Thursday, December 2, 2010

மாதவிடாய் நின்றபின் ரத்தம் போவது அபாயமானது !

பதில் 

வணக்கம் டாக்டர்.எனது அம்மாவின் வயது .. .இரண்டு வருடத்திற்கு முன்பே அவருக்கு இறுதியாக மாதவிடாய் ஏற்பட்டது.இப்போது 
மீண்டும் இரண்டு நாளாக ரத்தம் போகிறது. இது நார்மலா? 

பதில்

இல்லை இது நார்மல் இல்லை.
மாதவிடாய் நின்ற பிறகு மீண்டும் ரத்தம் போவது பல காரணங்களால்  ஏற்படலாம்.அந்த வகையில் முக்கியமானது கருப்பை 
சம்பந்தப்பட்ட புற்று நோய்கள். மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு மீண்டும் இரத்தப் போக்கு ஏற்படும் பெண்கள் உடனடியாக 
வைத்தியரிடம் சென்று கருப்பை சம்பந்தப் பட்ட புற்று நோய்கள் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள  வேண்டும். 
உடனடியாக உங்கள் தாயை ஒரு வைத்தியரிடம் அழைத்துச் செல்லுங்கள். 

No comments: