் கட்டிகள்



PCOS என்றால் என்ன?

ஓவரி(OVARY) எனப்படுவது பெண்களின் சூலகம். இதுதான் முட்டைகளை உருவாக்கி அந்த முட்டைகள் கருக்கட்டியே குழந்தைகள் உருவாகின்றன.
cyst எனப்படுவது தண்ணீர் நிரம்பிய கட்டிகள் , poly என்பது பல என்பதைக் குறிக்கும்.

ஆக ஒரு பெண்ணின் சூலகத்திலே பல திரவக் கட்டிகளின் உருவாக்கமே poly cystic ovarian syndrom எனப்படுகிறது.

இந்த நோயானது பெண்களிலே பொதுவான ஒரு நோயாகும். நிறையப் பெண்களுக்கு இந்த நோய் இருந்தாலும் அது எல்லா பெண்களிலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.


இந்த திரவக் கட்டிகளை கொண்ட சூலகங்கள் அசாதாரணமாக ஹோர்மொன்களை சுரப்பதன் மூலமே ஒரு பெண்ணுக்கு பிரச்சினைகளைக் கொடுக்கிறது.

இந்த நோயின் அறிகுறிகள் எவை?

1.அளவுக்கதிகமான பரு( முகப் பரு)

2.உடற் பருமன் அதிகரித்தல்.

3.அசாதாரண இடங்களிலே பெண்களுக்கு மயிர் வளர்தல், அதாவது முகம் , மார்பு, தொடை போன்ற இடங்களில் மயிர் வளர்தல்.

4.ஒழுங்கற்ற மாதவிடாய்

5.மலட்டுத் தன்மையை ஏற்படுத்தல்.

இவை எல்லாம் , எல்லா பாதிக்கப் பட்ட பெண்களிலேயும் இருக்கும் என்றில்லை. intha நோய் இருக்கும் போதே பல பிள்ளைகளைப் பெற்று வாழ்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட பதினைந்து பெண்களுக்கு ஒரு பெண் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவளாக இருக்கிறார்கள்.

மற்றும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சீனியைக் கட்டுப் படுத்தும் இன்சுலின் என்ற ஹோர்மொனின் திறன் குறைவதால் அவர்கள் நீரழிவு நோயினால் பாதிக்கப் படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன.

இப்போது இந்தப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக நிறைய மருத்துவ வசதிகள் வந்து விட்டன. அதிலும் எவ்வளவு விரைவாக மருந்து ஆரம்பிக்கப் படுகிறது என்பதைப் பொறுத்தே அதன் பின் விளைவுகள் தீர்மானிக்கப் படுகின்றன.

ஆகவே , கன்னிப் பெண்களே உங்களுக்கு கீழே உள்ள ஏதாவது ஒரு பிரச்சினை இருந்தால் வைத்தியரை நாடி ஆலோசனை பெறுங்கள்....

1. 14 வயதாகியும் மாதவிடாய் ஆரம்பிக்காவிட்டால்.

2.மார்பு , முகம் போன்ற இடங்களிலே மயிர் வளர்ந்தால்.

3. ஒரு வருடத்திலே எட்டுக்கும் குறைவான மாதவிடாய்கள்தான் ஏற்படுகிறது என்றால்.

4.அளவுக்கு அதிகமான கட்டுப் படுத்த முடியாத முகப் பரு ஏற்பட்டால்.

5.உங்கள் கழுத்து மற்றும் கமக்கட்டுப் பகுதிகளிலே கறுப்புப் படிவுகள் காணப்பட்டால்.

6.அதிக தாகம், அதிக சிறுநீர் கழித்தல் , அதிக பசி போன்ற நீரழிவு நோய்க்கான குணங்குறிகள் ஏற்பட்டால்.

7.உடற்பருமன் அளவுக்கதிகமாக அதிகரித்தால்.