Sunday, March 28, 2010

குழந்தை பிறக்கும் திகதியை நீங்களாகவே கணித்துக் கொள்ளுங்கள்!

(மீள் பதிவு )

ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் , எப்போது தனக்குக் குழந்தை பிறக்கும் என்று அவளின் முதல் எதிர்பார்ப்புத் தொடங்கி விடும். வைத்தியர்களும் அவளின் கர்ப்ப காலத்தை கணித்து எப்போது அவளுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறுவார்கள்.

மருத்துவர்கள் எப்போது குழந்தை பிறக்கும் என்று எவ்வாறு கணிக்கிறார்கள்?

இதில் எந்த தந்திரமும் இல்லை மந்திரமும் இல்லை. நீங்களும் இலகுவாக கணித்துவிடலாம்.
முதலில் உங்களுக்கு கடைசியாக மாதவிடாய் ஏற்பட்ட திகதியை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு அந்த திகதியோடு ஒன்பது மாதங்களையும் ஏழு நாட்களையும் கூட்டி விடுங்கள். அதுதான் உங்கள் குழந்தை பிறக்கும் நாளாகும்.
உதாரணத்திற்கு உங்களுக்கு கடைசியாக மாதவிடாய் ஏற்பட்டது ஜனவரி மாதம் முதலாம் திகதி என்றால் , முதலாம் மாதத்தோடு ஒன்பது மாதங்களைக் கூட்டுங்கள், பின்பு முதலாம் திகதியோடு ஏழைக்கூட்டுங்கள்.

உங்கள் கடைசி மாதவிடாய் திகதி - 01 / 01/ 2009
நீங்கள் கூட்ட வேண்டியது - 07/09/....

குழந்தை பிறக்கும் அனுமானித்த திகதி -08/10/2009

இந்த திகதியானது வெறுமனே ஒரு அனுமானித்த திகதிதான் , சரியாக இந்த திகதியில்தான் குழந்தை பிறக்கும் என்றில்லை சில நாட்கள் முந்தள்ளியோ பின் தள்ளியோ போகலாம். ஆனாலும் இந்த திகதியை அடிப்படையாக வைத்தே அந்த கர்ப்பிணிக்கான மருத்துவ முறைகள் தீர்மானிக்கப்படுகின்றன.

இப்படிக் கணிப்பது கூட கஷ்டம் என்பவர்கள் சும்மா ஜாலியா கீழே உள்ள லிங்கிலே போய் உங்களின் மாதவிடாய் திகதியை கொடுத்துவிடுங்கள் அங்கே உள்ள கணிப்பான் உங்கள் திகதியை கணித்துச் சொல்லி விடும்.
http://www.bestinfosite.com/edd.asp


பி.கு- தொடர்ச்சியாக கர்ப்பிணி மருத்துவம் என்ற லேபிலிலே கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு சம்பந்தமான அடிப்படை கருத்துக்களை பதிவிடலாம் என்று எண்ணுகிறேன். உங்கள் ஆக்க பூர்வமான சந்தேகங்களையும் முன்வையுங்கள் பதிவிட்டு தீர்த்து வைக்கிறேன்.


பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness)




காலை நேர நோய்(morning sickness) எனப்படுவது கர்ப்பமான பெண்களுக்கு ஏற்படுகின்ற ஒரு நிலையாகும். அதாவது இது நோய் எனறு சொல்லப்பட்டாலும் தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

morning sickness என்றால் என்ன?
இது கர்ப்பமான பெண்களில் ஏற்படுகின்ற வாந்தி மற்றும் வாந்தி எடுக்க வேண்டிய உணர்வு(nausea) என்பவற்றையே காலை நேர நோய் என்கின்றோம்.


இந்த காலை நேர நோயானது கர்ப்பமாகி முதல் மூன்று தொடக்கம் நான்கு மாதங்களுக்கே காணப்படும்.
அதாவது ஒரு கர்ப்பமான பெண் வாந்தியினால் அவதிப்படுவது முதல் மூன்று மாதங்களுக்கே.

இந்த நோயினால் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.

காலை நேர நோயின் ஆதிக்கத்தை குறைக்க சில வழிகள்,

1.எண்ணைத்தன்மையான, மற்றும் கொழுப்புத் தன்மையான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.   (பொரித்த காரம் கூடிய  உணவுகள்)

2.ஒரேயடியாக நிறையச் சாப்பிடுவதைத் தவிர்த்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும்.
3.காபோகைட்றேட்டு(carbohydrate) நிறையக் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும் (வெள்ளை அரிசி, அவித்த உருளைக் கிழங்கு, இனிப்புக் குறைவான மாவினால் செய்த பிஸ்கெட் போன்றவை)
4.நித்திரையால் எழுந்தவுடன் படுக்கையில் சற்று நேரம் அமர்ந்து இருந்து ஆறுதலாக சுவாசியுங்கள்
5.பழங்கள் மரக்கறி வகைகளை அதிகம் உட்கொள்ளுங்கள்
6.வயிறு முற்றாக வேருமையாவதைத் தவிருங்கள்

7.படுக்கையில் இருந்து எழுந்தவுடனேயே உங்கள் அன்றாட செய்கைகளில் ஈடுபடும் முன் சீனித்தன்மை குறைந்த பிஸ்கட் ஏதாவது சாப்பிடுங்கள் .



இது தவிர அளவுக்கதிகமான வாந்தி உங்களை வாட்டுமானால் வைத்தியரை நாடி வாந்தியைத் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ளலாம்.

உங்கள் நண்பன் துமிழ் .
மேலும் சந்தேகங்களைக் கேளுங்கள் !


Thursday, March 25, 2010

முத்துக் கட்டிகள் (பொது இடத்தில் வாசிப்பதை தவிர்க்கவும்)

Anonymous said...
Pearly penile papules பற்றி விவரமாக சொல்லவும் மற்றும் treatment முறை...


இந்த அனானி நண்பருக்காக இந்தப் பதிவு ..


இந்த ... .. எனப்படும் கட்டிகள் அநேகமான ஆண்களிலே ஏற்பட்டிருக்கும். இது ஆணுறுப்பின் தலைப் பகுதியின் அடியில் ஏற்படுகின்ற சின்ன சின்ன கட்டிகள்
( படத்தைப் பாருங்கள்).                                                                                                                                                                                                                                                                                       முத்துக் கோர்வை போல வரிசையான தோற்றம் கொடுப்பதால் இந்தப் பெயர் வந்தது.
  

இவ்வாறு கட்டிகள் ஏற்பட்டவுடன் ஆண்கள் தங்களுக்கு எதோ பாலியல் தொடர்பான நோய் ஏற்பட்டு விட்டதாக அச்சப்பட்டு வெளியில் சொல்லிக் கொள்ள முடியாமலும் தவிர்த்துக் கொண்டிருப்பார்கள்.

உண்மையில் இது அச்சப்பட வேண்டிய விடயமா?
இல்லவே இல்லை!
இது பொதுவாக இளவயது ஆண்களுக்கு ஏற்படுகின்ற மாற்றமாகும். இதற்கும் பாலியல் நோய்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.இது பாலியல் மூலம் தொற்றுகிற நோயும் அல்ல.

இந்த பொதுவான பிரச்சினைக்காக எந்த ஆணும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.

இதற்கு எந்தவிதமான மருத்துவச் சிகிச்சையும் தேவையும் இல்லை.

அதையும் தாண்டி இவற்றை நீக்கத்தான் வேண்டும் என்று நினைக்கும் நண்பர்கள் ஒரு தோலியல் நிபூணரச் சந்தித்து காபனீர் ஒக்சைட்டு லேசர் மூலம் இலகுவாக அகற்றிக் கொள்ளலாம்.




இந்தக் கட்டிகள் நீக்கப் படும் முன்னும் பின்னும்








Tuesday, March 23, 2010

உடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்(மீள் பதிவு)

உடலுறவு என்ற உன்னதமான ஒரு நிகழ்வின் போது , சில பெண்களுக்கு வலி ஏற்படும் போது அவர்களின் இல்லற வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் அபாயம் தோன்றுகிறது.

உடலுறவின் போது பெண்கள் தன் பெண் உறுப்பிலே வலியை உணர்வது மருத்துவ ரீதியாக dysparunia எனப்படுகிறது.

இந்த வழியானது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
ஒன்று superficial dysparunia அதாவது புணர்வின் ஆரம்பத்திலேயே ஏற்படுகிற வலி, அடுத்தது deep dysparunia புணர்வின் உச்சத்தில் ஏற்படுகின்ற வலி.


இந்த வலி ஏற்பட்டாலும் வெளியில் சொல்லிக் கொள்ள முடியாமல் தங்கள் வாழ்க்கையே நாசமாக்கி விட வேண்டிய நிலையில் இருக்கும் எம் பெண்களுக்கு சில அடிப்படை அறிவினை வழங்கவே இந்த பதிவு.

இந்த வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன ?

நேர்த்தியற்ற பாலியல் உறவு. அதாவது உடலுறவில் ஈடுபடும் இருவரின் பிறப்பு உறுப்புக்களிலும் உடலுறவின் போது நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆண்களில் அவர்களின் ஆணுறுப்பு விறைப்படையும் , பெண்களிலோ அவர்களின் பெண் குறி விறைப்படைவதோடு உறுப்பின் மற்றைய பகுதிகளிலும் சில திரவங்கள் சுரக்கப்பட்டு அவளின் பெண் உறுப்பை இலகுவானதாக்கும். இந்த மாற்றங்கள் ஒரு பெண்ணின் உறுப்பிலே ஏற்படாமல் இருக்கும் போது ஆண் புணர்விலே ஈடுபட்டால் இலகு தன்மையற்ற அந்த பெண் உறுப்பிலே வலி ஏற்படும். இதற்கு முழுப் பொறுப்புமே அந்த ஆணே! அதாவது தன் துணை உடலுறவுக்குத் தயாரா என்று அறியாமலேயே அவசரப்பட்டு புணர்வில் ஈடுபடுவது அந்த பெண்ணுக்கு வலியை ஏற்படுத்தும்.

இதற்காக புணர்வில் ஈடுபடும் போது ஆண்கள் தங்கள் மனைவி அதற்குத் தயாரா என்று அறிந்து கொண்டு புணர்வில் ஈடுபட வேண்டும், அப்படி தயாராகாத போது எடுத்த எடுப்பிலே புணர்வில் ஈடுபடாமல் சற்று பொறுத்து அவள் புணர்வுக்குத் தயாராகும் வரை வேறு விதமான நடவிக்கைகள் மூலம் அவளின் உணர்ச்சிகளைத் தூண்டி அவளை தயார் படுத்திய பின் புணர்வில் ஈடுபட வேண்டும். இவ்வாறு புணர்ச்சிக்கு முன்பு நடை பெறுகின்ற விடயங்களே foreplay
எனப்படுகிறது.

இது தவிர வேறு சில காரணங்களும் புணர்வின் போது வலியை ஏற்படுத்தலாம் .
அவையாவன ,
பெண் உறுப்பிலே ஏற்படுகின்ற தொற்றுக்கள்.
மாதவிடாய் நிறுத்தத்தின் போது பெண் உறுப்பிலே ஏற்படுகின்ற உலர்ந்த தன்மை.
உளவியல் சம்பந்தப் பட்ட பிரகுச்சனைகள் .
பெண் சிறு நீர் வாயில் ஏற்படும் தொற்றுக்கள்.


எதோ ஒரு வகையில் பாலியல் ரீதியாக துஷ் பிரயோகம் செய்யப் பட்ட பெண்களுக்கு சில வேளைகளில் பாலியல் என்பது வாழ்க்கை முழுவது வலியானதாகவே அமைந்து விடலாம். அதாவது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உறுப்பு தன் கணவனின் புணர்தலின் போது தானாகவே எதிர்ப்பைக் காட்டலாம் அதாவது , உடலுறவுக்கு உகந்த முறையில் இசைவாகாமல் சுருங்கிய படியே இருக்கலாம். இது vaginusmus எனப்படும்.





Saturday, March 20, 2010

கருப்பை கட்டிகள் !பெண்கள் கட்டாயம் அறியவேண்டியது ..

கட்டி வளர்தல் என்றாலே நாம் உடனடியாக நினைப்பது அது புற்று நோயோ (cancer)என்றுதான். அதுவும் ஒரு வகையில் நல்லதுதான் , எந்தவொரு சந்தேகமான கட்டிகளையும் சோதித்து அவை புற்று நோயல்ல என்று உறுதிப் படுத்திக் கொள்வது கட்டாயம.
இங்கே நான் கருப்பையில் வருகின்ற கட்டிகள் பற்றி ஒரு இடுகையிடுகிறேன்.

கருப்பையிலே புற்று நோய் கட்டியாக வளரலாம். ஆனால் அதைவிட மிகவும் பொதுவாக ஏற்படும் புற்று நோயல்லாத பைவ்ரோயிட் (Fibroid) எனப்படும் கட்டிகள் பற்றி அநேகம் பேரானோர் கேள்விப் பட்டு இருப்பீர்கள்.

இந்த பைவ்ரோயிட்(fibroid) எனப்படும் கட்டிகள் என்ன?

இது கருப்பைப் பையின் சுவற்றிலே இருக்கும் தசையில் இருந்து உருவாகும் கட்டியாகும்.இது தனியாக இருக்கலாம் அல்லது ஒரு கருப்பையிலேயே பல கட்டிகள் இருக்கலாம்.





தனியாக ஏற்பட்ட ஒரு கட்டி




கருப்பையில் பல கட்டிகள்

இது அரிதாக ஏற்படுகின்ற நோயா?


இல்லை .இது மிகவும் பொதுவாக அதாவது 45வயதிலே இருக்கும் 100 பெண்களை  எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட40 பேருக்கும் அநேகமானோருக்கு இந்த கட்டிகள் இருக்கலாம். ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் இது அறிகுறிகளை வெளிக்காட்டாததால் நிறையப் பேருக்கு தங்களுக்கு இந்தக் கட்டிகள் இருப்பதே தெரியாமல் போய் விடுகின்றது.

இது புற்று நோயா?

இல்லை. இந்த கட்டி புற்று நோயால் ஏற்படும் கட்டியல்ல. மேலும் இந்தக் கட்டி பிற்காலத்தில் புற்று நோயாக மாறுவதற்கான சந்தர்ப்பமும் மிகவும் குறைவானது. இதனால் யாருக்காவது fibroid கட்டிகள் உள்ளது என்றால் பயப்பட வேண்டியதில்லை.

இது எத்தனை வயதளவில் ஏற்படும்?

பொதுவாக 40 தொடக்கம் 50 வயதளவிலேயே அதிகமான பெண்களுக்கு இது ஏற்பட்டாலும், இளம் பெண்களுக்கும் ஏற்படலாம்.

இது என்ன வகையான அறிகுறிகளை ஏற்படுத்தலாம்?


நான் ஏற்கனவே சொன்னது போல இது எல்லாப் பெண்களிலும் அறிகுறிகளை ஏற்படுத்துவதில்லை.இவை அறிகுறிகளை ஏற்படுத்தும் பொழுது கீழ் வரும் அறிகுறிகள் ஏற்படலாம்.

  • மாதவிடாய் நேரத்தில் அதிகம் ரத்தம் போகுதல்
  • அடிவயிற்றிலே எதோ இருப்பது போன்ற உணர்வு 
  • அடிவயிறு வீங்குதல் 
  • அதிகம் சிறு நீர் கழிக்கவேண்டி ஏற்படுதல்
  • நாரிப் பகுதியின் அடிப்பகுதியில்  நோ ஏற்படுதல்

குழந்தையின்மை ஏற்படுவதற்கு இது காரணமாகலாமா?


ஆம், சில கட்டிகள் கருப்பையின் சுவற்றின் உட்புறமாக (அதாவது உருவாகிய சிசு கருப்பையின் உள்ளே ஒட்டிக் கொள்கின்ற  இடத்திலே ) இருக்கும் போது குழந்தை சரியாக கருப்பையில் நிலை கொள்ளாமல் அழிந்து போகலாம்.

ஆனால் இவ்வாறு ஏற்படுகிற சந்தர்ப்பம் குறைவு .மற்றும் இந்தக் கட்டிகள் இருக்கும் எல்லாப் பெண்களிலும் இது ஏற்படுவதில்லை.(மிகவும் அரிதானவர்களிலேயே ஏற்படும்).
மற்றும் கருப்பையின் உள்புறமாக  இல்லாமல் சற்று வெளிப்புறமாக இருக்கும் கட்டிகளால் குழந்தை உருவாக்கத்திற்கு எந்தப் பாதி[ப்பும் ஏற்படுவதில்லை.

இந்தக் கட்டிகளைக் கொண்ட ஒரு பெண் கர்ப்பம் தரித்த பின்பு பிரச்சினைகள் ஏற்படுமா?


சில வேளைகளில்.
குறிப்பாக குழந்தை கீழ் இறங்குவதை இந்தக் கட்டிகள் தடுப்பதால் சாதாரணமாக பிள்ளை பிறக்க முடியாமல் போகலாம். இதனால் சிசேரியன் (சத்திர சிகிச்சை) மூலம் குழந்தை பிறக்க செய்யப்பட வேண்டி ஏற்படலாம்.

இந்தக் கட்டிகள் இருப்பது எவ்வாறு உறுதி செய்யப்படலாம்?

ஸ்கேனிங் மூலம்

இதற்கான மருத்துவ முறைகள் என்ன?


இது சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்படலாம். இது அறிகுறிகளை ஏற்படுத்தாத பெண்களிலே அகற்றப் பட வேண்டிய அவசியமில்லை.
ஆனால் அதிகம் ரத்தம் போகுதல் போன்ற பிரச்சினை ஏற்படுமானால் இவை அகற்றப்படலாம்.

இது இரண்டு விதமாக அகற்றப்படலாம் .ஒன்று கருப்பைப் பையோடு சேர்த்து அகற்றுதல்(Hysterectomy)
மற்றது கருப்பைப் பை இருக்க கட்டி மற்றும் அகற்றப்படுதல்(myomectomy). குறிப்பாக குழந்தை பெறுவதற்காக காத்திருக்கும் இளம் பெண்களில் கருப்பைப் பை இருக்க கட்டிகள் மட்டும் அகற்றப்படும்.

Friday, March 19, 2010

சுய இன்பம் (MASTUBATION)

Anonymous said...
நன்றி நண்பரே.. எனக்கு சில கேள்விகள் உண்டு. நான் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக சுய இன்பத்தில் ஈடு பட்டுள்ளேன், தற்போது அதிலிருந்து வெளி வர வேண்டுமென்று நினைக்கிறேன், மேலும், இதனால் எனக்கு திருமணம் ஆகி குழந்தை பெறுவதில் ஏதும் பிரச்சனை இருக்குமா என விளக்கவும்.
இந்த நண்பருக்காக எனது முந்திய ஒரு இடுகையை மீள் பதிவிடுகிறேன்..
சுய இன்பம் (MASTUBATION) தனியாகவே பாலியல் இன்பம் பெறுதலைக் குறிக்கும். நம்மில் பல பேர் சுய இன்பம் என்றாலே ஒரு குற்றச்செயல் போலதான் கருத்துக்களைச் சொல்வார்கள். வலைப் பூக்களில் கூட இது பற்றி எதிர்மறையான கருத்துக்கள்தான் நிறைய எழுதப்படுகின்றன.

எது எப்படியோ சில நிரூபிக்கப் பட்ட உண்மைகளை மட்டும் நான் சொல்லி விடுகிறேன்.

ஒரு ஆய்விலே அறியப் பட்டது 95 வீதமான ஆண்களும் 85 வீதமான பெண்களும் சுய இன்பம் பெறுவதை ஒத்துக் கொள்கிறார்கள். ஒத்துக் கொள்ளாதவர்களிலும் சுய இன்பம் பெறுபவர்கள் எத்தனையோ?

திருமணமானவர்கள் கூட இடையிடையே சுய இன்பத்தில் ஈடுபடுவதையும் அந்த ஆய்வு வெளிக்கொணர்ந்தது.

ஆக சுய இன்பம் என்பது இருபாலரிலும் காணப்படும் பொதுவான ஒரு இயல்பு.

ஆரம்ப காலத்தில் இந்த சுய இன்பம் என்பது பாலியல் வேறுபாட்டு குறையாகவே மருத்துவத்தாலும் பார்க்கப் பட்டது இருந்தாலும் இது தீங்கற்ற ஒரு சாதாரன செயலாகவே இப்போது நோக்கப் படுகிறது.

சுய இன்பம் காரணமாக உடல் ரீதியாக எந்தத் தீங்கும் இல்லை.இருந்தாலும் இது மன ரீதியாக சில பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் . குறிப்பாக சுய இன்பத்தில் அதிகம் நாட்டம் கொண்டு இல்லற இன்பத்தை தவிர்க்கும் போது குடும்பச் சிக்கல்கள் ஏற்படலாம்.

இது தவிர சுய இன்பம் எந்தவொரு பாதிப்பையும் ஒருவருக்கு ஏற்படுத்தும் என்பதில் எந்த உண்மையும் இல்லை.குறிப்பாக சுய இன்பம் பெறுவதால் ஆண்மைத் தன்மை குறையும் என்பதில் எந்த உண்மையும் இல்லை.
மற்றும் குழந்தை பிறப்பதிலும் எந்தச்  சிக்கலும் ஏற்படாது. ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபடும் போது வெளிவரும் விந்துகள் ஏற்கனவே உருவானவை. அவர் சுய இன்பத்தில் ஈடுபடா விட்டாலும் அவை தானாகவே வெளியேறிவிடும். இதனால் சுய இன்பத்தால் ஒருவரின் ஆண்மை குறைகிறது என்பதில் எந்த உண்மையும் இல்லை.




Wednesday, March 17, 2010

குழந்தை பிறப்புக்கு உதவும் கருவிகள்

ஒரு குழந்தையின் பிறப்பானது இரண்டு விதமாக நடைபெறலாம்.ஒன்று சாதாரணமாக யோனி (பெண்ணுறுப்பின் ) வழியான பிறப்பும். அடுத்தது சிசேரியன் எனப்படும் சத்திர சிகிச்சை மூலம் வயிற்றுப் பகுதி வெட்டப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப் படுத்தல்.

 ஒரு குழந்தை பிறக்கும் செயன்முறை labour (பிரசவம் ) எனப்படுகிறது. ஒரு பிரசவமானது ஒரு குழந்தை பிறப்பதற்கு பல மணி நேரங்களுக்கு முன்னமே தொடங்கி  விடுகிறது.அதாவது குழத்தை கருப்பையில் இருந்து படிப்படியாக கீழே இறங்கி வது வெளியேறும் செயன் முறையே பிரசவம்(labour)  ஆகும். இதற்கு பல மணி நேரங்கள் தேவைப்படுகிறது. இவ்வாறு பிரசவம் ஆரம்பித்த பின் சில வேளை குழதையின் பிறப்பு தாமதமாகலாம். இவ்வாறுதாமதமாகும் போது சில வேளை குழந்தை பிறப்பதற்கான வழி போதியதாக இருக்கும் போதும் குழந்தை பிறப்பது தாமதமாகலாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் குழந்தையின் பிறப்பை இலகுவாக்க forceps .. vaccum எனப்படும் ஆயுதங்கள் பாவிக்கப் படலாம்.இந்த ஆயுதங்கள் யோனி வழி உள்ளே செலுத்தப்பட்டு குழந்தையின் தலைப்பகுதியில் பொருத்தப்பட்டு குழந்தை கீழ் நோக்கி இழுக்கப்படும்.
இது நன்கு பயிற்றப்பட்ட வைத்தியரினாலேயே மேற்கொள்ளப்படும்.

இந்த ஆயுதங்கள் பொதுவாக இரண்டு வகையாக இருக்கின்றன.ஒன்று உலோகத்தால் ஆனா கீழே படத்தில் இருக்கின்ற forceps.




Forceps எனப்படும் கருவிகள்

இதன் வளைவுகள் குழந்தையின் தலைப்  பகுதியில் சரியாகப் பொருந்தும் படியாகவே அமைக்கப் பட்டிருக்கும்.இவை உள்ளே செலுத்தப்பட்டு தலையில் பொருத்தப்பட்டு குழந்தை கீழ் நோக்கி இழுக்கப்படும். 
இது இவ்வாறு முழுமையாக செலுத்தப்படாமல், இரு பகுதியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியும் உள்ளே செலுத்தப்பட்ட பின்பே இரு பகுதியும் பொருத்தப்படும் .









Forceps குழந்தையின் தலையில் பொருத்தப்பட்ட பின்



அடுத்ததாக அமுக்க முறையில் செயற்படும் vaccum எனப்படும் கருவிகள்.இவை ஒரு நுனியில் சிறு குடுவை( கோப்பை போல- cup) கொண்டிருக்கும் , இந்த குடுவைகள் குழந்தையின் தலையில் பொருத்தப்பட்டு மறு முனையில் எதிரான அமுக்கம் கொடுக்கப் படும் போது அவை குழந்தையின் தலையின் ஒரு பகுதியை உள் நோக்கி இழுத்து பொருந்தி விடுகின்றன.பின்பு குழந்தை கீழ் நோக்கி இழுக்கப்படும்.







Vaccum கருவிகள்








Vaccum மூலம் ஒரு குழந்தை பிறக்கிறது


இந்தக் கருவிகள் குழந்தை பிறப்பதற்கான வழி போதியதாக இருந்தால் மட்டுமே பாவிக்கப்படும். மாறாக பிறப்பு வழி போதியதாக இல்லாவிட்டால் சிசேரியன் செய்வதே உகந்தது. இது வைத்தியரினாலேயேதீர்மானிக்கப்படும்.


மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடலாமா?

மாதவிடாய் என்பது பெண்களிலே  சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்வு.இதன் போது கருப்பையின் உட்பகுதி பிரிந்து பெண்ணுறுப்பு வழியே வெளியேறும்.இந்த மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா என்று சந்தேகம் நிறையப் பேரின் மனதில் இருக்கலாம். இதுபற்றி பல மூட நம்பிக்கைகளும் நம்மிடையே இருக்கின்றன.

உண்மையில் மாதவிடாயின் போது உடலுறவு  கொள்வது ஒரு தகாத செயலா?
 

இல்லை 
.
உண்மையில் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதால் பல நன்மைகள் ஏற்படலாம். குறிப்பாக மாதவிடாய் காலத்திலேயே ஒரு பெண்ணுக்கு வயிற்று நோ , மன உளைச்சல் போன்றவை சாதாரணமாக ஏற்படலாம். இதுபற்றி மாதவிடாய்  காலத்து வலிகள் என்ற இடுகையில் பதிவிட்டிருந்தேன்.இவ்வாறான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண் மாதவிடாய் நேரத்தில் உறவில் ஈடுபட்டால் இந்தப் பிரச்சினைகள் குறையலாம்.அதாவது மாதவிடாய் நேரத்து அசௌகரியங்கள் உடலுறவில் ஈடுபடும் போது குறையலாம்.

மேலும் மாதவிடாய் நேரத்தில் உறவில் ஈடுபடும் போது மற்றைய நேரங்களை விட பெண்ணுக்கு அதிகம் திருப்தி ,கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.காரணம் மாதவிடாய் நேரத்தில் அவளது உறுப்புக்கள் அனைத்தும் ஹார்மோன்களால் மாற்றமடைந்து காணப்பட்டு உறவின் மகிழ்ச்சியைக் கூட்டலாம்.

மேலும் நம் சமூகத்தில் உள்ள பிழையான நம்பிக்கை போல இந்த காலத்தில் உறவில் ஈடுபடுவதால் ஆணுக்கோ அல்லது பெண்ணின் கருப்பைக்கோ எந்தவிதமான பாதிப்பும்ஏற்படுவதில்லை.

மற்றும் இந்தக் காலத்தில் உறவில் ஈடுபட்டால் கருத்தரிப்பதற்கான சந்தர்ப்பம் மிகவும் குறைவு. ஆனாலும் மிகவும் அரிதாக இந்தக் காலத்திலும் கருத்தரித்தல் நடைபெறலாம். ஆகவே குழந்தை பிறப்பைத் தவிர்க்க விரும்புபவர்கள் நிச்சயமாக கருத்தடை முறைகளை பாவிக்கவேண்டும்.

மாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபடுவதால் எந்த மாதிரியான தீங்குகள் ஏற்படலாம்?
மாதவிடாய் காலத்தில் உறவில் ஈடுபடும் போது பாலியல் நோய்கள் தொற்றுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.அதாவது ஆனிலோ அல்லது பெண்ணிலோ எயிட்ஸ்(Aids) ,சிபிலிஸ்(SYPILLIS) , ஈரழ் அலர்ச்சி B(hEPATITIS B) போன்ற நோய்கள் இருந்தால் இது மற்றவருக்குத் தொர்ருவதகான சந்தர்ப்பம் அதிகமாகலாம்.

மேலும் கொண்டம் பாவிப்பது இந்த நோய்களின் தொற்றைக் குறைப்பதால் இந்த நேரத்தில் தவறாமல் கொண்டம் பாவிப்பது உகந்தது.

அதானால் உங்களுக்கு நம்பிக்கைக்கு உரியவரோடு மட்டும் உறவு வைத்துக் கொண்டால் மாதவிடாய் காலத்திலும் உறவு வைத்துக் கொள்ளலாம். சிலபேருக்கு மற்றைய நாட்களை விட இதன்போது அதிக சந்தோசம் கிடைக்கலாம்.





உடலுறவின் போது ஏற்படும் தலைவலி

ஒரு நண்பர் தன்  மனைவிக்கு உடலுறவின் போது தலைவலி வருவதாகவும் அதற்கு என்ன காரணம் என்றும் ஒரு பின்னூட்டத்திலே கேட்டிருந்தார்.

உண்மையில் உடலுறவின் போது தலைவலி ஏற்படலாமா?
ஆம். சில பேருக்கு உடலுறவின் போது தலைவலி ஏற்படலாம். இது coital cephalgia  எனப்படுகிறது. இது பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களிலே அதிகம் ஏற்படுவதாக தரவுகள் கூறுகின்றன. இதற்குரிய சரியான காரணம் தெரியாவிட்டாலும், உடலுறவின் போது அதிகம் குருதி உடலுறவுக்குத் தேவையான உடலின் பாகங்களுக்குச் செல்வதால் மூளைக்கு செல்லும் குருதியின் அளவு குறைவதால் இவ்வாறு தலைவலி ஏற்படலாம் என்று சொல்லப் படுகிறது.

சிலபேருக்கு இது  ஆரம்ப காலத்தில் மட்டும் இருந்து பின்பு மறைந்து விடலாம். சிலரில் இந்தப் பிரச்சினை தொடர்ச்சியாக இருக்கலாம்.

ஆரம்பத்தில் இவ்வாறு தலைவலி வரும்  போது நீங்கள் பரசிட்டமோல் போன்ற நோ நிவாரணிகளை பாவித்துப் பார்க்கலாம். ஆனால் தொடர்ந்து இது ஒரு பிரச்சினையாக இருக்குமானால் ஒரு வைத்தியரை நாட  வேண்டியது அவசியமாகும். ஏனென்றால் வெறுமனே இது உடலுறவின் பொது மட்டும் ஏற்படும் தலைவலியாக இல்லாமல்,வேறு காரணத்தால் ஏற்படுகிற தலைவலியாக கூட இருக்கலாம்.

குறிப்பாக தலையில்(மூளையில் ) ஏற்படுகிற கட்டிகளால் ஏற்படுகிற தலைவலியாக கூட இருக்கலாம்.

அதுதவிர தலைவலியோடு வாந்தி வருதல், வலிப்பு வருதால் அல்லது உடலுறவு தவிர்ந்த மற்றைய நேரங்களிலும் தலைவலி ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்தியரை நாடவேண்டியதுஅவசியமாகும்.

Tuesday, March 16, 2010

கருப்பையினுள்ளே இறந்துபோகும் குழந்தைகள்

கருப்பையில் இருக்கும் போதே குழந்தை குழந்தை இறந்துவிடலாம். ஒரு குழந்தை உருவாகி 28 வாரங்களுக்கு பின்பு கருப்பையிலே இறந்து விட்டால் அது intra uterine death(IUD) எனப்படுகிறது.

அதாவது 28 வாரங்கள் (7 .மாதம் ) ஆன குழந்தைகள் இறந்தால் அது குழந்தையின் இறப்பு எனப்படுகிறது. அதற்கு முந்தி இறந்தால் அது கருக்கலைதை(miscarriage or abortion ) எனப்படுகிறது.

என்ன காரணத்தினால் இந்தக் குழந்தைகள் இறக்கலாம்?
உள்ளே இருக்கும் குழந்தைக்கு தேவையான அத்தியாவசிய பதார்த்தங்கள் அனைத்தும் தொப்புள் கொடியின்(umbilical cord) ஊடாகவே குழந்தைக்கு கிடைக்கிறது.சிலவேளை இந்த தொப்புள் கொடி குழதையின் கழுத்தைச் சுற்றிக் கொள்வதால் அதனூடாக ரத்த ஓட்டம் நடைபெறாமல் குழந்தை இறக்கலாம்.

இந்த தொப்புள் கொடி சூழ் வித்தகம் (placenta) மூலமே தாயில் இருந்து ரத்தத்தைப் பெற்றுக் கொள்ளும். இந்த சூல்வித்தகம் கருப்பையில் ஒட்டிக் கொண்டு தாயில் இருந்து குழந்தைக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொடுக்கும். இந்த சூழ் வித்தகம் குழந்தை பிறந்த பின்பே கருப்பையில் இருந்து பிரியும். சில வேளை இது
குழந்தை பெற முன்பே பிரிந்து விட்டால் குழந்தை இறந்து விடலாம்.






போதிய வளர்ச்சியில்லாத குழந்தைகள் கருப்பையினுல்லேயே இறந்து விடலாம்.

குழந்தையின் உடலிலே பிறப்புக் குறைபாடுகள் ஏதாவது இருப்பதால் குழந்தை இறக்கலாம்.


இப்படி பல காரணங்கள் இருந்தாலும் எந்தக் காரணமும் இல்லாமலும் குழந்தை சடுதியாக கருப்பையினுல்லேயே இறந்து விடலாம்.

எப்படியான தாய்மாரின் குழந்தை இப்படி இறப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம்?
35வயதிற்கு மேற்பட்ட தாய்மார்
நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட தாய்மார்
உயர் குருதியமுக்கத்தால் பாதிக்கப்பட்ட தாய்மார் (pregnancy induced hypertension)
போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்ட தாய்மார்
மது மற்றும் புகைப் பிடிக்கும் தாய்மார்

இப்படி பல காரணங்கள் இருந்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லாத தாய்மாரின் குழந்தைகளும் சடுதியாக இறந்து விடலாம

இதைத் தடுப்பதற்கான வழிகள்?
முற்று முழுதாக இதைத் தடுக்க முடியாவிட்டாலும் மேலே நான் சொன்ன பிரச்சினைகள் உள்ள தாய்மார்கள் தொடர்ச்சியாக வைத்தியரைச் சந்தித்து தங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் மற்றைய விடயங்கள் சரியாக இருக்கிறதா என்பதை அவதானிக்க வேண்டும்.

மேலும் நீரழிவு நோயினால் மற்றும் உயர் குருதியமுக்கத்தால் பாதிக்கப்பட்ட தாய்மாரின் குழதைகள் கொடுக்கப்பட்ட திகதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னே பிறக்க வைப்பது (மருத்துவ முறைமூலம்) உகந்தது. ஏனென்றால் இந்தக் காலத்திற்குப் பிறகு இந்தத் தாய்மார்களில் குழந்தைகள் சடுதியாக இறப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

கருப்பையினுள்ளே போதிய வளர்ச்சியைப் அடையாத குழந்தைகளை கூட குறிப்பிட்ட காலத்திற்கு முன்னமே பிறக்க செய்ய வேண்டி ஏற்படலாம்.




ஸ்கேனிங் செய்வது குழந்தைக்குப் பாதிப்பா ?

பதி said...

LASER தொழில்நுட்பத்தில் இயங்கும் 3D scaning வசதியினை உபயோகிப்பதினால் கருவிலிருக்கும் குழந்தைக்கு ஆபத்து ஏதும் இல்லையா?

இது முந்தைய என் பதிவிலே  ஒரு நண்பர் கேட்ட கேள்வி.


அவருடைய சந்தேகம் ஸ்கேனிங் செய்து பார்ப்பதால் குழந்தைக்கு பாதிப்பு இல்லையா என்பதாகும். அவருக்கு மட்டும்மல்ல நிறையப் பேருக்கு இந்தச் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.
உண்மையில் அந்த நண்பர் சொல்லுவது போல இது லேசர் மூலம் இயங்கும் கருவி அல்ல.
ஸ்கேனிங் என்பது வெறும் சத்த அலைகளை(sound waves) வைத்து இயங்கும் கருவியாகும். அதாவது சத்த அலைகளை செலுத்தி அவை தெறித்து வருவதை உணர்ந்து படமாக கொடுக்கும்.இதனால்தான் அவை ultrasound scaning   இந்த சத்த அலைகளால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.


ஆனால் எக்ஸ்ரே(X-ray) எடுப்பதன் மூலமோ அல்லது CT ஸ்கேனிங் எனப்படும் ஸ்கேன் செய்வதாலோ குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம். இவற்றிலே கலங்களைப் பாதிக்கும் கதிர் வீச்சுக்கள் பாவிக்கப்படுவதே காரணமாகும் .

பிறப்பு உறுப்பிலே இருந்து வெளிப்படும் திரவங்கள்

ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலே(VAGINA) இருந்து திரவம் (நீர் போன்ற ) வெளிப்படுதல் எல்லாப் பெண்களாலும் உணரப்படும் ஒரு நிகழ்வு. பிறப்பு உறுப்பிலே உள்ள சுரப்பிகள்(GLANDS) இந்த திரவத்தன்மையான பதார்த்தங்களை வெளியிட்டு பிறப்பு உறுப்பிலே ஈரத்தன்மையை பேணும்.

இவ்வாறு ஈரத்தன்மை பேணப்படுவது அந்த பெண்ணின் உறுப்பு சுகாதரனமாக்(HEALTHY AND CLEAN) இருப்பதற்கு அத்தியாவசியமாகும். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்த சுரப்பிகளின் தொழிற்பாடு குறைவதால் அவர்களின் பிறப்பு உறுப்பு உலர்ந்த நிலையை அடைந்து காணப்படும். இதனாலேயே அவர்களுக்கு பாலியல் தொடர்பிலும் நாட்டம் குறையும். மேலும் பல அசொகரியங்க்களை இது கொடுக்கலாம்.

இவ்வாறு சாதாரணமாக வெளிப்படும் திரவமானது , சில பெண்களுக்கு மனரீதியான உளைச்சலைக் கொடுக்கலாம். தங்களுக்கு ஏதொ நோய் இருக்கிறது அதனாலேதான் இந்த நிலை ஏற்படுகின்றது அவர்கள் கூச்சப்பட்டு வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளே வருந்திக் கொண்டிருக்கலாம்.


உண்மையில் பிறப்பு உறுப்பிலே இருந்து வெளிவருகின்ற திரவங்கள் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெறால் சில நோய்களில் கூட இவ்வாறு திரவங்கள் வெளிவரலாம்.

எவ்வாறு நோய்களினால் வெளிவருகின்ற திரவங்களை சாதாரண திரவங்களில் இருந்து வேறு பிரித்தறிவது?

சாதாரணமாக வெளிவருகிற திரவமானது தெளிவானதாக(CLEAR) எந்த விதமான கெட்ட மனமும் இல்லாததாக இருக்கும்.இது அவர்களின் உள்ளாடையில் பட்டு உலரும் போது பால்(MILKY) போன்ற அல்லது தெளிவானதாக இருக்கும்.இதுவே வெள்ளை படுதல் என்று நம் பெண்களால் அழைக்கப் படுகிறது.




சாதாரணமாக வெளிவரும் திரவம்

மேலும் இந்த திற வெளிப்பாடானது மாதவிடாயின் போது, உடலுறவின் போது, கர்ப்பம் தரித்திருக்கும் போது போன்ற சந்தர்ப்பங்களில் அதிகரிக்கலாம்.


ஆனால் இவ்வாறு இல்லாமல் திரவமானது பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்குமானால், கெட்ட மனமுடையதாக இருக்குமானால், அல்லது தயிர் போன்று தடித்த கட்டி(THICK) போன்ற திரவமாக இருக்குமானால் இது குறிப்பிட்ட சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இவ்வாறன சந்தர்ப்பத்தில் வைத்தியரை நாடி தகுந்த மறுத்ததை எடுத்து சில நாட்களுக்கு உட்கொண்டாலே போதும் இந்தப் பிரச்சினை சுகமாகி விடும். இது பொதுவாக கிருமிகளின் தொற்றுகளால் ஏற்படும்.


மேலும் இந்தத் திரவமானது மிகவும் சகிக்கமுடியாத மனமுடையதாக , அல்லது இடையிடையே ரத்தம் போகும்போது இது புற்று நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

ஆக பென்னுருப்பிலே இருந்து திரவம் வெளிப்படுகின்றது என்று அஞ்சினால், முதலில் அதன் தன்மையை அவதானியுங்கள்.

கீழே வரும் மாறன்கள் உங்கள் பிறப்பு வழித் திரவத்தில் இருந்தால் உடனேயே வைத்தியரை நாடுங்கள்.
  1. தயிர் தன்மையான வெள்ளை கட்டிகள் வெளிவருதல்
  2. பச்சை அல்லது மங்க்ச்சல் நிறத் திரவம் வெளிவருதல்
  3. சகிக்க முடியாத மனம் கொண்ட திரவம் வெளிவருதல்
  4. அதிக ரத்தம் போகுதல் அல்லது மாதவிடாய் அல்லாத நேரத்தில் ரத்தம் போகுதல்
இவை எதுவும் இல்லாமல் சாதரணமான பால் போன்ற அல்லது தெளிவான திரவங்கள் வெளிவந்தால் இது உங்களில் மட்டுமல்ல எல்லாப் பெண்களிலும் உங்கள் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருக்க ஏற்படுகின்ற சாதாரணமான நிகழ்வே!
இதற்காக அச்சப் படத்தேவை இல்லை.


Monday, March 15, 2010

கருப்பையில் இருக்கும் குழந்தைகள் ( நேரடி படம் /வீடியோ)

மருத்துவ உலகின் அபரிதமான வளர்ச்சியில் நாம் நினைத்துக் கூடப் பார்க்காத விடயங்கள் நடக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் குழந்தையின் முகத்தை பார்ப்பதற்காக அந்தக் குழந்தை பிறக்கும் வரை காத்திருக்க வேண்டியது அந்தக்காலம்.

இப்போது கருவிலே இருக்கும் போதே குழந்தையின் முகத்தை பார்க்கும் அளவுக்கு மருத்துவம் முன்னேறி விட்டது.
ஆமாம் 3D ஸ்கேனிங் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முகத்தை கருப்பையில் இருக்கும் போதே பார்க்கலாம்.



ஸ்கேனிங் மூலம் எடுக்கப்பட்ட கருப்பையில் உள்ள குழந்தையின் படம்

முகத்தைப் பார்ப்பது மட்டுமல்ல குழதையின் உடலில் குறைபாடுகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அடிமுதல் நுனிவரை பார்த்தறிய இந்த ஸ்கேனிங் வசதி உதவுகிறது.


கருப்பையில் இருக்கும் குழந்தை இந்த ஸ்கேனிங்கில் எப்படி தெரியும் என்று கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.

இலங்கையில் இந்த ஸ்கேனிங் செய்வதற்கு கிட்டத்தட்ட ஐந்து ஆயிரம் அளவில் செலவாகும்.






பிறக்கிற குழந்தை ஆணா பெண்ணா என்பது ஆணிலேதான் தங்கியுள்ளது

இன்றும் பெண் குழந்தைகளைப் எடுத்தாலே பெண்களை குறை சொல்லும் மூட நம்பிக்கை இன்னும் நம் சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

உண்மையில் ஒரு குழந்தை உருவாகும் போது அது ஆணா அல்லது பெண்ணா என்று தீர்மானிப்பது எது?

மனித உடலின் இயல்புகள் அனைத்தும் ஜீன் (gene) எனப்படும் பரம்பரை அலகுகளாலே தீர்மானிக்கப் படுகின்றன. இந்த ஜீன்கள் நிறமூர்த்தம்(chromosome) எனப்படும் அமைப்பிலே சேர்ந்து கலங்களின்(cell) கருவினுள்ளே இருக்கும்.

மனிதனில் மொத்தமாக 46 (23 சோடி ) நிறமூர்த்தங்கள் இருக்கும். இந்த நிறமூர்த்தங்களில் இருக்கும் ஜீன்களே ஒரு மனிதனின் இயல்புகளை தீர்மானிக்கும். அதாவது ஒருவரின் உயரம், நிறம், பால் போன்ற அனைத்து இயல்புகளும் இந்த ஜீன்களிலே ஏற்கனவே பதியப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு இயல்பையும் தீர்மானிக்கும் ஜீன்கள் சோடியாகவே காணப்படும்.

குழந்தை உருவாக்கம் நடைபெறுவது ஆணின் விந்தும் பெண்ணின் முட்டையும் கருக்கட்டுவதால் என்று விளக்கமாக முந்திய இடுகைகளிலே பதிவிடிருந்தேன்.

மற்றைய மனிதனின் கலங்கள் போல் ஜீன்கள் சோடியாக இல்லாமல் தனியாகவே இந்த விந்து மற்றும் முட்டைக் காலங்களிலே இருக்கும். தனியாக இருக்கும் இந்த ஜீன்கள் விந்தும் முட்டையும் கருக்கட்டும் போது மீண்டும் சோடியாகி ஒரு மனிதனை உருவாக்கும்.

மனிதனின் பால் இயல்புகளை தீர்மானிக்கும் ஜீனானது XX அல்லது XY என்ற சோடிகளாக இருக்கலாம்.

அதாவது ஒருவரின் ஜீன் அமைப்பு XY என்றால் அது ஆண் குழந்தையாக உருவாகும் ஜீன் அமைப்பு XX என்றால் அது பெண் குழந்தையாக உருவாகும்.

அதாவது பெண்ணிலே இருக்கும் ஜீன் அமைப்பு XX ஆகவே ஒரு முட்டை உருவாகும் போது இந்த XX என்ற ஜீன் சோடி பிரிந்து முட்டையிலே X என்ற ஒரு ஜீனே இருக்கும்.

ஆனால் ஆண்களில் உள்ள XY என்ற ஜீன் சோடி பிரியும் போது அரைவாசி விந்துகள் X என்ற ஜீனைப் பெற்றுக் கொள்ளும் மற்றையவை Y என்ற ஜீனைப் பெற்றுக் கொள்ளும்.

இனி கருக் கட்டலின் போது பெண்ணின் முட்டையிலே உள்ள X ஜீனோடு ஆணின் X ஜீனைக் கொண்ட விந்து கருக்கட்டுமானால் உருவாகும் குழந்தை ,முட்டையின் X மற்றும் விந்தின் X என்ற ஜீன்கள் ஒன்று சேர்வதால் XX என்ற அமைப்பைப் பெற்று பெண் குழந்தையாக மாறும்.

மாறாக ஆணின் Y என்ற ஜீனைக் கொண்ட விந்துகள் முட்டையோடு கருக்கட்டினால் குழந்தை XY என்ற ஜீன் சோடியைப் பெற்று ஆணாக உருவாகும்.

ஆக குழந்தை ஆணாக உருவாகுவதா அல்லது பெண்ணாக உருவாகுவதா என்பது
அப்பாவின் விந்தில் X ஜீனைக் கொண்ட விந்தா அல்லது Y ஜீனைக் கொண்ட விந்த கருக்கட்டுகிறது என்பதிலேயே தங்கியுள்ளது.
இதற்கு பெண் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டாள்.

இனியாவது பெண் குழந்தை பெற்று விட்டாள் என்று பெண்களை திட்டாதீர்கள். அப்படியும் திட்ட வேண்டுமென்றால் ஆண்களைத் திட்டுங்கள்.

முந்தி விந்து வெளிப்படுதல் (premature ejaculation)

தாம்பத்திய உடலுறவில் ஏற்படுகின்ற திருப்த்தியானது இரு மனங்கள் சம்பந்தப்பட்டது. உறவில் ஈடுபடுகின்ற இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதாக , மற்றவரை திருப்திப் படுத்துபவராக இல்லாமல் இருப்பதே நிறைய இல்லற வாழ்வின் முறிவுகளுக்கு காரணம் ஆகிவிடுகின்றது.

தன் துணையை திருப்த்திப் படுத்த முடியாமல் ஆண்களை மனசங்கடத்திற்கு உள்ளாக்கும் ஒரு பிரச்சினையே Premature Ejaculatin எனப்படுகிறது. தமிழிலிலே சொல்வதானால் தம்பதிகள் உண்மையான திருப்தி நிலையை அடைய முன்பே ஆண் உச்ச நிலையை அடைந்து , சுக்கிலப்பாயத்தை வெளியேற்றி விடுதல்.

இவ்வாறு பெண் உச்ச நிலை அடைய முன்பே ஆண் உச்ச நிலை அடைவது , பெண்ணுக்கு போதிய திருப்தியை அளிக்காமல் சங்கடப்படுத்துவதுடன், ஆணின் மனதிலும் தன்னால் துணையை சந்தோசப் படுத்த முடியவில்லையே என்ற தாழ்வு மனநிலையை உருவாக்கி விடுகிறது. இதுவே அவர்களின் இல்லறத்தின் முறிவுக்கு முதல் படிநிலையாக அமைந்து விடலாம்.

உண்மையில் இது ஒரு பெரிய பிரச்சினையா?

இல்லை
இந்த முந்தி விந்து வெளிப்படும் நிகழ்வானது ஆண்களினிடையே மிகவும் பொதுவாகக் காணப்படும் பிரச்சினையாகும். நூறு ஆண்களை எடுத்துக் கொண்டால் முப்பது பேர் இந்தப் பிரச்சினையைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

என்ன காரணத்தால் இது ஏற்படுகிறது?

இது உடல் ரீதியாக உள்ள எந்தப் பிரச்சினையாலும் ஏற்படுவதில்லை. முற்று முழுதாக மனம் சம்பந்தப்பட்டதாகும். ஆணிலே ஏற்படுகின்ற அச்ச நிலை, ஆரம்ப காலத்தில் ஏற்படும் பதட்டம், தன்னால் ஒரு பெண்ணை திருப்தி படுத்த முடியுமா என்ற சந்தேகங்களே இந்த நிலையைத் தோற்றுவிக்கிறது.

இதனாலேயே உறவில் ஈடுபடத்தொடங்கிய காலத்தில் அநேகமான ஆண்கள் இதனால் பாதிக்கப் படுகின்றார்கள். இருந்தாலும் சற்று நாள் செல்ல அநேகமான ஆண்கள் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட ,சற்று தாழ்வு மனநிலை கொண்டவர்கள் தொடர்ந்தும் இதனால் பாதிக்கப் பட்டவர்களாகவே இறுந்து விடுகிறார்கள்.

சுய இன்பத்தில்(mastubation) ஈடுபடுவதால் இந்த நிலை ஏற்படுமா?

இல்லை
சுய இன்பத்தில் சுய இந்த நிலை உருவாகலாம் என்று ஒரு பிழையான கருத்தை நம்பும் ஆண்கள் ,தாங்கள் சிறுவயதில சுய இன்பத்தில் ஈடுபட்டதை எண்ணி அதனால் தங்களால் தன் துணையை திருப்த்திப் படுத்த முடியாமல் போய்விடும் என்ற அச்சத்தினாலேயே இந்தப் பிரச்சினைக்கு உள்ளாகி விடுகிறார்கள்.

இதற்கு என்ன தீர்வு?

இந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவருவதற்கு பெண்ணின் துணையும் நிச்சயமாகத் தேவை.

முதலில் ஆண் மனதளவில் தன்னைத் திடப்படுத்திக் கொள்வதோடு மனதை இலகுவாக்கிக் கொள்ள வேண்டும்.

எடுத்த எடுப்பிலேயே புணர்ச்சியை நோக்கி செல்லாமல் அதற்கு முந்திய Foreplay எனப்படும் தொடுகை செய்கைகள் மூலம் உணர்வுகளைப் பரிமாரிக்கொள்ளவேண்டு. இதன் போது ஆணுறுப்பிலே தொடுகை ஏற்படுவதை இறுதிவரை தவிர்க்க வேண்டும்.

அடுத்ததாக ஆண் உறவில் ஈடுபடும் போது உச்சநிலை நெருங்கி வரும்போது புணர்ச்சிய நிறுத்தி சற்று மனதை இலகுவாக்கி(relax) மீண்டும் புணர்ச்சியை ஆரம்பித்து மீண்டும் உச்ச நிலை அடையும் நிலை வரும் போது புணர்ச்சியைத் தவிர்த்து சற்று ஓய்வெடுத்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நாளடைவில் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

அடுத்தததாக புணர்ச்சியில் ஈடுபடும் போது உச்சநிலை நெருங்கி வரும்போது அந்த ஆணோ அல்லது அவனது துணையோ ஆண்குறியின் முனைப் பகுதியை சிறிது நேரம் அழுத்திப் பிடிக்க வேண்டும். மீண்டும் புணர்ச்சியில் ஈடுபட்டு உச்சநிலை நெருங்கி வரும்போது மீண்டும் முனைப்பகுதியை அழுத்திப் பிடிக்க வேண்டும்.
இதற்கு பெண்ணின் ஒத்துழைப்பும் நிச்சயம் தேவை.

இவ்வாறான செயல்கள் மூலமும் தீர்வு கிடைக்காவிட்டால் தம்பதிகள் இருவரும் பாலியல் மனநல வைத்தியர் ஒருவரை நாடி sextherapy ஆலோசனையைப் பெறுவது உதவியாக இருக்கும்.

இது தொடர்ந்தும் பாரிய பிரச்சினையாக இருக்குமானால் தகுந்த வைத்தியரினால் பரிந்துரைக்கப்பட்ட சில மருந்துகள் பாவிக்கப் படலாம்.




Sunday, March 14, 2010

யோனி வழியே வெளிவரும் கருப்பைகள்

கருப்பை இறக்கம் (uterovaginal prolapse)என்பது வயதான பெண்களில் ஏற்படுகின்ற பொதுவான ஒரு பிரச்சனையாகும். இதன் போது கருப்பைப் பையானது பெண்ணின் யோனி வழியே கீழ் இறங்கும்.

கீழிறங்கிய கருப்பை பெண்ணின் பிறப்பு உறுப்பினுள்ளே (vagina)இருக்கலாம் அல்லது சற்று தீவிரமடையும் போது பெண்ணுறுப்பின் வெளியே கருப்பையின் ஒருபகுதி வெளியே வரலாம் , இந்தப் பிரச்சனை தீவிரமடையும் போது கருப்பை முழுமையாக வெளியேறலாம்.




முற்று முழுதாக கீழிறங்கிய கருப்பை

இந்தப் நோயானது அதிகமான குழந்தைகளை சாதரணமாக பெற்று எடுத்தவர்களிலேயே பொதுவாக ஏற்படும். அதாவது சீசர் முறை மூலம் குழந்தைகளை பெற்று எடுத்தவர்களுக்கு இந்த நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் குறைவு.

மேலும் அதிகமான குழந்தைகளைபிறப்பு வழியே பெற்றெடுக்கும் போது இந்த கருப்பை இறக்கம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.


சிலவேளை இந்த கருப்பை இறக்கத்தோடு மூத்திரப்பையும்(blader) சேர்ந்து கீழ் இறங்கலாம். சில பெண்களுக்கு கருப்பையோடு குடலின் ஒரு பகுதியும் சேர்ந்து கீழ் இறங்கலாம்.



கருப்பையின் ஒரு பகுதியோடு சிறுகுடலின் ஒரு பகுதியும் இறங்கியுள்ளது


அரிதாக கருப்பை இறக்கம் இல்லாமல் மூத்திரப் பை மட்டும் கீழ் இறங்கலாம்.

இப்படி கருப்பை பை இறக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் யோனி வழியே pessaryஎனப்படும் வளையங்களை உட்செலுத்தி தற்காலிக தீர்வு வழங்கப்படலாம்.



தற்காலிக தீர்வு வழங்கும் வளையங்கள்


ஆனாலும் நிரந்தரமாக இந்த பாதிப்பில் இருந்து மீள வேண்டுமானால் சத்திர சிகிச்சை மூலம் கருப்பைப் பை நிரந்தரமாக அகற்றப் பட வேண்டும்.

பிறப்பு உறுப்பின் ஊடாக கருப்பை அகற்றப் படுகிறது

செயற்கையாக விந்துகளை பெண்ணுறுப்பில் செலுத்தும் முறை(வீடியோவுடன்)

ஒரு குழந்தை எப்படி உருவாகிறது என்று முன்னைய இந்த இடுகையில் பதிவிட்டிருந்தேன்.ஒரு குழந்தை உருவாகுவதற்கு பெண்ணிலே உருவாகியிருக்கும் முட்டையை ஆணின் விந்தணு போய் கருக்கட்ட வேண்டும். இதற்கு அந்த ஆணின் விந்தணுக்கள் பெண்ணின் யோனி வழியே உட்செலுத்தப் பட வேண்டும். இது சாதாரணமாக உடலுறவின் போது நடைபெறும்.

ஆனாலும் சில தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பது பிற் போகும் போது , அல்லது அந்த ஆணின் சுக்கிலப் பாயத்தில உள்ள விந்துகளின் திறன் (குறிப்பாக விந்துகளின் எண்ணிக்கை மற்றும் அசையும் தன்மை ) குறைவாக இருக்கும் போது உடலுறவின் போது செலுத்தப் படும் விந்துகள் மூலம் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகுவது தடைப் படலாம்.

இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் கருக்கட்டலை இலகுவாக்குவதற்காக INTRA UTERINE INSEMINATION(IUI) எனப்படும் செயன் முறை பயன்படலாம்.

இந்த முறையின் போது ஆணின் விந்தணுக்கள் ஒரு குழாய் மூலம் பெண்ணின் கருப்பைப் பையினுள் செலுத்தப் படும்(வைத்தியரினால் )

இதற்காக கணவன் சுய இன்பத்தின் மூலம் சுக்கிலப்பாயத்தை சேகரித்து கொடுக்க வேண்டும். இது நேரடியாக கருப்பையினுள் குழாய் மூலம் வைத்தியரினால் செலுத்தப்படும்.


கருப்பையினுள் விந்துகளை செலுத்த பயன்படும் குழாய்

இந்த செய்முறை மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பத்தை மேலும் அதிகரிக்க கணவனின் சுக்கிலப் பாயமானது பதப்படுத்தப்(PROCESSING) பட்ட பின்பு செலுத்தப்படலாம். அதாவது அவரது சுக்கிலப் பாயத்தில் உள்ள திறன் கூடிய விந்துகளை மட்டும் பிரித்து அனுப்புவதன் மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பம் அதிகரிக்கலாம்.


கருப்பையினுள் செலுத்தப்படுவதை விளக்கும் படம்.


சில வேளை ஆணின் விந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அல்லது சுக்கிலப் பாயத்தில் விந்து இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அந்த தம்பதி ஏற்றுக் கொண்டால் வேறு ஒரு நபரின் சுக்கிலப் பாயத்தை பெற்று பெண்ணின் கருப்பைப் பைக்குள் செலுத்தி குழந்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு விந்துகள் செலுத்தப்படுவது பெண்ணிலே முட்டை உருவாகும் நேரத்திலே மேற்கொள்ளப்படும். சில வேளை அந்தப் பெண்ணுக்கு முட்டை உருவாக்கத்தை தூண்டும் மருந்துகள் கொடுக்கப்பட்டு பின்பு ஸ்கேனிங் மூலம் முட்டை உருவாக்கி உள்ளது என்று உறுதி செய்த பின்பே கொடுக்கப்படும்.

ஸ்கேனிங் வசதியில்லாத சில வைத்திய சாலைகளில் பெண்ணின் மாதவிடாய் காலத்தை கணித்து அதற்கேற்ப முட்டை உருவாகும் தினத்தை அனுமானித்த பின்பு இவ்வாறு விந்துகள் செலுத்தப் படலாம்.

இது பற்றி ஒரு வீடியோ

Saturday, March 13, 2010

ஆண்களின் மலட்டுத் தன்மையை அறிவது எப்படி?

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படலாம். பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களிலே மலட்டுத்தன்மை ஏற்படும் சந்தர்ப்பம் குறைவு என்பதால் குழந்தை பிறக்காவிட்டால் முழுக் குற்றத்தையும் மனைவி மேலேயே சுமத்தி விடுகிறது இந்தச் சமூகம்.

ஆனாலும் மருத்துவ ரீதியாக மலட்டுத்தன்மைக்குரியவர் கணவனா அல்லது மனைவியா என அறிந்துகொள்ள இப்போது ஏராளமான வசதிகள் உள்ளன. குழந்தை உருவாகாமல் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி மட்டுமல்ல கணவனும் தங்களை மருத்துவச் சோதனைக்கு உட்படுத்திக் கொள்வது கட்டாயமாகும். ஏனென்றால் இன்றைய மருத்துவ வளர்ச்சியில் அந்தக் குறைபாடுகளை போக்கிக் கொள்ள நிறைய வசதிகள் வந்துவிட்டன .

சரி , ஆணிலே மலட்டுத் தன்மை உள்ளதா என்று எவ்வாறு பரிசோதிக்கப்- படுகிறது என்று பார்ப்போம்.

ஒரு குழந்தையின் உருவாக்கத்திற்கு ஆணிலே இருந்து வெளிவரும் விந்து (sperm) எனப்படும் உயிரணு பெண்ணின் முட்டை (ova) எனப்படும் உயிரை அடைந்து கருக்கட்டப் பட வேண்டும்.

பெண்களிலே முட்டையானது மாதவிடாய்க் காலத்தின் நடுப்பகுதியிலே சூலகம்(ovary) எனப்படும் உறுப்பில் இருந்து வெளிவரும் , இது வெளி வந்து மூன்று நாட்களுக்குள் அந்த பெண் உறவில் ஈடுபட்டு அவளின் உறுப்பின் உள்ளே ஆணின் விந்தணு செலுத்தப்பட்டால் அது அந்த முட்டையை கருக்கட்ட சந்தர்ப்பம் உள்ளது.

பெண்களிலே சாதாரணமாக ஒரு நேரத்தில் ஒரு முட்டையே (ova) வெளிவரும். ஆனால் ஆண்களில் அப்படியல்ல ஒரு நேரத்தில் மில்லியன் கணக்கான விந்தணுக்கள் வெளிவரும், ஆனாலும் இதில் ஒன்றே முட்டையை சென்றடைந்து கருக்கட்டி குழந்தையாகும்.


இந்த விந்தணுவானது ஆணின் உறுப்பிலே இருந்து வெளிவரும் சுக்கிலப் பாயம் (seminal fluid) எனப்படும் திரவத்தில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும்.அதாவது ஆண் உடலுறவின் போது வெளியிடும் திரவமானது சுக்கிலப் பாயம்(seminal fluid) எனப்படுகிறது .இந்த சுக்கிலப் பாயத்திலே விந்துகளோடு அவை உயிர் வாழ்வதற்கான அத்தியாவசியமான பதார்த்தங்களும் நிரம்பி இருக்கும்.



ஒரு விந்தின் உருவம் இப்படித்தான் நுணுக்குக் காட்டியில் தெரியும்

ஆணின் குழந்தை உருவாக்குவதற்குரிய தன்மையை அறிய இந்த சுக்கிலப் பாயம் பயன் படுத்தப்படுகிறது.

சுக்கிலப் பாயத்தில் இருக்கும் விந்துகளின் எண்ணிக்கை(sperm count) , அந்த விந்துகளின் அசையும் தன்மை(motility), அந்த விந்துகளின் உருவ அமைப்பு(morphology) என்பவையே முக்கியமாக சோதிக்கப் படுகின்றன. இவை அனைத்தும் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக இருக்கும் போதே அந்த ஆனால் ஒரு குழந்தையை உருவாக்க முடியும்.
அதாவது விந்துகளின் எண்ணிக்கை மட்டும் தேவையான அளவு இருந்தால் போதாது அவை உருவ ரீதியாக உகந்ததாகவும், அசையும் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

பரிசோதனைக்காக இந்த சுக்கிலப் பாயம் எப்படிப் பெறப்படுகிறது?


சுக்கிலப் பாயத்தில் மிதக்கும் விந்துகள்

ஆண் சுய இன்பத்தில் (mastubation)ஈடுபட்டு வெளிவருகின்ற திரவத்தை ஆய்வு கூடத்தில்/வைத்திய சாலையில் இருந்து பெற்றுக் கொண்ட பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கவேண்டும்.
உடலுறவின் போது வெளிவரும் திரவத்தை கொண்டம் மூலம் சேகரித்தும் கொடுக்கலாம்.ஆனால் அதற்கான கொண்டம் எந்த இரசாயனப் பதார்த்தமும் கொண்டிராததாக இருக்க வேண்டும்.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட சுக்கிலப் பாயம் ஒரு மணி நேரத்தினுள் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும்.

முக்கியமாக சோதனைக்காக சுக்கிலப் பாயத்தை சேகரிக்கும் முன் மூன்று நாட்களுக்கு அந்த ஆண் சுய இன்பத்திலோ , உடலுறவிலோ ஈடுபடாமல் இருப்பது முக்கியம்.