Friday, December 3, 2010

டெங்குக் காய்ச்சல்

டெங்குக் காய்ச்சலானது ஒருவகை  வைரசினால் ஏற்படுகின்றது. இது
 Aedes  aegypti எனப்படும் நுளம்பினால் நோய் ஏற்பட்ட ஒருவரில் இருந்து இன்னொருவருக்குப் தோற்றும். அதாவது நோயாளியை கடித்த நுளம்பு உங்களைக் கடிப்பதன் மூலம் மட்டுமே இது உங்களுக்குத் தொற்றும்.அது தவிர வேறு எந்த முறைகளாலும் அது தொற்றினை ஏற்படுத்துவதில்லை.


அதனால் நோயாளியை உங்களில் இருந்து பிரித்து வைக்க வேண்டியதில்லை.
உங்களையும் நோயாளியையும் நுளம்புக் கடியில் இருந்து பாதுகாப்பதன் மூலம் இந்த நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.

டெங்குக் காய்ச்சல் பல்வேறு தீவிர நிலைமைகளைக் கொண்டது

1.சாதாரண காய்ச்சல்(uncomplicated dengue fever)
இதன் போது குருதியில் உள்ள platelet எனப்படும் குருதிச் சிருதட்டுக்களின் எண்ணிக்கை குறையும். சாதாரணமாக இது 150000 என்ற அளவிற்கு மேலே இருக்கும். தேங்கு நோயாளிகளில் இது படிப்படியாக குறையலாம். இது அளவுக்கதிகமாக குறைவதால் குருதிப் பெருக்குஏற்பட்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லும்.
அநேகமானவ்ர்களில் குறைந்த குருதிச் சிறுதட்டுக்கள் அடுத்த கட்டத்திற்கு போகும் முன்னமே மீண்டும் அதிகரித்து சாதாரண நிலையை அடைந்து நோய் 
சுகமாகி விடும் பொதுவாக காய்ச்சல் மறைந்த பின்னும் குருதிச் சிருதட்டுகள் குறைவதால் காய்ச்சல் விட்ட பிறகும் சில நாட்களுக்கு வைத்திய சாலையில் இருக்க வேண்டி வரலாம். 
.

2.குருதிப் பெருக்குக் காய்ச்சல்(Dengue hemorragic fever)

இது குருதிச் சிறுதட்டுக்கள் குறைவதால் குருதி இரத்தக் குழாய்களில் இருந்து வெளியேறுவதால் ஏற்படும். இதன் போது குருதி இருமும் போது , சிறுநீர் கழிக்கும் போது அல்லது பெண்ணுறுப்பு வழியே வெளியேறலாம். அல்லது வயிற்றுக் குழி ,நெஞ்சுக் குழி மூளை போன்ற வெளித்தெரியாத இரத்தப் பெருக்காக இருக்கலாம்.

3.இறுதிநிலை டெங்கு(dengue shock syndrom)
இது அளவுக்கதிகமான குருதியில் உள்ள திரவங்கள் வெளியேறுவதால் குருதி செறிவாகுவதுடன் மொத்தக் குருதியின் அளவும் 
குறைவதால் குருதி அமுக்கம் குறைவதால் ஏற்படும். இந்த நிலை மிகவும் தீவிரமானதும் இறப்பை ஏற்படுத்தக் கூடியதும்.
இவர்களுக்கு அதிதீவிர மருத்துவக் கண்காணிப்புத் தேவை.

டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகள்

  1. குளிரான உணர்வுடன் காய்ச்சல்
  2. தலையிடி
  3. உடம்பு நோ
  4. கண்களின் பின்னால்/கண்களை அசைக்கும் போது வலி
  5. முகம் வெட்கத்தில் சிவந்தது போன்று மாறுதல் 

மேற்சொன்னவை சாதாரண டெங்குக் காய்ச்சலின் அறிகுறியாகும். 
அப்போது ஒருவரின் ரத்ததத்தில் குருதிச் சிறுதட்டுக்கள் அளக்கப்பட வேண்டும். அது 100000 என்ற அளவை விடக் குறையும் போது 
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

அடுத்த கட்டமான குருதிப் பெருக்கு காய்ச்சல் நிலையை அடையும் அனைவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

இந்த நிலையின் அறிகுறி ஏதோ ஒரு வகையில் உடம்பிலிருந்து இரத்தம் வெளியேறுதல்.(இருமும் போது,சிறுநீருடன், மாதவிடாயுடன் அளவுக் -கதிகமான இரத்தப்போக்கு,முரசுகளில் இருந்து இரத்தம் வெளியேறுதல்)

ஆகவே காய்ச்சலோடு ஏதாவது பகுதியில் இருந்து இரத்தம் வெளியேறினால் உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்லுங்கள்.

மருத்துவம் 

இது வைரசினால் ஏற்படுகின்ற காய்ச்சல் என்ற படியால்  இதை சுகப்படுத்தக் கூடிய மருந்துகள் இல்லை.ஆனாலும் இது தானாக சுகமாகக் கூடிய நோயாகும்.

குருதிப் பெருக்கு ஏற்படுபவர்காலிலே தற்காலிகமாக குருதிச் சிறுதட்டுக்கள்(Platelets ) ஏற்றலாம்.

மற்றும் மிகவும் முக்கியமாக இவர்களுக்கு போதியளவு நீராகாரம் வழங்குவதன் மூலம் இந்த நோயின் தீவிரம் குறைக்கப் படலாம்.காய்ச்சல் ஏற்பட்ட அனைவரும் போதியளவு நீராகாரம் அருந்த வேண்டியது கட்டாயமாகும். அளவுக்கதிகமான வாந்தி மூலம் நீர் அருந்த முடியாதவர்களுக்கு செலைன் (Saline)மூலம் நீர் வழங்கப்
படவேண்டும்.

அதுதவீர காய்ச்சலைக் குறைக்க பரசிட்டமோல் பாவிக்கப்படலாம்.
காய்ச்சல் ஏற்பட்ட எவரும் NSIAD எனப்படும் வகையச் சேர்ந்த அஸ்பிரின்(Aspirin), டைக்குளோ போனிக் சோடியம்(Diclofenac), புருபன்(Brufen) , மேபினாமிக் 
அசிட் (Mefinaamic acid) போன்ற மருந்துகளை வைத்தியரின் அனுமதி இன்றி உட்கொள்ள கூடாது.டெங்குக் காய்ச்சலின் தீவிரத்தை அவை 
அதிகரித்து விடலாம்.

2 comments:

ankithavarma said...

டெங்கு காய்ச்சல் உலகின் வளர்ந்த நாடுகளில் பரவுதல் நின்ற விட்ட நிலையில், இந்தியா போன்ற நாடுகளில் இன்னமும் பரவுதலின் காரணம் என்ன?

பதிவு அருமை. நல்ல விசயங்களை அறிந்துக் கொண்டேன்

துமிழ் said...

வளர்ந்த நாடுகளில் நுளம்புத் தொல்லை இல்லை இதனால் தேங்கு பர்வவுவதில்லை. நாமும் நுளும்புப் பெருக்கத்தை தவீர்த்து விட்டால்
டெங்கு காய்ச்சலை இலகுவாக இல்லாமல் செய்து விடலாம்.