Saturday, July 31, 2010

புதுமணத் தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்

கேள்வி 
வணக்கம் சார்,

நான் திருமணம் முடித்து 3மாதங்களாகிறது.கடந்த .. மாதமும் ஆணுறைகளை பாவித்தோம். இப்போது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நானும் எனது கணவரும் எண்ணியுள்ளோம்.நாங்கள் சுகமான கர்ப்பம் ஒன்றைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

இப்படிக்கு நன்றியுடன் ,
சாந்தி லட்சுமி


பதில்

நல்லது சகோதரி ,உங்களுக்கு மட்டுமல்லாது எல்லோருக்கும் பொதுவாக கர்ப்பம் தரிக்க எதிர்பார்த்திருக்கும் பெண்கள் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றேன்.

கர்ப்பம் தரிக்க எதிர்பார்த்திருக்கும் பெண்கள் செய்ய /கடைப்பிடிக்க வேண்டியவை!

1.இயற்கையான எந்த உணவுகளையும் விருப்பப்படி சாப்பிடலாம்.
2.செயற்கையான இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல்               நல்லது (சோடா போன்றவை)
3.பழுத்த அன்னாசி சாப்பிடுவதால் கர்ப்பத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை
4.போலிக் அசிட் எனப்படும் மாத்திரையை நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் விழுங்குவது நல்லது
5.பரசிட்டமோல் மாத்திரை விழுங்குவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது
6.வேறு எந்த மாத்திரை எடுக்கும் முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும்
7.எந்தவொரு மருத்துவப் பரிசோதனைக்கு (குறிப்பாக  எக்ஸ் -ரே ) முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும்.
8.இறுதியாக மாதவிடாய் ஏற்பட்ட நாளை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் 
9.உங்களுக்கு நீரழிவு, வலிப்பு ,ஆஸ்த்மா, பிரசர் போன்ற நோய்கள் இருப்பின் கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவை சிறந்த கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். 
10.மேலே சொன்ன நோய்களுக்கு மாத்திரைகள் பாவிக்கும் நபர் என்றால் கர்ப்பம் தரிக்கும் முன்னமே வைத்தியரிடம் கூறி கர்ப்பத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
11.கர்ப்பம் தரித்தவுடன் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை நிலையத்தில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பதிவு செய்து கொள்ளவும்.

உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Tuesday, July 27, 2010

மாரடைப்பும் உடலுறவும்

இது ஒரு தொடர் இடுகை. முந்திய இடுகைகளை கீழே  உள்ள சுட்டிகள் மூலம் வாசியுங்கள்.



மாரடைப்பு - இடுகை 1
மாரடைப்பு - இடுகை  2

மாரடைப்பு - இடுகை 3

மாரடைப்பு - இடுகை 4
 


மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் உடலுறவில் ஈடுபடலாமா?

இது சம்பந்தமாக நிறையச் சந்தேகங்கள் நம் மக்களிடையே இருக்கின்றது.

மாரடைப்பு ஏற்பட்டவர்கள் உடலுறவில் ஈடுபடக்கூடாது மீறி உறவில் ஈடுபட்டால் அவர் உடலுறவின் போதே மாரடைப்பு வந்து இறந்து விடுவார் போன்ற கருத்துக்கள் நம் மக்களிடையே நிலவுகின்றன.

உண்மையில் மாரடைப்பு வந்த ஒருவர் உடலுறவில் ஈடுபடுவதற்கு எந்தத் தடையும் இல்லை.
ஆனால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு 6 கிழைமைகளின் பின்னரே உறவில் ஈடு படத் தொடங்க வேண்டும்.

சில நபர்களில் அவர்களுக்கு கொடுக்கப்படும் மாத்திரைகளின் காரணமாக உறவிலே நாட்டம் குறைந்து காணப்படலாம்.

இவ்வாறானவர்கள் உங்கள் வைத்தியரை நாடி ஆலோசனை பெற வேண்டும் (உங்கள் இஷ்டப்படி மாத்திரைகளை நிறுத்த வேண்டாம்)


உடலுறவின் போது நெஞ்சு வலி ஏற்பட்டாலோ , மூச்செடுக்க கஷ்டம், வழமைக்கு மாறான நெஞ்சு படபடப்பு போன்றவை ஏற்பட்டாலோ உங்கள் வைத்தியருக்குச்சொல்லவும்

Monday, July 26, 2010

மாரடைப்பு ஏற்பட்டவர்கள் பாவிக்க வேண்டிய மருந்துகள்

இது ஒரு தொடர் இடுகை. முந்திய இடுகைகளை கீழே  உள்ள சுட்டிகள் மூலம் வாசியுங்கள்.



மாரடைப்பு - இடுகை 1
மாரடைப்பு - இடுகை  2

மாரடைப்பு - இடுகை 3

மாரடைப்பு - இடுகை 4




மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் ஆரம்ப அபாய நிலையை தாண்டிய பின்னும் தொடர்ச்சியாக பல மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். ஏனென்றால் மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு இன்னுமொருமுறை மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

இன்னுமொருமுறை மாரடைப்பு ஏற்படுவதை தடுப்பதற்காக அவருக்கு பல மருந்துகள் கொடுக்கப்படும் .அவை தொடர்ச்சியாக பாவிக்கப் பட வேண்டு.

அந்த மருந்துகள் பற்றி சிறு அறிமுகம்...

அஸ்பிரின்(Aspirin)- மிகவும் முக்கியமான மருந்து. மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் வாழ்க்கை முழுவதும் இதை தொடர்ச்சியாக பாவிக்க வேண்டும்.இது இரவிலே 75mg அல்லது 150mg என்ற அளவிலே பாவிக்கப்படலாம் .
இந்த மாத்திரையின் பக்க விளைவாக சில வேளை கஸ்ரைர்ரிஸ்/Gastritis  (வயிற்று எரிவு) ஏற்படலாம். அவ்வாறு வயிற்று வலி ஏற்படுபவர்கள் இந்த மாத்திரை பாவிப்பதை நிறுத்தாமல் வைத்திய ஆலோசனையை பெறவேண்டும்.

குலோப்பிடோகிரல்(Clopidogrel)- இது சில மாதங்களின் பின் நிறுத்தப்படலாம். இதுவும் இரவிலே .. என்ற அளவிலே உட்கொள்ளப்பட வேண்டு.

அர்ரனலோல்(Atenalol) - இது காலையில் .. அல்லது .. என்ற அளவிலே பாவிக்கப் படலாம். ஆஸ்த்மா நோய் உள்ளவர்கள் இந்த மாத்திரையை தவிர்த்தல் வேண்டும்.

ISMN -இது காலையில் .. என்ற அளவிலே பாவிக்கப் படலாம்.இதனால் சில வேளை தலையிடி ஏற்படலாம்.

அர்ரோவாஸ்ரேர்ரின்(Atrovastatin)- இது கொலஸ்ரோலைக் குறைப்பதற்கான மாத்திரையாகும்.கொலஸ்ரோல் சாதாரண அளவிலே இருந்தாலும் கூட மாரடைப்பு ஏற்பட்டவர்கள் இந்த மாத்திரை கட்டாயமாக விழுங்க வேண்டும்.


மேலும் அவர்களுக்கு எனப்படும் நாக்கின் கீழே வைப்பதற்கான GTN மாத்திரையும் வழங்கப்படும். அந்த மாத்திரை நீங்கள் நெஞ்சு வலி ஏற்படும் போது மட்டுமே நாக்கின் கீழே  வைக்க வேண்டும்.

சில பேருக்கு லோசார்ட்டன் (Losartan) எனப்படும் மாத்திரையும் சில வேளை வழங்கப் படலாம்.

தொடரும்...

Saturday, July 24, 2010

பிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் திரவங்கள்




கேள்வி

மருத்துவருக்கு வணக்கம் ........

..............எனக்கு தெரிந்த ஒரு குடும்ப் நண்பி .வயது 53...அவருக்கு நீரளிவும் வேறு பிரச்சினைகளும்  உண்டு. கற்ப் பை சிறு பருக்கள் ( fabroids )காரணமாக் அகற்ற  பட்டது பத்துவருடங்களுக்கு முன். தற்போது அவருக்கு பெண உறுப்பின் மடிப்ப பகுதிகளில் ....வியர்வை போன்ற (  அழுக்கு) போன்ற தன்மை இருக்கிறதாம். சிறு நீர் பை கட்டுபாடற்ற தன்மையும் ( urgency )உண்டாம். பெண்ணுறுப்பின் வெளி பகுதிகளில்  சில சமயம் கடி (அரிப்பு ) இருக்கிறதாம் மருத்துவர் ஆலோசனைப்படி ......ஒருவகை களிம்பு  பாவித்தும் தீரவில்லை.  இது ஒருவகை நோயா...சுத்தமின்மை காரணமா? உடற்பரும்னானவர். சற்று பருத்த வயிறு ...மார்பகங்கள். இரு சாதாரண மகப்பேறு கண்டவர். உடற் பயிற்சி செய்ய கடினம். அதிகம் நடந்தால் மூச்சு வாங்குகிறதாம். காலில் ....விழுந்து முழங்கால் சத்திர சிகிசை பெற்றவர் ....இரு முழங்காலும் இரவில் விறைப்பு உண்டாம். சற்று நோயாளி தான். சிறு நீரக புரத அதிகரிப்புக்கு ( celcept ) என்னும் குளிகை பாவிப்பவர். ( 320 g)......பெண உறுப்பு சம்பந்தமான் பிரச்சினைக்கு அறிவுரை சொல்லவும். ஆண் வைத்தியரிடம் செல்ல மிகவும் வெட்கம் கொண்டவர். இரவில் (adult diaper )பாவிப்பவர். ஏதும் அவருக்கு அறிவுரை சொல்லுமாறு பணிவாக் கேட்கிறேன். எனக்கு ஜி மடல் மூலம்   விரும்ப தக்கது . . என் நண்பிக்கு என் மீது மிகவும் நம்பிக்கை . அதனால் மனம் திறந்து பேசுவார். உங்கள் பதிலை ஆவலுடன் எதிபார்க்கும் சகோதரி ..............(பெயர் நீக்கப் பட்டுள்ளது)


பதில்

நல்லது சகோதரி , நிறையப் பிரச்சனைகளை சொல்லிவிட்டு பெண்ணுறுப்பு சம்பந்தமான பிரச்சினைக்கு மட்டுமே விளக்கம் கேட்டு உள்ளீர்கள்.
இருந்தாலும் வேறு சில விளக்கங்களையும் நான் அளிக்க கடைமைப் பட்டுள்ளேன்.குறிப்பாக உடற்பருமன் பற்றியது. நீரழிவு  நோயுடன் அதிக உடற்பருமன் உள்ள ஒருவர் உடற்பயிற்சி செய்யும் போது மூச்சு வாங்குகிறது என்பதால் உடற்பயிர்ச்சியில் ஈடுபடாமல் இருப்பது நல்லதல்ல.

ஒரேயடியாக அதிக தூரம் நடக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொருநாளும் நடக்கும் தூரத்தை அதிகரித்து நடக்கலாம்.(முழங்காலில் என்னவிதமான சத்திர சிகிச்சை செய்யப்பட்டது என்று கூறவில்லை, இருந்தாலும் அதனால் நடப்பதற்கு எந்த தடையும்இல்லை)

மேலும் உணவுக் கட்டுப்பாடும், சரியான அளவுகளில் மாத்திரைகளை உடகொள்ளுவதும் அவசியமாகும்.

முதற்படியாக உங்கள் நண்பியை உடலைக் குறைப்பதற்கான வழிமுறைகளில் ஈடுபடச் செய்யுங்கள்.

அடுத்து பிறப்புறுப்பு சம்பந்தமான பிரச்சினைகள்...

அந்தத் திரவத்தின் தன்மையைப் பொறுத்து அது என்ன பிரச்சினை(நோய்) என்று ஓரளவுக்கு அனுமானிக்கலாம்.


உதாரணத்திற்கு பிறப்புருப்பிலே  இருந்து வெளிவரும் திரவமானது வெள்ளை நிறமாகவும் தயிர் போன்ற அமைப்பையும் கொண்டதாகவும், துர் நாற்றம் அற்றதாகவும் இருந்தால் அது Candidiasis  எனப்படும் ஒரு பங்கசுத் தொற்றினால் ஏற்பட்டிருக்கலாம்.  நீரழிவு நோயாளிகளுக்கு இந்தத் தோற்று ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

அடுத்ததாக திரவமானது light brown நிறமாகவும் துர் நாற்றம் வீசுவதாகவும் , அரிப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தால் Bacterial Vaginosis எனப்படும் பக்டீரியாவால் ஏற்படும் தொற்றாக இருக்கலாம்.

இளமஞ்சள் நிற அல்லது பச்சை நிற திரவத்தோடு அரிப்பும் ஏற்படுமானால் Trichomoniasis எனப்படும் தொற்றாக இருக்கலாம்.

இவற்றிற்கு சரியான மருந்துகளை பாவிப்பதன் மூலம் இலகுவாக தீர்வு காணப்படலாம்.



உங்கள் நண்பிக்கு நீரழிவு நோய் இருப்பதனால் முதலாவதாக சொன்ன  Candidiasis எனப்படும் பங்கசினால் ஏற்பட்டிருப்பதற்கான சந்தர்பம் அதிகம் .



அதற்காக மருந்துகளை பாவிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படலாம்.

இருந்தாலும் உங்கள் நண்பியின்  வயதைக் கருத்தில் கொள்ளும் போது உடனடியாக ஒரு பெண்ணியல் நோயியல் நிபுணரை சந்திப்பது நல்லது என நினைக்கிறேன் ஏனென்றால் சில புற்று நோய்கள் கூட மிக அரிதாக இப்படியான அறிகுறிகளை வெளிக்காட்டலாம்.

ஆண் வைத்தியரிடம் சொல்ல வெட்கம் என்றால் பெண் வைத்தியர் ஒருவரை நாடலாம்தானே!



உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.



வெட்டப்படும் பிறப்புறுப்பு(வீடியோ) - ஒரு மருத்துவத் தகவல்

கேள்வி
 
your are doing very great job in tamil society
what is the meaning of episiotomy or laceration
5 weeks back my wife normaly delivered baby that time doctor put some stiches in the vagina the wount still not heal stil have pain please advice.
from
Sadiq
Dubai
U.A.E

பதில்

ஏற்கனவே இது பற்றி நான் இட்ட இடுகையை மீள் பதிவிடுகிறேன் வாசித்து உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் நண்பரே!


வெட்டப்படும் பிறப்புறுப்பு(வீடியோ) - ஒரு மருத்துவத் தகவல்

குழந்தை பிறக்கும் போது பிறப்பு வழி சரியாக விரிந்து கொடுக்காத போது குழந்தைப் பிறப்பை இலகுவாக்குவதற்காக தாயின் பிறப்பு உறுப்பின் ஓரம்  வெட்டப்படும்.
இது எபிசியோட்டமி(Episiotomy) எனப்படும்.

இந்த செயமுறையானது அநேகமாக முதல் பிரசவத்தின் போது தேவைப்படும்.

உண்மையில் வெட்டப்படும் பகுதிக்கு விறைப்பு ஊசி போடப்பட்டே வெட்டப்பட வேண்டும் என்றாலும் எமது நாடுகளிலே எந்த விதமான ஊசிகளும் போடபபடாமலேயே வெட்டப்படுகின்றன. அவ்வாறு விறைப்பு ஊசி போடாமல் வெட்டினாலும் பிரசவ வேதனையில் இருக்கும் அந்த தாய்க்கு வெட்டப்படும் வேதனை மிகவும் குறைவாகவே உணரப்படும். ( அதாவது வெட்டப்படும் வலியை விட பிரசவ வேதனை அதிகம் என்பதால் மூளை பிரசவ வேதனையையே அதிகமாக உணரும்)

குழந்தையின் தலை பிறப்பு வழியினூடாக தெரியத் தொடங்கும் போதே பிறப்புறுப்பு வெட்டப்படும்.( பிரசவத்தின் இறுதிப் பகுதி)

குழந்தை பிறந்த பின் வெட்டிய பகுதி தைக்கப்படும்.

இதன் பின் விளைவுகளாக வெட்டிய இடத்தில் இரத்தப் போக்கு , கிருமித் தொற்று போன்றவை ஏற்படலாம் .

நேர்த்தியாக வெட்டப் பட்டு , தைக்கப் பட்ட பெண்களிலே இதனால் தழும்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை.

இனி இந்த வீடியோவைப் பாருங்கள் இன்னும் கொஞ்சம் விளங்கும்( படத்தை கிளிக்குங்கள்)...











உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.



















Friday, July 23, 2010

மார்பகக் கட்டிகள்

கேள்வி

வணக்க ஐயா,

எனது வயது 25.எனது வலது பக்க மார்பிலே சிறிய கட்டி இருக்கிறது.இதனால் எந்த நோவும் ஏற்படுவதில்லை. நண்பிகளிடம் சொன்ன போது  இது புற்று நோயாக இருக்கலாம் என்கிறார்கள். நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?மிகவும் மனம் உடைந்து போய் உள்ளேன் .தயவு செய்து உடனடியாக பதில் தாருங்கள்.

இப்படிக்கு,
(பெயர் நீக்கப் பட்டுள்ளது)

பதில்

நல்லது நண்பி. உங்கள் வயது 25என்பதால் இந்த கட்டி புற்று நோயாக இருப்பதற்கான சந்தர்ப்பம் மிக மிகக் குறைவு.அதனால் தேவை இல்லாமல் அச்சப் படுவதைத் தவிர்க்கவும்.

இந்த வயதில் ஏற்படுகின்ற கட்டிகள் அனேகமாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத fibro adenoma எனப்படும் கொழுப்புக் படிமக் கட்டிகளே.

இருந்தாலும் இதை உறுதிப் படுத்திக் கொள்ள ஒரு சத்திர சிகிச்சை நிபுணரைச் சந்தித்து உரிய சோதனைகளை செய்து கொள்ளுங்கள்.


மேலும் மார்பகத்தில் ஏற்படும் கட்டிகள் புற்று நோயாக இருக்கக் கூடிய சந்தர்ப்பங்கள்...
  1. சடுதியாக அளவில் பெரிதாகும் கட்டிகள்
  2. நோவினை ஏற்படுத்தும் கட்டிகள்
  3. கட்டியைச் சுற்றி நோவுடன் செந்நிறமாக காணப்படுதல்
  4. கட்டியுடன் காயங்கள் ஏற்படுதல்
  5. மார்பில் இருந்து திரவங்கள், இரத்தம் வெளியேறுதல்
  6. அக்குள் பகுதியில் கட்டி ஏற்படுதல்

மேலே சொன்ன அறிகுறிகள் ஏதாவது இருந்தால் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும். ஏனென்றால் அந்த கட்டி புற்று நோயாக இருப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

ஆனாலும், மார்பில் கட்டி உள்ள அனைத்துப் பெண்களும் வைத்திய ஆலோசனை பெற்று அது புற்று நோயல்ல என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுவது அவசியமாகும்.


உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Thursday, July 22, 2010

சிறுநீர்த் தொற்று

கேள்வி

டாக்டர்!
எனது வயது 35 . எனக்கு இரண்டு நாளாக சிறுநீர் கழிக்கும் போது எரிவு உள்ளதுடன் அடி வயிறும் நோகிறது. இது எதனால் ஏற்படுகிறது? நான் மருந்துகள் பா விக்க வேண்டுமா?
நன்றிகளுடன்
ரதி

பதில்

உங்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று சொல்ல வில்லை . இருந்தாலும் நீங்கள் சொல்லியவற்றை வைத்துப் பார்க்கும் போது இது சிறு நீர்த் தொற்றினால் ஏற்பட்டிருக்கலாம். அருகில் உள்ள வைத்தியரை சந்தித்து உங்கள் சிறுநீர்ப் பரிசோதனை செய்து பாருங்கள்.

சிறுநீர்த் தொற்று என்றால் அன்டிபயட்டிக்ஸ்(antibiotics) சில நாட்களுக்கு பாவிக்க வேண்டும்.

மேலும் நன்றாக நீர் அருந்தவும். உங்கள் பெண்ணுறுப்புப் பகுதியை சுத்தமாக வைத்திருங்கள்.

முக்கியமாக உங்களுக்கு நீரசிவு நோய் உள்ளதா என்று சோதித்து அறியவும்.ஏனெறால் இந்த வயதில் சிறுநீர்த் தொற்று ஏற்படுத்தும் முக்கிய காரணங்களில் நீரழிவும் ஒன்று.




உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Wednesday, July 21, 2010

நீரழிவு நோயும் உடலுறவும் !

கேள்வி


வணக்கம் ஐயா

எனக்கு   வயது. 5 வருடமாக எனக்கு நீரழிவு நோய் உள்ளது .மாத்திரைகளும் பாவித்து வருகிறேன்.
இப்போது சில மாதங்களாக எனக்கு உடலுறவு மீது நாட்டம் குறைந்து விட்டது. நண்பர் ஒருவரிடம் கேட்ட பொது இது நீரழிவு நோயால் ஏற்பட்டது என்கிறார். இது உண்மையா? தயவிசெய்து விளக்கவும்.

தயவு செய்து பெயரை வெளியிட வேண்டாம்.

பதில்


உங்களுக்கு உடலுறவின் மீது நாட்டம் குறைந்து விட்டதாக கூறினாலும் எவ்வாறான முறையில் நாட்டம் குறைந்துள்ளது என்று கூறவில்லை.
அதாவது மன ரீதியாக உடலுறவில் நாட்டம் இல்லையா? அல்லது உடலுறவில் ஆர்வம் இருந்தும் விறைப்புத் தன்மையில் பிரச்சினை உள்ளதா என்று கூறவில்லை.

ஏனென்றால் , நீண்ட காலமாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்புகள் பாதிக்கப்படுவதால் விறைப்புத் தன்மை குறையலாம்.இதனால் உடலுறவு பாதிக்கப் படலாம்.

மாறாக நீரழிவு நோயாளிகளுக்கு சாதாரண விறைப்புத் தன்மை இருக்கும் போது உடலுறவின் மீது நாட்டம் குறைவது இல்லை.

உங்களுக்கு ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைவாக இருக்குமானால் அது நீரழிவு நோயால் ஏற்பட்டதாக இருக்கலாம்.அவ்வாறு இல்லாமல் மனவியல் ரீதியாக உடலுறவின் மீது நாட்டம் குறைந்தால் ( சாதாரணமான விறைப்பு  இருக்கும் போது) அது நீரழிவால் ஏற்பட்டிருக்கக் கூடிய சந்தர்ப்பம் மிகக் குறைவு.
அதற்கான காரணமாக உங்கள் மன அழுத்தமே இருக்கும்.

எது எவ்வாறாயினும் முதற்படியாக நீங்கள் உங்கள் சீனியின் அளவைக் மிகவும் கட்டுப் பாடாக வைத்திருக்க வேண்டும். இல்லா விட்டால்  உங்கள் பிரச்சினை இன்னும் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளது.

மேலும் கீழே உள்ள சுட்டியையும் பாருங்கள்.


ஆணுறுப்புக்களின் காலை நேர விறைப்பும் நன்மைகளும்

படுக்கையில் சிறுநீர் கழித்தல்


கேள்வி

உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் சார்.

எனது 3 வயது மகன் இன்னும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறான். இது  சாதாரணமானதா?
எத்தனை வயதில் இந்த பழக்கம் இல்லாமல் போகும்?
(ஆங்கிலத்தில் வந்த கேள்வியை தமிழாக்கி உள்ளேன்)

அன்புடன்
திருமதி லீலா

பதில்

படுக்கையில் சிறுநீர் கழிப்பது Enuresis  எனப்படும்.  குழந்தைகளிலே ஆறு வயது வரை இது சாதாரண நிகழ்வாகும். ஆறு வயதைக் கடந்த பின்பும் இந்தப் பழக்கம் இருந்தால் மட்டுமே இதற்காக வைத்திய உதவியை நாட வேண்டும்.

ஆனாலும் படுகையில் சிறுநீர் கழிக்கும் பழக்கும் இல்லாமல் போன ஒரு குழந்தை மீண்டும் படுக்கையில் சிறுநீர் கழிக்குமானால் ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தையாயினும் அதற்கான மருத்துவ ஆலோசனை பெறப்பட வேண்டும்.

உதாரணத்திற்கு மூன்று வயதுக் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை விட்டு சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சிறுநீர் கழிக்கத் தொடங்குமானால் அந்தக் குழந்தையையும் வைத்தியரிடம் காட்ட வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு படுக்கையில் சிறுநீர் கழிப்பதை உருவாக்கக் கூடிய நோய் நிலைமைகலாவன ,
                  
  1. சிறுநீர் கிருமித் தோற்று
  2.  சிறுபிள்ளைகளுக்கு ஏற்படும் நீரழிவு(நீரழிவு வகை ௧)
  3. அதிகரித்த மன அழுத்தம்
  4. நரம்புப் பிரச்சினை 
உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Monday, July 19, 2010

மார்பு முளைத்த ஆண்கள்

கேள்வி

அன்புள்ள டாக்டருக்கு !

 எனக்கு வயது 28. எனக்கு இரண்டு மார்புகளும் பெண்களைப் போல பெரிதாக உள்ளது. இதை எண்ணி எனக்குப் பயமாக உள்ளது. இது எதனால் ஏற்படுகிறது, எனக்கு இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று சொல்லவும்.
நன்றி...

தயவு செய்து என் பெயரை  வெளியிட வேண்டாம்.

பதில்

நண்பரே ! இந்த இடுகையில்  உங்கள் பிரச்சினைக்கான தீர்வைப் பாருங்கள்.


உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Sunday, July 18, 2010

கன்னிப் பெண்களுக்கு ஏற்படும் ஒரு நோய் -PCOS

கேள்வி 

mam/sir,



i have pco problem mean by my LH level is very high.In my 2nd day of menstural period LH level is 15.58.

my doctor gave me Ovaral L tablet for 21 Days.

My doubt is how many months i take the treatment. Is this big problem?Please reply me.//

பதில் !

நல்லது தோழி இந்த நோய் பற்றி நான் ஏற்கனவே விரிவாக பதிவிட்டுருக்கிறேன்.அதை இந்தச் சுட்டியில் போய்ப் பாருங்கள்.

மேலும் உங்களுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் மாத்திரையின் மருத்துவ ரீதியான பெயர் தெரியவில்லை. இருந்தாலும் அனேகமாக உங்களுக்கு மாதவிடாய்ச் சிக்கல் ஏற்பட்டதால் அதை கட்டுப் படுத்தவே இந்த மாத்திரை கொடுக்கப் பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன்.அப்படியாயின் இது கர்ப்பத்தடைக்கு பயன் படுத்தும் மாத்திரையாகும். இது எவ்வளவு காலத்திற்கு பயன் படுத்தப் பட வேண்டும் என்பது உங்கள் வயது , மற்றும்  நீங்கள் கர்ப்பம் தரிப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவரா என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப் பட வேண்டும்.

உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.