Friday, June 18, 2010

உடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்

உடலுறவு என்ற உன்னதமான ஒரு நிகழ்வின் போது , சில பெண்களுக்கு வலி ஏற்படும் போது அவர்களின் இல்லற வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் அபாயம் தோன்றுகிறது.

உடலுறவின் போது பெண்கள் தன் பெண் உறுப்பிலே வலியை உணர்வது மருத்துவ ரீதியாக dysparunia எனப்படுகிறது.

இந்த வழியானது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
ஒன்று superficial dysparunia அதாவது புணர்வின் ஆரம்பத்திலேயே ஏற்படுகிற வலி, அடுத்தது deep dysparunia புணர்வின் உச்சத்தில் ஏற்படுகின்ற வலி.


இந்த வலி ஏற்பட்டாலும் வெளியில் சொல்லிக் கொள்ள முடியாமல் தங்கள் வாழ்க்கையே நாசமாக்கி விட வேண்டிய நிலையில் இருக்கும் எம் பெண்களுக்கு சில அடிப்படை அறிவினை வழங்கவே இந்த பதிவு.

இந்த வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன ?

நேர்த்தியற்ற பாலியல் உறவு. அதாவது உடலுறவில் ஈடுபடும் இருவரின் பிறப்பு உறுப்புக்களிலும் உடலுறவின் போது நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆண்களில் அவர்களின் ஆணுறுப்பு விறைப்படையும் , பெண்களிலோ அவர்களின் பெண் குறி விறைப்படைவதோடு உறுப்பின் மற்றைய பகுதிகளிலும் சில திரவங்கள் சுரக்கப்பட்டு அவளின் பெண் உறுப்பை இலகுவானதாக்கும். இந்த மாற்றங்கள் ஒரு பெண்ணின் உறுப்பிலே ஏற்படாமல் இருக்கும் போது ஆண் புணர்விலே ஈடுபட்டால் இலகு தன்மையற்ற அந்த பெண் உறுப்பிலே வலி ஏற்படும். இதற்கு முழுப் பொறுப்புமே அந்த ஆணே! அதாவது தன் துணை உடலுறவுக்குத் தயாரா என்று அறியாமலேயே அவசரப்பட்டு புணர்வில் ஈடுபடுவது அந்த பெண்ணுக்கு வலியை ஏற்படுத்தும்.

இதற்காக புணர்வில் ஈடுபடும் போது ஆண்கள் தங்கள் மனைவி அதற்குத் தயாரா என்று அறிந்து கொண்டு புணர்வில் ஈடுபட வேண்டும், அப்படி தயாராகாத போது எடுத்த எடுப்பிலே புணர்வில் ஈடுபடாமல் சற்று பொறுத்து அவள் புணர்வுக்குத் தயாராகும் வரை வேறு விதமான நடவிக்கைகள் மூலம் அவளின் உணர்ச்சிகளைத் தூண்டி அவளை தயார் படுத்திய பின் புணர்வில் ஈடுபட வேண்டும். இவ்வாறு புணர்ச்சிக்கு முன்பு நடை பெறுகின்ற விடயங்களே foreplay எனப்படுகிறது.

இது தவிர வேறு சில காரணங்களும் புணர்வின் போது வலியை ஏற்படுத்தலாம் .
அவையாவன ,
1.பெண் உறுப்பிலே ஏற்படுகின்ற தொற்றுக்கள்.
2.மாதவிடாய் நிறுத்தத்தின் போது பெண் உறுப்பிலே ஏற்படுகின்ற உலர்ந்த தன்மை.
3.உளவியல் சம்பந்தப் பட்ட பிரகுச்சனைகள் .
4.பெண் சிறு நீர் வாயில் ஏற்படும் தொற்றுக்கள்.
5.கருப்பைக்கு வெளியே ஏற்படும் மாதவிடாய்

எதோ ஒரு வகையில் பாலியல் ரீதியாக துஷ் பிரயோகம் செய்யப் பட்ட பெண்களுக்கு சில வேளைகளில் பாலியல் என்பது வாழ்க்கை முழுவது வலியானதாகவே அமைந்து விடலாம். அதாவது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உறுப்பு தன் கணவனின் புணர்தலின் போது தானாகவே எதிர்ப்பைக் காட்டலாம் அதாவது , உடலுறவுக்கு உகந்த முறையில் இசைவாகாமல் சுருங்கிய படியே இருக்கலாம். இது vaginusmus எனப்படும்.

கர்ப்பிணிகள் ஸ்கேன் செய்யலாமா?

 கேள்வி

அன்பு டாக்டருக்கு வணக்கம். எனது பெயர் காஞ்சனா நான் மொன்று மாத கர்ப்பிணி . வைத்தியர் எனக்கு ஸ்கேன் செய்ய வேண்டும் என்கிறார்.ஆனாலும் வீட்டிலேயே எல்லோரும் அதால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று மறுக்கிறார்கள். உண்மையில் ஸ்கேன் செய்வதால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படுமா?
காஞ்சனா.
மலேசியா 


பதில்

நல்லது காஞ்சனா முதலில் , ஸ்கேன் பற்றி சில அடிப்படை விடயங்களை சொல்லி பிறகு உங்கள் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்.

ஸ்கேனிங் என்பது மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்படும் முக்கியமான பரிசோதனை.

இந்த ஸ்கேனிங் மூலம் உடலின் உட்புற உறுப்புக்களில் நோய்கள் மூலம் ஏற்படும் மாற்றங்களை வெளியில் இருந்தே அறிந்து கொள்ள முடியும்.

ஸ்கேனிங் பலமுறைகள் மூலம் செய்யப்படலாம்.

 அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்(ultra sound scanning)-  
இதிலே சத்த அலைகள் பயன்படுத்தப்படும். அதாவது சத்த அலைகள் செலுத்தப்பட்டு அவை உள் உறுப்புக்களில் பட்டு தெறித்து வருவதை பொறுத்து நோய்கள்இனங்கானப்படலாம்.

இதிலே வெறும் சத்த அலைகளே பயன்படுத்தப் படுவதால் இவை உடலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
மேலும் கர்ப்பினிகளிலே குழந்தையின் நிலைமையை அறிந்து கொள்ளவும் இந்த ஸ்கேனிங் பயன்படுத்தப்படும்.இதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

CT  ஸ்கேனிங் - 
இது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்கை விட அதிக தகவல்களைப் தரக் கூடியது . ஆனாலும் இதிலே எக்ஸ்ரே கதிர்கள் பயன் படுத்தப் படுவதால் இவை பிற்காலத்திலே புற்று நோய்களை ஏற்படுத்தும் அளவுக்கு பயங்கரமானவை. அதனால் தேவை இல்லாமல் இந்த ஸ்கேன் செய்யப் படக்கூடாது.
கர்ப்ப காலத்திலேயே இது முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டும்.


 MRI ஸ்கேனிங் - 
இதுவும் CT ஸ்கேன் போல் சிறந்தது. மேலும் இதிலே காந்தப் புல அலைகள் பயன்படுத்துவதால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஆனாலும் இது சற்று செலவு  கூடியது .


இந்த மூன்றிலும் கர்ப்ப காலத்தில் செய்யப்படும் ஸ்கேன்  அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்(ultra sound scanning)  ஆகும் .இதனால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 


காஞ்சனா இப்போ உங்க்கள் சந்தேகம் தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வதால் உங்கள் குழந்தைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. பயப்படவேண்டியதில்லை.


பி கு-

உங்கள் சந்தேகங்களை yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
மற்றவர்களுக்கும் பயனளிக்க வேண்டுமென்றால் வாக்களித்துச் செல்லுங்கள்...


Monday, June 14, 2010

கர்ப்பம் கலைக்கும் உணவுகள்....



கேள்வி

டாக்டர் , நான் இப்போது கர்ப்பம் தரித்து ஒரு மாதம் ஆகிறது. எனது வீட்டிலேயே என்னை பப்பாசி, தக்காளி என்று நிறையச் சாப்பாடுகளை சாப்பிட வேண்டாம் என்று தடை போடுகிறார்கள்.சாப்பாடுகளால் என் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? தயவுசெய்துவிளக்கவும்.

பெயர்குறிப்பிட விரும்பாத பெண்.

பதில் 

 நல்லது தோழி இதுவெல்லாம் நம் சமூகத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகள். நன்கு கனிந்த எந்தப் பழமும் நீங்கள் பயமில்லாமல் சாப்பிடலாம்.
அதே போல் எந்த மரக்கறி வகைகளையும், இறைச்சிகளையும், மீன்  முட்டை போன்றவை கூட பயமில்லாமல் சாப்பிடலாம்.

செயற்கையான இரசாயனப் பதார்த்தம் கொண்ட சந்தையில் கிடைக்கும் உணவுகளை வேண்டுமானால் தவிர்க்கலாம்.
செயற்கையான உணவுகளில் நமக்குத் தெரியாமல் இருக்கும் இரசாயனப் பதார்த்தங்கள் சிலவேலைகளை குழந்தையைப் பாதிக்கலாம்.

இயற்கையான உணவுகள எதுவேண்டுமானாலும் பயமில்லாமல் உண்ணலாம்.
மரக்கறிகளை சமைக்கும் முன் நன்றாக அலசிக் கழுவிக்கொள்ள மறக்க வேண்டாம்.

அது தவிர முழுகுதல், ஊடுதல் படி ஏறுதல் போன்றவற்றாலும் கர்ப்பம் களையும் என்பதும் வெறும் மூட நம்பிக்கையே.

Monday, June 14, 2010

மாரடைப்பு

மாரடைப்பு - இடுகை 1
மாரடைப்பு - இடுகை  2

மாரடைப்பு - இடுகை 3

மாரடைப்பினால் ஏற்படுகின்ற நெஞ்சு வலியின் இயல்புகளை மேலே உள்ள இடுகைகளினை வாசிப்பதன் மூலம் அறிந்து கொள்ளுங்கள் .

உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கோ நெஞ்சு வலி ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

முதலில் பதட்டமடையாமல் அவரின் நெஞ்சுவலியின் இயல்புகளை கேட்டறிந்து கொள்ளுங்கள்.

அது மாரடைப்பினால் ஏற்படும் வலியின் இயல்புகளைக் கொண்டிருந்தால் , அந்த நபருக்கு ஆறுதலாக மனத் தைரியம் கொடுப்பதோடு முடிந்தால் ஒரு அஸ்பிரின்(Aspirin)  மாத்திரையை விழுங்கக் கொடுத்து உடனடியாக வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

அந்த நேரத்தில் வேறு எந்த ஒரு காரணத்திற்காகவும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுவதை பிற்போட வேண்டாம்.

வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றவுடன் வைத்தியர் அது மாரடைப்பினால் ஏற்பட்ட வலி என்று சந்தேகித்தால் உடனடியாக மாரடைப்பின் தீவிரத்தைக் குறைப்பதற்கான சில மாத்திரைகள் மற்றும் ஒட்சிசன் என்பவற்றைக் கொடுத்த பின்பே அது மாரடைப்பு என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளுவார்.

மாரடைப்பு ஏற்பட்டதை உறுதிப் படுத்திக் கொள்ள மேற்கொள்ளப்படும் சில அடிப்படை பரிசோதனைகலாவன,
1..ஈ சி ஜி .(ECG)
2. எக்கோ பரிசோதனை.(Echo)
3.இரத்தத்தில் விடப்படும் சில இதயப் பதார்த்தங்களின் அளவுகள்.(Cardiac marker)

இது தவிர கொலஸ்ரோல் அளவு(Lipid profile), இரத்தத்தின் சீனியின் அளவு(bloodsugar level), இரத்தத்தில் ஹீமோ குலோபினின் அளவு(Hb) , சிறுநீரகத் தொழிற் பாட்டைக் குறிக்கும் பதார்த்தத்தின் அளவுகள்(Renal Function test) போன்றவையும்பரிசோதிக்கப்படும்.



தொடரும்...



Sunday, June 13, 2010

கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள வேண்டிய காலம்..

கேள்வி

டாக்டர்  ! எனக்கு கல்யாணமாகி மூன்று மாதம் . நாங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறோம். எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை கிடைக்க சந்தர்ப்பம் அதிகம்?

 திருமதி கணேசன் .

பதில்


நல்லது !

இது நிறையத் தம்பதியர்களுக்கு இருக்கின்ற சந்தேகமாகும். இது குழப்பிக் கொள்ள வேண்டிய விடயமே இல்லை. மிகவும் இலகுவாக நீங்களே உங்களுக்கு கருத்தரிக்கக் கூடிய காலத்தை அறிந்து கொள்ள முடியும்.

இதற்காக ஒரு பெண் தன மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அநேகமான பெண்களிலே மாதவிடாய்  ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட  காலப்பகுதிகளிலே ஏற்படும்.

ஒரு மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து அண்ணளவாக பதினாலாவது நாள் அந்தப் பெண்ணில்  முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணித்தியாலத்திற்குள் ஆணின் விந்தைச் சந்தித்தால் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகும்.

ஆணின் விந்தானது பெண்ணின் யோனியினுள் உட்செளுத்தப்பட்டு 72 மணித்தியாலங்கள் வரை உயிரோடு இருக்கும்(கருக்கட்டக் கூடிய நிலையில்).

ஆக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்த காலம் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து பதினோராவது நாளுக்கும்  பதினைந்தாவது நாளுக்கும் இடைப்பட்ட காலமாகும்.

அதாவது நீங்கள் மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.

பி கு-

உங்கள் சந்தேகங்களை yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
மற்றவர்களுக்கும் பயனளிக்க வேண்டுமென்றால் வாக்களித்துச் செல்லுங்கள்...

Sunday, June 13, 2010

கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள வேண்டிய காலம்..

கேள்வி

டாக்டர்  ! எனக்கு கல்யாணமாகி மூன்று மாதம் . நாங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறோம். எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை கிடைக்க சந்தர்ப்பம் அதிகம்?

 திருமதி கணேசன் .

பதில்


நல்லது !

இது நிறையத் தம்பதியர்களுக்கு இருக்கின்ற சந்தேகமாகும். இது குழப்பிக் கொள்ள வேண்டிய விடயமே இல்லை. மிகவும் இலகுவாக நீங்களே உங்களுக்கு கருத்தரிக்கக் கூடிய காலத்தை அறிந்து கொள்ள முடியும்.

இதற்காக ஒரு பெண் தன மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அநேகமான பெண்களிலே மாதவிடாய்  ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட  காலப்பகுதிகளிலே ஏற்படும்.

ஒரு மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து அண்ணளவாக பதினாலாவது நாள் அந்தப் பெண்ணில்  முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணித்தியாலத்திற்குள் ஆணின் விந்தைச் சந்தித்தால் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகும்.

ஆணின் விந்தானது பெண்ணின் யோனியினுள் உட்செளுத்தப்பட்டு 72 மணித்தியாலங்கள் வரை உயிரோடு இருக்கும்(கருக்கட்டக் கூடிய நிலையில்).

ஆக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்த காலம் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து பதினோராவது நாளுக்கும்  பதினைந்தாவது நாளுக்கும் இடைப்பட்ட காலமாகும்.

அதாவது நீங்கள் மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.

பி கு-

உங்கள் சந்தேகங்களை yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
மற்றவர்களுக்கும் பயனளிக்க வேண்டுமென்றால் வாக்களித்துச் செல்லுங்கள்...



Friday, June 11, 2010

உடலுறவின் படிநிலைகள்

உடலுறவு ஆங்கிலத்திலே COITUS அல்லது INTERCOURSE எனப்படும். ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் பொது அவர்கள் நான்கு நிலைகளினூடாக பயணித்து உச்ச நிலையை(climax) அடைகிறார்கள.

அவையாவன,

EXCITEMENT PHASE- இந்த நிலையில்தான் ஒருவருக்கு உடலுறவு மீதான எண்ணம் அல்லது ஆசை தொடங்கி அதற்கேற்றவாறு அவரின் உடல் தயாராகிறது. ஆண்களில் ஆணுறுப்பு விறைப்படையத் தொடங்கும். பெண்களில் பெண் குறி விறைப்படையும், பெண் உறுப்பிலே திரவத் தன்மையான பதார்த்தம் சுரந்து ஈர நிலையை உருவாக்கும்.மேலும் பெண் மார்பகத்திலும் சற்று விறைப்புத் தன்மை ஏற்படும்.


PLETEAU PHASE- இந்த நிலையில் மேலே சொன்ன எல்லாமே மேலும் தீவிரம் அடையும். ஆண்களில் ஆணுறுப்பு முழுமையான விறைப்புத் தன்மையை அடையும். பெண்களில் அதிகரித்த திரவத்தன்மை வழுக்கும் நிலையை உருவாக்கும் .

ORGASM- இந்த நிலைதான் உச்ச நிலை எனப்படுகிறது. குறிப்பாக ஆண்கள் பெண்களை விட சற்று முன்பே உச்ச நிலையை அடைந்து விடுவார்கள்.

RESOLUTION -இப்போது முந்திய நிலைக்கு திரும்புவார்கள். பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் மீண்டும் முந்திய நிலைக்கு திரும்பாமலே உச்ச நிலையை(ORGASM) மீண்டும் அனுபவிக்கும் ஆற்றல் இருக்கிறது. ஆனால் ஆண்கள் உச்சம் ஒருதடவை அடைந்தால் மீண்டும் அதை அடைவதற்கு சிறு இடைவெளி தேவை.

பொதுவாக உடலுறவின் போது ஆண்கள் முந்தி உச்ச நிலை அடைவதாலும் மீண்டும் அவர் அந்த நிலையை அடைவதற்கு சில இடைவெளி தேவைப்படுவதாலும்  சில வேளைகளில் பெண்கள் உச்ச நிலை அடையாமலேயே உடலுறவு முடிந்து போகிறது.


அதாவது உடலரவின் போது ஆண் சுக்கிலப் பாயம் எனப்படும் விந்துகளைக் கொண்ட திரவம் வெளியேறியவுடன் அவர்கள் விறைப்புத் தன்மையை இழந்து உடலுறவுக்கு முந்திய நிலையை அடைந்துவிடுவார்கள். அவர்கள் மீண்டும் விறைப்புத் தன்மையை பெற்று உறவிலே ஈடுபட சற்று நேரம் ஆகலாம். இந்த நேர இடைவெளி ஆணுக்கு ஆண் வேறுபாடும்.

ஆனால் பெண்கள் உச்ச நிலை அடைந்த பின்பும் அவர்கள் உடலுறவுக்கு முந்திய நிலையை அடைந்துவிடுவதில்லை , தொடர்ந்து உடலுறவின் படிமுறைகளிலே உணர்ச்சிவசப்பட்ட இரண்டாம் நிலையிலே இருப்பார்கள்.



சுயஇன்பம்,சிறுநீரகக் கல்

மதிப்பிற்குரிய டாக்டர் அவர்களுக்கு, என் பணிவான
வணக்கம்.தங்களின் பயனுள்ள பாலியல் ஆலோசனைக்கு மிக்க நன்றி! அதுபோல் என்னுடைய சில சந்தேகங்களையும் தீர்த்து வைக்க வேண்டுகிறேன்..
1.அடிக்கடி சுய இன்பம் செய்வதால் சிறுநீரகம்,கல்லீரல் பாதிக்கப்படுமா?
2.அதிக உடல் சூட்டின் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்படுமா? 
நான் பணிபுரியும் இடம் மிகவும் சூடாக இருக்கும் அதுவும் கோடை காலத்தில் கேட்கவே வேண்டாம் இதனால் எனக்கு அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது. ஆனால் வீட்டுக்கு வந்துவிட்டால் 
வலி குறைந்து விடுகிறது.இது எதனால் ஏற்படுகிறது..தாங்கள் இதற்கு ஒரு நல்ல ஆலோசனை கூற வேண்டும்.
  இப்படிக்கு,
   பாண்டி,//

1.அடிக்கடி சுய இன்பம் செய்வதால் சிறுநீரகம்,கல்லீரல் பாதிக்கப்படுமா?
 
பதில்

இல்லை .
சுய இன்பத்தின் காரணமாக எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று பலமுறை பதிவிட்டுள்ளேன்.அவற்றை வாசித்து உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.அவற்றிற்கான சுட்டிகள்.

சுய இன்பம் சில சந்தேகங்களும் பதில்களும் !

சுய இன்பம் (MASTUBATION)

 

 2.அதிக உடல் சூட்டின் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்படுமா?

பதில்
சூடான பிரதேசத்தில் வேலை செய்பவர்களுக்கு அந்தச் வெப்பம்  காரணமாக சிறு நீரகம் நேரடியாகப் பாதிக்கப்பட சந்தர்ப்பம் இல்லை. ஆனாலும் சூடான சூழல் காரணமாக உடலில் இருந்து அதிக நீர் வெளியேறுவதால் அவர்களுக்கு சிறுநீர் உருவாக்கம் குறைந்து சிறுநீர்க் கல் உருவாகலாம்.
இந்தக் கல் நீண்ட நாட்களுக்கு இருக்கும் பட்சத்தில் அவர்களின் சிறுநீரகம் பாதிக்கப் படலாம். ஆனாலும் தேவையான அளவுக்கு தண்ணீர் அருந்துவதன் மூலம் சிறுநீர் கல் உருவாகுவதை தவிர்க்கலாம். ஆகவே சற்று சூடான பகுதியில் வேலை செய்யும் நண்பர்களே தாகத்தோடு வேலை செய்யாமல் போதியளவுக்கு நீர் அருந்துங்கள்.

மேலும் சில உணவுப் பழக்கங்கள் கல் உருவாகுவதை மேலும் அதிகரிக்கலாம். தக்காளி, லீக்ஸ் , போஞ்சி, பியர், சொக்கலேட் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்ப்பதும்நல்லது.

     

உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும் .

Tuesday, June 1, 2010

வயாக்கிரா பற்றி சில தகவல்கள் !

கேள்வி

மதுரை சரவணன் //
நல்ல பாலியல் கருத்துக்களை கூறும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

என் நண்பர் உடலுறவை நீடிக்க , மேன் பவர் 50 கிராம் பயன்படுத்துகிறார். இது இதய நோய் உண்டாக்கும் என்றால் இல்லை என்கிறார். தங்கள் மேலான கருத்து கூறவும் ,என் நண்பணுக்கு எடுத்து சொல்ல உதவும்.//


பதில்


நல்லது சரவணன்.
உங்கள் நண்பன் பாவிக்கும் மாத்திரையின் பெயர் மேன் பவர் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். மேன் பவர் என்பது கம்பனி பெயராக உள்ளது (Brand name). அதாவது விஞ்ஞான ரீதியான பெயரை நீங்கள் குறிப்பிடவில்லை இருந்தாலும் அவர் 50mg எனும் அளவிலே பாவிக்கிறார் என்பதை வைத்துக் கொண்டு பார்க்கும் போது இது சில்டனபில் (Sildanafil) எனப்படும் மாத்திரை என்றே நினைக்கிறேன். இந்த மாத்திரை வேறு ஒன்றுமில்லை வயாக்கிரா எனப்படும் மாத்திரையாகும். இந்த மாத்திரை வேறு ஒரு கம்பனியால் உற்பத்தி செய்யப் பட்டு விற்கப்படும் போது மேன் பவர் என்று விற்கப்படுகிறது .

சரி இந்த வயாக்கிரா பற்றி நான் ஏற்கனவே ஒரு இடுகையில் பதிவு இட்டு இருக்கிறேன் .

உங்களுக்காக அந்த இடுகையை  மீள் பதிவு செய்கிறேன்.
நன்றி




வயாகரா பாவிப்பவர்களுக்காகவும் பாவிக்க நினைப்பவர்களுக்காகவும்
வயாகரா எனப்படுவது உண்மையில் சில்டநேபில் (SILDANAFIL) என்ற பதார்த்தத்தைக் கொண்ட மாத்திரையின் உற்பத்திப் பெயராகும்.
இது ஆணுறுப்பில் ரத்தத்தை தேக்கி வைப்பதன் மூலம் அதிக நேரம் விறைப்புத் தன்மையை பேண உதவுகிறது.
வயாக்ரா ஆனது 25mg, 50mg, 100mg என்ற அளவுகளிலே கிடைக்கப் படுகிறது.

வயாகரா மாத்திரை உட்கொண்டு அரை மணிநேரத்திலேயே ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு உயர் அளவை அடைந்து விடும். இதனால்தான் இந்த மாத்திரை உடலுறவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் உட்கொள்ளப் பட வேண்டும் என அறிவுறுத்தப் படுகிறது.

ஆனால் இந்த மாத்திரை கொழுப்பு நிறைந்த உணவுகளோடு உட்கொள்ளப் பட்டால் இது உறிஞ்சப்பட்டு ரத்தத்தை அடைவது தாமதமாகும்.

இதய நோயாளிகள் , குறிப்பாக அவர்கள் அவர்களுடைய இதய நோய்க்கு மாத்திரைகள் பாவிப்பவர்களேயானால் வைத்தியரின் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை உட்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும்.

இதய நோய்க்கு உட்கொள்ளும் சில மாத்திரைகளோடு வயாகரா உட்கொள்ளப் பட்டால் உயிருக்கே ஆபத்தாகலாம். குறிப்பாக ISMN /ISDN எனப்படும் மாத்திர வகை இருதய நோய்க்கு கொடுக்கப்படும் ஒரு மாத்திரையாகும் இதனோடு வயாகரா உட்கொள்ளப்பட்டால் அவர்களின் ரத்த அமுக்கம் குறைந்து உயிருக்கு ஆபத்தாகலாம்.


வயகரா மாத்திரை உட்கொள்ளுபவர்கள் கீழ்வரும் பக்க விளைவுகளைக் கூட அனுபவிக்கலாம்,

  1. தலையிடி
  2. வயிற்று நோ
  3. வாந்தி
  4. வாந்தி வரும் உணர்வு
  5. வயிற்றோட்டம்
  6. பச்சை மற்றும் நீல நிறங்களை வேறுபிரிக்க முடியாமை

போன்ற பக்க விளைவுகளும் ஏற்படலாம்.
பி.கு- மேன் பவர் எனப்படுவது வயாக்கிரா எனப்படும் மாத்திரை என்ற ஒரு அனுமானத்திலே இந்தப் பதிலை அளித்துள்ளேன். அவ்வாறு இல்லாமல் அது வேறு மாத்திரையாக இருக்குமானால் அதன் விஞ்ஞானப் பெயரை சொல்லுங்கள் தெளிவாக விளக்கம் அளிக்கிறேன்.

உங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள் பதில் அளிக்கிறேன்.