Monday, September 6, 2010

படுக்கையில் விந்து வெளியேறுதல்

கேள்வி 

நான் இன்னும் திருமணமாகாத 24 வயதானவன்.எனக்கு இரவில் படுக்கும்போது சிலநாட்களில் தானாக விந்து வெளியேறி விடுகிறது .இது எதனால் ஏற்படுகின்றது ?இதனால் எனக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?

பதில்...

படுக்கையில் விந்து வெளியேறுவது என்பது சாதாரண ஒரு செயலாகும்.

ஒவ்வொரு வயதுக்கு வந்த ஆணிலும் விந்து உருவாகிக் கொண்டே இருக்கும். அதாவது பெண்களில் முட்டை உருவாகுவதைப்போல. பெண்களிலே உருவாகும் முட்டை மாதவிடாயாக வெளியே வருவதைப்போல, ஆண்களில் உருவாகும் விந்துவும் தானாக வெளியேறும்.

இது அனேகமாக படுக்கையின் போது அதுவும் அதிகாலைவேலையிலேயே அதிகமாக வெளியேறும். இதனால் நீங்கள் அச்சப்படத் தேவையில்லை .

இதுபற்றி மேலும் அறிந்துகொள்ள இந்த இடுகையை வாசிக்கவும்.

ஆணுறுப்புக்களின் காலை நேர விறைப்பும் நன்மைகளும்

 உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

 

குழந்தை வைத்திருப்பவர்களுக்காக !

கேள்வி 

எனக்கு எட்டு மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. குழந்தை பிறக்கும்போது தாய்ப்பால் இல்லாததால் புட்டி பால் கொடுத்தேன். டாக்டர் எனக்கு "lactonic " தந்தார். அதன் பிறகு பால் சுரந்தாலும் குழந்தை குடிக்க வில்லை.  தனியாக கறந்து கொஞ்சம் குடிக்க வைத்தேன். நான் நேரிடையாக தர முயற்சித்தால் குழந்தை பயங்கரமாக கத்தி அழுகிறது. சில பேர் கத்தினாலும் பரவாயில்லை, பட்டினி போட்டாவது தாய்ப்பால் குடிக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறுகிறார்கள். சிலரோ குழந்தையை கத்தவிடாதீர்கள் அதனால் இதயம் பாதிப்பு அடையும் என்கிறார்கள். 


1. நான் குழந்தை தாய்ப்பால் குடிக்க வைக்க என்ன செய்வது? வேறு வழிமுறை உள்ளதா? 
2. குழந்தை பால் குடிக்காமல் இருக்க என்ன காரணம்?
3. தற்பொழுது தாய்ப்பால் சுரக்கவில்லை. சுரக்கவைக்க ஏதேனும் வழி உள்ளதா? மேலும் எத்தனை மாதம் வரை பால் சுரக்கும்?
4. தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன உணவு முறை கடை பிடிக்க வேண்டும்?
விரைவில் நல்ல பதிலை எதிர் பார்க்கிறேன்.
மிக்க நன்றி.




பதில் 

ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. அதற்கான முக்கிய காரணம் அந்தக் காலப் பகுதியில் குழந்தைக்குத் தேவையான அனைத்துப் போசனைப் பதார்த்தங்களையும் தாய்ப்பால் வழங்குவதோடு குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியையும் தாய்ப்பால் வழங்குவதாகும்.

ஆறுமாத காலத்தின் பின் தாய்ப்பால் தனியாக போசணையை குழந்தைக்கு வழங்கப் போதுமானதல்ல அதனால் மற்றைய உணவுகளையும் குழந்தைக்கு கொடுக்கத் தொடங்க வேண்டும்.
அந்த வேளையில் தாய்ப்பாலை தொடர்ந்தவாறே மற்றைய உணவுகளையும் கொடுப்பது சிறந்தது.

இருந்தாலும் நாளாக நாளாக குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி  தானாக ஏற்படத் தொடங்கி விடும்.

உங்கள் குழந்தைக்கு வயது எட்டு மாதம்மாகி விட்டபடியால் இனி கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றில்லை.
மற்றைய உணவுகளை போதுமான அளவுக்குக் கொடுப்பதோடு தாய்ப்பால் கொடுக்க முடிந்தால் கொடுங்கள்.

அதாவது இப்போது உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பாலை  கொடுக்க முடியவில்லை என்று கவலைப் படுவதைவிடுத்து மற்றைய உணவுப் பதார்த்தங்களை கொடுப்பது நல்லது.அத்தோடு முடிந்தால் தாய்ப்பால் கொடுங்கள்.
பத்தினி போடுவதால் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் என்பதெல்லாம் மூட நம்பிக்கை.

எத்தனை வயதுவரை தாய்ப்பால் சுரக்கும் என்று கேட்டு இருந்தீர்கள் !
                                   தொடர்ச்சியாக தாய்ப்பால் கொடுத்தால் பல வருடங்கள் வரை தாய்ப்பால் சுரக்கும்.தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் தாய் நன்றாக தண்ணீர், பழ ரசங்களை குடிப்பது தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கும்.

உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்


விந்து வெளியேற்றம்


கேள்வி 

சாதாரணமாக எத்தனை வயதில்(குறைந்தது) ஆண் பிள்ளைகளுக்கு விந்து வைளியேறும்? உணர்ச்சி எப்போது ஆரமிக்கும்??
காரணம் ஒரு எனது மகனுக்கு வயது 8. ஒரு நாள் அவனை குளிப்பாட்டும்போது சிறுபிள்ளை தானே என்று ஆடை விடயத்தில் அப்படி இப்படி இருந்து விட்டேன். அவன் திடீர் என்று என் மார்பை தொட்டு விட்டான். தற்செயலான விடயம் என்று விட்டுவிட்டேன். பின்பு ஒரு நாள் ஆத்திரத்தி அடித்துவி்டென். திரும்ப அணைக்த்து ஆறுதல் படுத்தி போது பால் வேண்டும் என்று அடம் பிடித்தான். பால் குடிக்கும் போது அவன் பார்வையில் சிறுபிள்ளை தனம் இருக்கவில்லை. காற்சடடையை துவைத்த போது விந்து போன்ற திரவம் வெளியேறிஇருந்ததைக் கண்டேன்இது சாத்தியமா???

பதில் 

ஆண்களில் பொதுவாக விந்து வெளியேறத் தொடங்குவது  12-13 வயதளவில். ஆனாலும் சிலவேளை 8-9 வயதலவிலேயே விந்து வெளியேறுவது ஆரம்பிக்கலாம்.சிலவேளை 16 வயதுவரை அது பிற்போகலாம். 

உங்கள் மகனுக்கு 8வயதிலேயே விந்து வெளியேறுவதாய் சொல்கிறீர்கள்.

இது அனேகமாக சாதரணமாக இருக்கலாம்.

ஆனாலும் விந்து வெளியேறுவதை  மட்டும் வைத்து என்னால் எந்தக் கருத்துக்களையும் கூறிவிட முடியாது.

நீங்கள் ஒரு குழந்தை நல வைத்தியரை நாடுவது நல்லது என்று நினைக்கிறேன். ஏனென்றால் இளவயதிலேயே பூப்படைகின்ற precocious pubertyt எனும் நிலையில் உங்கள் மகன் இல்லை என்பதை ஒரு அனுபவம் வாய்ந்த வைத்தியர்  நேரடியாக பரிசோதிப்பதன் மூலமே கண்டறியமுடியும்.

மேலும் உங்கள் மகன் உங்களைப் பார்ப்பதில் விரசம் உள்ளதாக ஒரு தாயே உணர்கிறீர்கள் என்றால் இந்த விடயத்தை நீங்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
இதற்காக நீங்கள் ஒரு அனுபவம் வாய்ந்தவர் ஒருவரின் ஆலோசனை (மனவியல் நிபுணரின்) உடனடியாகப் பெறுவது நல்லது.