Showing posts with label வளர்ச்சி. Show all posts
Showing posts with label வளர்ச்சி. Show all posts

Tuesday, November 30, 2010

நாம் எப்படி வளர்கிறோம் ?

மனிதனின் வளர்ச்சி(Growth) எனப்படுவது` தொடர்ச்சியான உடலியல் மாற்றங்கள் மூலம் ` உயரத்தில் ஏற்படுகிறஅதிகரிப்பாகும். உடல் நிறை அதிகரித்தல்,நகம் வளர்தல்,மயிர் வளர்தல் என்பவை உடற் றொழிப் பாடு ரீதியாகவளர்ச்சி என்ற பதத்துக்குள் உள்ளடக்கப் படவில்லை . .


வளர்ச்சி பல ஹார்மோன்களின் ஒருங்கினைந்த தொழிற் பாடாலே ஏற்படுகிறது.

ஒருவரின் வளர்ச்சி அவர் உட் கொள்ளும் உணவின் அளவு, பிறப்புரிமைக் காரணி(genetic factor), சிறுவயதில் ஏற்படும் மன /உள நோய்கள் என்பவற்றினால் தீர்மானிக்கப்படும்.

மனிதனின் வளர்ச்சியில் உச்சக்கட்ட வளர்ச்சி மூன்று நிலைகளில் ஏற்படும்.
அதாவது ஒரு குழந்தை உருவானதில் இருந்து வளர்ந்து கொண்டிருந்தாலும் அதன் வாழ்வின் மூன்று கட்டங்களில் வளர்ச்சி வீதமானது உச்சமாக இருக்கும்.அதுவே Growth spurt. எனப்படும்.

அதிகளவான வேகத்தில் ஒரு மனிதன் வளரும் கட்டங்கள்(growth spurt).

1. கருப்பையின் உள்ளே - கண்ணுக்குத் தெரியாத கலமாக உருவாகி சில மாதங்களிலேயே 50cm வரை குழந்தை வேகமாக வளர்ந்துவிடும்.

2.பிறந்ததிலிருந்து முதலிரு வருடங்கள் - இதற்குப் பிறகும் தொடர்ந்து குழந்தை வளர்ந்து கொண்டே இருக்குமானாலும் அதன் வளர்ச்சி வேகம் குறைவானதாகவே இருக்கும்.

3.பூப்படையும் காலத்தில் ஏற்படும் வளர்ச்சி  இருபாலாரிலும் பூப்படையும் காலத்தில் மீண்டும் வளர்ச்சிவேகம் சடுதியாக அதிகரிக்கும். குழந்தைகள் பூப்படையும் பருவத்தில் சடுதியாக உயரத்தில் அதிகரிப்பதை எல்லோரும் அனுபவத்திலேயே பார்த்திருப்போம்..

பூப்படையும் பருவத்தில் ஏற்படும் வளர்ஹ்சி அதிகரிப்போடு ஒரு மனிதனின் உயர வளர்ச்சி முற்றுப் பெற்றுவிடும். எலும்புகளின் வளர்ச்சிக்குப் பொறுப்பாக இருக்கும் அமைப்பு செயல் இழந்து எலும்போடு  கலந்துவிடுவதால் 
அதற்கப்புறம் யாராலும் உயரத்தில் வளர முடியாது.

பூப்படைதல் செயற்பாடு முடிவடைவதோடு வளர்ச்சியும் முடிவடைந்து விடும்.

பெண்களிலே பூப்படைதல் 8 வயதளவிலே ஆரம்பித்து 14 -15 வயதளவிலே முற்றுப் பெற்று விடும்.
ஆண்களிலே பூப்படைதல் 9  வயதிலே ஆரம்பித்து  15-16வயதளவில் முடிவடைந்திவிடும்.
அத்தோடு அவர்களின். வளர்ச்சியும் முடிவடைந்துவிடும்.

இதுவே பொதுவாக  சாதாரனமானவர்களில் நடைபெறும் செயற்பாடாகும்.

பி.கு- எனது முன்னைய   இந்தப் பதிவிலே பின்னூட்டம் இட்ட நண்பர்களின் சந்தேகம்  இப்போது தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
அங்கு பின்னூட்டம் இட்ட ஒரு நண்பர் மனிதன் 21 வயது வரை வளர்வதாக சுஜாத்தா சொல்லியிருப்பதாக சுட்டிக் காட்டினார். சுஜாத்தா .சரியான தகவலை பெறாமல் அல்லது தவறாக புரிந்து கொண்டு எழுதியிருப்பார்.விட்டு விடுங்கள்..

.

Tuesday, November 23, 2010

உங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம் என்பதை அறிந்துகொள்வது எப்படி ?

ஒவ்வொருவருக்கும் தன் குழந்தையின் உருவம் / அழகு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.உயரக் குறைவு நிறையப் பேரின் மனத் தாழ்வுக்கு காரணமாக இருக்கிறது.உயரம் என்பது தனியே உண்கின்ற உணவினால் மட்டும் தீர்மானிக்கப் படுவதில்லை.

உயரத்திற்கான பிறப்புரிமைக் காரணியே(genetic factor) ஒருவர் இறுதியில் எவ்வளவு உயரத்தை எட்டிப் பிடிப்பார் என்று தீர்மானிக்கிறது. இதுGrowth potential எனப்படுகிறது. இவ்வாறு பிறப்புரிமைக் காரணியால் தீர்மானிக்கப்பட்ட உயரத்தை விடஅதிகமாக  நாம் எவ்வளவுதான் உணவை உட்கொண்டாலும் நம்மால்  வளர முடியாது.

ஆனால் வளர்ச்சிக் காலத்தில் தேவையான அளவு உணவு வழங்கப் படாவிடால் பிறப்புரிமைக்  காரணியால் தீர்மானிக்கப்பட்ட உயரத்தை ஒருவர்  அடையாமலேயே அவருடைய வளர்ச்சி முற்றுப் பெற்று விடலாம்.

இதே போல் குழந்தைகளுக்கு சிறுவயதிலே கட்டுப்படுத்தப் படாத தொடர்ச்சியான நோய்கள் (ஆஸ்த்மா /நீரழிவு)போன்றவை ஏற்பட்டாலும் அவர்களால் அவர்களின் உச்சகட்ட க் உயரத்தை அடைய முடியாமல் போகும்.
அதேபோல் சிறு வயதில் மன உளைச்சலுக்கு உட்பட்டு வாழும் குழந்தைகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படலாம்.இது தவீர நேரடியாகவே ஒருவரின் வளர்ச்சியைத் தடுக்கும் நோய்கள் இருக்கின்றன.

ஒருவரின் உயரத்திற்கான பிறப்புரிமைக் காரணியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது தாய் தந்தையரின் உயரம். பிறப்பிலே உயரம் குறைந்த தாய் தந்தையருக்குப் பிறக்கும் குழந்தைகளும்உயரம் குறைவாக இருப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரும் என்று அறிய ஆவலாக இருக்கும்.

அதற்காக இந்தச் சுட்டியில் சென்று அங்கே உள்ள கணிப்பானில் உங்கள் உயங்களைக் கொடுப்பதன் மூலம்அறிந்து கொள்ளுங்கள்.அதிலே உங்கள் குழந்தை  வளரக் கூடிய சாத்தியமான உயரமே கிடைக்கும்..உங்கள் குழந்தைக்குரிய சூழல்,உணவு,மருத்துவ வசதிகளைப் பொறுத்தே அந்த உயரத்தை அடையுமா என்பது தீர்மானிக்கப்படும் .

உங்கள் சந்தேகங்களை முன் வையுங்கள் .